tag:blogger.com,1999:blog-56476782024-03-07T11:14:27.052+05:30Shangri - LaAnything under the sun - in Thamizh!Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.comBlogger141125tag:blogger.com,1999:blog-5647678.post-76051666831418895122011-04-14T08:54:00.002+05:302011-04-14T08:57:26.025+05:30மறுபடியும் ...நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு ப்ளாக்கர் பக்கம் வந்து பார்த்தால், "கடைசியாக 2007இல் இந்தப் பக்கம் வந்தீர்கள்" என்று பயமுறுத்துகிறார்கள். அவ்வளவு நாட்களா ஆகிவிட்டன? அடேங்கப்பா. <div><br /></div><div>இனி மீண்டும் வருவேன். அவ்வப்போது. </div>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5647678.post-10475856081644799062007-11-23T19:43:00.000+05:302008-12-10T03:54:25.037+05:30<strong>பூனைக்குட்டி சகாப்தம் - 2</strong><br /><br /><br /><br />பல வருடங்களுக்கு முன்பு பூனை வளர்த்த கதையை விஸ்தாரமாக எழுதியிருந்தேன். இப்பொழுது மீண்டும் சில மாதங்களாக இரு feline creatures எங்கள் இல்லத்தையே இரண்டு படுத்திக்கொண்டிருக்கின்றன.<br /><br /><br />ஜெர்சி, ட்ரிசி (திரிபுரசுந்தரி) அகிய இவை இரண்டைப் பற்றிய ஒரு சிறிய வாழ்க்கைக் குறிப்பு (பெயரெல்லாம் அமர்க்களமாய்த்தான் வைத்தோம் - எப்படிக்கூப்பிட்டாலும் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்):<br /><br /><br /><br /><br /><br />வீட்டுச் சிலிண்டரின் கதகதப்பில் பெற்றுப்போட்டுவிட்டு அம்போவென்று அம்மா abscond ஆனபோது:<br /><br /><br /><br /><br /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5136048954420276978" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9zECwqq2_8HZ8Lbmu7TN46zlMQCumKd-RCuTHTjqNA2jPzYoIoqoemHbNfcdTQ3vEo3cjIRklu4HBGSC5haw9f1R35TEI-1H7yP2BJ-NLQA6Q3Ftck-SDtm-5iBuRkH0ud9lt/s320/Smallest_kittens.JPG" border="0" /><br /><br /><br /><br /><p>ஆகா, இரு சிறு ஜீவன்களுக்கு வாழ்வுகொடுத்துவிட்டுத்தான் போவோமே என்று மிகப் பெருந்தன்மையோடு இங்க் ஃபில்லர் சகிதமாக ஏகமாக ஆரோக்யா பால் கொடுத்ததில் மடியைவிட்டு இறங்கமாட்டேன் என்று அடம் ...</p><br /><p><img id="BLOGGER_PHOTO_ID_5136048958715244290" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDkMJdYPto-A8LwjfO3wrTHTfNgnXZZmIz6Z77JI7XgqLK5SjYwFx6M2F6eR7S3EcnhMYpNmVlWocfRxcbYk5w5-uXnlyDL_h70VMaJflMBZV9KTduNUMaS6cjwfoVupFVD0Fk/s320/Small_Kittens.JPG" border="0" /></p><br /><p>கொஞ்சம் விவரமறிந்து பேப்பரெல்லாம் கிழித்து, லேப்டாப் மேலெல்லாம் குதிக்க அரம்பித்தவுடன், நாங்கள் உட்காரும் நாற்காலியையெல்லாம் அன்னாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது ...<br /></p><br /><img id="BLOGGER_PHOTO_ID_5136048958715244306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcrOsbZEdAyN_SxN62PJ5ZPIC8ncQt42sPyRS0pQpZwxZj3lpSfg8Qv0CD6mQGq40Psya7TQ9xySAs9wkHV7I50wje_Crlh3ZyWw7kldYSKn8KJ2KKtTWZ77JTQxDpzTiGtdvA/s320/Larger_Kittens.JPG" border="0" /><br /><br /><p></p><br /><p>நிலைமை எவ்வளவு முற்றிவிட்டதென்றால், ஒரு ஃபோட்டோ எடுத்தால் கூட பயங்கரமாக போஸெல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். </p><p><img id="BLOGGER_PHOTO_ID_5136051016004579138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1Tl1NUhql1CsbqBjhpD_dztNScb_8f_I2HeOMcyoNIe5YAk4mFf4E_BUpnOfAQEi4Eqha0KTdG3wJwP52dkfDl3DG6SShYyMj-1ePr2oTWt9_RQraz4o8N2hs5cI9y2lb99Ac/s320/Grinning_Jersey.JPG" border="0" /></p><p>அரசிளங்குமரிகள் வளர்ந்துவிட்டார்கள் - ஆனந்தப் (horrifying) பெருமூச்சு. கோட்டான் பார்வையைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. Any ideas?<br /></p><p><img id="BLOGGER_PHOTO_ID_5136048967305178930" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD4PvtYakqA50eXE7oiiOcjvJcLVcpV8cqHBkZx_A1sd4Eqj-YzfuQn4GGbuazLr1-zWwpIs06woOB6egPuK5MmjLA87pjTJQgJuQphByFLxcHhNNg-5xqen6_HUsyWQte23uT/s320/Biggest.JPG" border="0" /></p>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5647678.post-28644536930083123442007-11-20T10:59:00.000+05:302007-11-20T12:30:56.836+05:30<span style="font-size:130%;"><strong><u>ஓமிஸ்வாமியும் மசாலாக்கரண்டியும்</u></strong> </span><br /><br /><br /><img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand" alt="" src="http://im.sify.com/entertainment/movies/images/nov2007/omshantiom123456.jpg" border="3" />ரொம்ப நாளாயிற்று ...<br /><br />இந்த மாதிரி ஒரு பூரண மசாலாப்படத்தைப் பார்த்து.<br /><br />['வலைப்பதித்து' என்று சொல்வேன் என்று எதிர்பார்த்தீர்களா? அந்த சால்ஜாப்பெல்லாம் சொல்வதாக இல்லை. அப்புறம் அதற்கென்றே ஒரு பதிவு எழுத வேண்டியிருக்கும்.]<br /><br />போன வாரம் ஓம் ஷாந்தி ஓம் படம் பார்த்தேன். ஸ்வர்ண சக்தி அபிராமி தியேட்டரை ஜிகுஜிகுவென்று வெல்வெட் குஷனெல்லாம் போட்டு கடைசி சீட்டுக்களை படுக்கையாக மாற்றியிருக்கிறார்களல்லவா, அதைப் பற்றி எழுதப்போயிருந்தேன். தியேட்டர் என்னவோ மஞ்சள்-சிகப்பு-பச்சை என்று 80க்ள்ளின் சினிமா டிஸ்கோவைப் பேய் பங்களா கெட்டப்பில் பார்ப்பதுபோல்தான் இருந்தது. ஆனால் படுக்கை-சீட் அமர்க்களமாக இருந்தது. ஷூவையெல்லாம் கழற்றிப்போட்டுவிட்டு ஹாயாகக் காலை நீட்டிக்கொண்டு, 'என்ன பெரிய படம்,' என்று நினைத்துக்கொண்டுதான் பார்க்க ஆரம்பித்தேன்.<br /><br />பொதுவாக ஷா ரூக் கான் படங்களென்றால் யோசிக்கும் திறனையெல்லாம் கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டுத்தான் பார்க்கவேண்டும் - தமிழ்நாட்டில் போலீஸாக வேலைபார்ப்பவர் பௌலர் ஹாட்டும் ஓவர்கோட்டும் அணிந்துதான் துப்பெல்லாம் துலக்கித் துப்புவார் என்ற எம்ஜிஆர் படத்தை ரசிப்பதுபோல்.<br /><br />என்றாலும் நான் ஷாரூக் ரசிகை என்பதை வெட்கமெல்லாம் படாமல் intellectual அலட்டல் எதுவும் இல்லாமல் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். லலல்லா ... பாடல் ஒலிக்கும்போது, "கண்ணே, என் இதயம் உன்னுடையது," என்று தி.பாகவதர் கால வசனம் பேசும்போது பார்வையாளர்களை நிஜமாகவே உருக வைக்கும் திறமை மிகச்சிலருக்குத்தான் உண்டு. I salute the ultimate showman of today.<br /><br />ஒரு முறை பார்த்துப் போதாமல் இன்னொரு முறை பார்த்தேன் என்றால் பார்த்துக்கொள்ளூங்கள். [நான் முதல் முறையே தியேட்டர் செல்லும் ரகம் இல்லை.] 70க்களில் சினிமா விஸ்வரூபம் அடைந்திருந்தபோது மீண்டும் மீண்டும் தியேட்டரை மொய்த்துப் படம் பார்த்து, அந்த மாய உலகின் மோகத்தில் மூழ்கியவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்பது நன்கு புரிந்தது. அந்தக் கனவுலகம், the sheer screen magic of it ... அதை இந்த ஓவர்டோஸ் matrix உலகத்தில் என்றாவது அனுபவிக்க முடியுமா என்று ஏங்கிய காலம் உண்டு. OSO அந்த அனுபவத்தை எனக்குக் கொடுத்தது.<br /><br />த்சோ, இன்னொரு OSO விமர்சனமா என்று அலுப்புத்தட்டும் பட்சத்தில் you have been warned: இதோடு கிளம்பலாம்.<br /><br />ஔவையே! OSOவில் உனக்குப் பிடித்தவைகளை ஒன்று, இரண்டு, மூன்று, என்று வரிசைப்படுத்திப் பாடு என்று கேட்டால், பாடாமல் என்னால் சொல்லக்கூடியவை:<br /><br /><strong>1.</strong> சதாகாலமும் ஹாலிவுட் இன்ஸ்பிரேஷன் என்ற பெயரில் frame by frame அதைக் கட்டிக்கொண்டு அழாமல், ஒரு வித்தியாசத்திற்கு நம்மூர் பாலிவுட்டை [அதுவே பலவிஷயங்களில் ஹாலிவுட் இன்ஸ்பிரேஷனாக இருந்த போதிலும்]அதன் கோட்டை, கொத்தளம், கத்தி, கபடா, பெல்பாட்டம், தொங்கு மீசை, லெதர் பாண்ட், டென்னிஸ் ஆடும் பெண்கள் என்று கலக்கோ கலக்கு என்று கலக்கிப் பாயசமாக்கியதற்கு.<br /><br /><strong>2</strong>. சாபு சிரிலின் ஆர்ட் டிரெக்ஷன். 70க்களின் ஓம் தன் இதய நாயகி ஷாந்திப்ரியாவின் போஸ்டரை நோக்கிக் காதல் வசனம் பேசிக்கொண்டிருக்கும்போது அருகிலிருக்கும் பில்போர்டுகள், Palmer's Biscuits, Ovaltine, Dulux Paints போன்ற விளம்பரங்களை தத்ரூபமாகக் காட்டுகின்றன. பழைய பைண்ட் புத்தகங்களில் தொடர்கதை படிக்கும்போது அவற்றைப்பார்த்த நினைவு பளிச்சிடுகிறது.<br /><br /><strong>3.</strong> ஓம் பிரகாஷ் மகிஜாவாக வரும் ஷா ரூக். இவரது படங்களின் பொதுவான குற்றச்சாட்டு - எப்போதும் அவர் ஷா ரூக்காகத்தான் இருக்கிறாரேயொழிய, கதாபாத்திரமாக மாறுவதில்லை என்பது. இந்த ஒரு இடம் மட்டும் விதிவிலக்கு. பல்லைக் கடித்துக்கொண்டு முன்னேறியதாலோ என்னவோ, கண்களில் கனவு வழிய சினிமாவில் வாய்ப்பு வேண்டி அலையும் இளைஞனின் ஏக்கத்தைப் உண்மையிலே உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார். பின் பாதியில் brat-star ஆக வருவதெல்லாம் OK OK தான்.<br /><br /><strong>4.</strong> எல்லோரும் ஏற்கனவே பாராட்டியிருக்கும் Filmfare Awards பகுதி. இந்த 'ரா'ஜையும் 'ராகு'லையும் இன்னும் எவ்வளவு நாள்தான் கட்டிக்கொண்டு அழுவார்கள் என்று ஃபாரா கான் எத்தனை முறை தலையில் அடித்துக்கொண்டாரோ?<br /><br /><strong>5.</strong> எல்லோரும் சரமாரியாக criticise செய்திருக்கும் பூர்வஜென்மம்-மறுபிறப்பு பகுதி. எனக்குப் படத்தின் ஹைலைட்டே இதுதான் என்று தோன்றியது. 'இந்தக் காதல் நிறைவேறாது' என்று தெரிவதனால்தான் Main agar kahoon பாடலில் அத்தனை சோகமும் இனிமையும் கூத்தாடுகிறது.<br /><br /><strong>6.</strong> அந்த 31 ஸ்டார் அணிவகுப்புப் பாடல். பாடல் சுமார் ரகம்தான். ஆனால் பாடலின் கடைசியில் சைஃப், சல்மான், ஷா ரூக், சஞ்சய் தத் எல்லோரும் சேர்ந்து டேபிளின் மேல் ஆடும் பகுதி - ஷா ரூக்கின் முகத்தில் இருக்கும் ஒருவித மலர்ச்சி கலந்த ஆச்சர்யம். ஷா ரூக் கான் என்ற ஒரு புயல் வேக phenomenonஐக் கொண்டாடுகிறார்கள் அவர்கள். 'இதெல்லாம் நமக்கா? நிஜமாகவே இந்தத் திரையுலக பயில்வான்களைக் கட்டியிழுக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துவிட்டோமா? இவர்களெல்லாம் நமக்காகத்தான் இங்கே வந்து ஆடுகிறார்களா?' என்ற ஒருவித மலைப்பு அவர் முகத்தில் வந்து வந்து போகும். பாடல் முழுவதும் அவர்களையே பார்த்துக்கொண்டு ஏறக்குறைய வாய் பிளந்தபடி நின்றுகொண்டிருப்பார்.<br /><br /><strong>7.</strong> க்ளைமாக்ஸ் பாடல். அதைப் படமாக்கியிருக்கும் விதம். பழைய நினைவுகளையும் ஷாந்திப்ரியா பரிதாமாக இறந்துபோனதையும் கவிதை கலந்த குரூரத்துடன் சொல்லியிருக்கும் அழகு ... இந்த ஒரு பாடலுக்காக இன்னும் பத்து முறை OSO பார்க்க நான் தயார்.<br /><br /><strong>8.</strong> அர்ஜுன் ராம்பால் இத்தனை நாள் எங்கிருந்தார்? ஏன் யாரும் இதுவரை இப்படியொரு அட்டகாசமான வில்லன் கதாபாத்திரத்தை அவருக்குக் கொடுக்கவில்லை?<br /><br /><strong>9.</strong> படுகோனே படு க்ளாமராக வந்து கன்னம் குழிவிழ நம்மை அள்ளிக்கொண்டு போகிறார். Dhoomtana பாடலில் பழையகால டப்பாங்குத்து தமாஷாக இருக்கிறது. கடைசிக்காட்சியில் வில்லனை ஒழித்த பிறகு ஷா ரூக்கை துக்கமும் காதலும் கலந்து கண்களில் கண்ணீர் வழிய ஒரு பார்வை பார்க்கிறாரே ... Dreamy Girl பட்டம் மிகப்பொருத்தம். எதிர்காலத்தில் இதைவிட லாஜிக் குறைந்த பல படங்களில் பிகினியில் வந்து, 'பாதகா, விடு என்னை,' என்று சுத்த இந்தியில் பல வசனங்கள் பேசி ஹீரோவின் கையில் தொப்பென்று விழும் சப்பைப் படங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.<br /><br /><strong>10.</strong> Shreyas Talpade. இக்பால் படத்தில் நடித்த அதே ஆள்தானா என்று நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. Wow.<br /><br />OSOவின் மற்ற விமர்சனங்களைப் படித்தபோது கண்ணை உறுத்திய ஒரு விஷயம்: ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் 'இது வெறும் தமாஷ்தான்,' 'ஒண்ணும் கலை வளர்க்கும் படமெல்லாம் இல்லை, இருந்தாலும் ஏதோ பரவாயில்லை,' என்றெல்லாம் சொல்லிவிட்டு அப்புறம் விமர்சனத்திற்குத் தாவியிருக்கிறார்கள். எப்போதுமே ஒரு படம் கலைவளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எந்த சட்டத்தில் இருக்கிறது என்று புரியவில்லை. கலைப்புலிகளாக தங்களை இவர்கள் நினைத்துக்கொள்வது எதற்கு என்றும் புரியவில்லை. மிக உயர்ந்த சினிமா ஒரு புறம் இமயமலைச்சிகரத்தில் இருக்கட்டும். OSO போன்ற படங்களுக்கும் இங்கே இடம் உண்டு. This is pure entertainment. கட்டக்கடைசியில், எது நிஜவாழ்வின் கஷ்டங்களை மறக்கடித்து கற்பனை உலகிற்கு நம்மை இழுத்துச் செல்கிறதோ, அதுதான் ஜெயிக்கும்.<br /><br />Paisa Vasool, yaar.Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5647678.post-75984945745621286322007-01-20T10:51:00.000+05:302007-01-20T12:36:46.095+05:30"ஆரார் ஆசைப்பட்டால் என்ன ...?"சென்னையின் இசை விழாவில் முழுகி நனைந்து இப்போதுதான் வெளியே வந்து மூச்சிழுக்கிறேன். மற்ற வருடங்களில் செய்யாத ஒரு சில (சிறிய) விஷயங்களை இந்த வருடம் செய்ய முடிந்தது. உதா: அலுவலகத்தையும் தாண்டி எப்படி கச்சேரிகளுக்குச் சென்று வருவது என்று திட்டமிடுதல். எந்த ப்ளானும் இல்லாமல் ஒரு விஷயத்தில் தடாலென்று இறங்குவதுதான் எப்போதும் கை கொடுக்கிறது என்பதற்கு டிசம்பர் 2006 மற்றொரு எடுத்துக்காட்டு.<br /><br />அப்படி ஒரு "புதிதாகச் செய்யும் முயற்சி"யில்தான், கலாஷேத்ராவிற்குச் சென்றேன். இரண்டு மூன்று நாட்டிய நாடகங்களைப் பார்த்து ரசித்தேன். கூடவே, "கூர்மாவதாரம்" நிகழ்ச்சிக்கு முன், அவர்களுடைய கேரள பாணி "கூத்தம்பலம்" அரங்கில், பிரசன்னா ராமஸ்வாமியின் "<a href="http://www.hinduonnet.com/thehindu/fr/2006/11/17/stories/2006111702550700.htm">ஆரார் ஆசைப்படார்</a>" short filmஐயும் பார்க்க நேர்ந்தது.<br /><br />மாலை ஐந்து மணி. வெளியே மரங்களின் 'மரமர' சப்தம். கொசுக்கள் ரீங்காரமிட்டன. அவற்றை விரட்டும் சாம்பிராணிப் புகையின் நறுமணம். சற்று கண்ணை மூடினால் இரண்டு நூற்றாண்டுகள் பின்னோக்கி வந்துவிட்ட பிரமை தட்டுகிறது. Ambienceஇல் தூக்கியடிக்கிறார்கள்.<br /><br />படம் ஆரம்பித்தவுடன், சஞ்சய் சுப்ரமணியத்தின் அற்புதக் குரல் சில நிமிடங்கள் பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறது. நளினமான இசை.<br /><br />அதற்கப்புறம் கொட்டாவி வருவதைத் தடுக்க முடிவதில்லை.<br /><br />பாடகர், குழந்தைக்கு அன்பான அப்பா, கணவர், வயது முதிர்ந்த இசைக்கலைஞரிடம் பாட்டுக் கற்றுக்கொள்ளும் பணிவான மாணவர் என்று சஞ்சயின் வெவ்வேறு பரிமாணங்களைக் கட்ட முயன்றிருக்கிறார்கள். புரிகிறது. அவர்களது முயற்சி பாராட்டுக்குரியதுதான். ஆனால் ... இயற்கையாக எடுக்கிறேன் என்ற பெயரில் கேமரா ஓவராக ஆடுவதாகத்தான் எனக்குப் படுகிறது. இயல்பான வாழ்க்கையைக் காட்டுவதாகச் சொல்லி சஞ்சயின் மனைவி தோசை வார்ப்பதைப் பதினைந்து நிமிடம் படமெடுக்க வேண்டிய அவசியம் புரியவில்லை.<br /><br />தன் இசை, அவரது அனுபவங்கள், அவர் தன் துறையைப் பார்க்கும் விதத்தைப் பற்றியெல்லாம் சஞ்சய் விவரிக்கும் இடங்கள் மிக நன்றாக இருக்கின்றன. கண்களை உருட்டி உருட்டி அவர் இன்வால்வ் ஆகி மூழ்கிப்போவது மிக சுவாரசியமாக இருக்கிறது. உடனேயே அவர் ஜன்னல் பக்கம் நின்று தெருவை வேடிக்கை பார்க்கிறார். ஆழ்ந்த இசைத் தியானத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம் - ஆனால் பார்க்கும் நமக்கு அந்த உணர்வு வரவில்லை. தப்பாக எடிட் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகம்தான் வருகிறது. பின்னால் ஒரு தாமரை மலர்வதாக (பழைய சிவாஜி படத்திலெல்லாம் காண்பிப்பார்களே) ஒரு காட்சி. Subtlety, where art thou? தமாஷாக இருந்தது.<br /><br />சஞ்சய் பாடிக்கொண்டே இருக்கிறார். குழந்தையுடன் விளையாடுகிறார். திடீரென்று காருக்குள் இருக்கிறார். ஒரு சமயம் வாய் மட்டும் தெரிகிறது. பாட்டுக் கற்றுக்கொள்கிறார் (அவரது பணிவும் பக்தியும் உண்மையிலேயே சிலிர்க்க வைக்கின்றன.) வாயில் எதையோ குதப்புகிறார்.<br /><br />பிய்த்துப் பிய்த்துப் பல காட்சிகள். இதுதான் டாக்குமெண்ட்ரி ethicஸோ என்னவோ. ரோட்டில் போகும்போது குலுக்கிப்போடும் தெருக்குழிகளை நினைவுபடுத்துகின்றன பல காட்சியமைப்புக்கள். சஞ்சய் என்ற அற்புதப் பாடகரின் பல முகங்களைக் காட்ட முயன்றிருக்கிறார்கள் ... சஞ்சய் என்ற தனிப்பட்ட மனிதரின் sheer charisma படத்தை ஓட்டுகிறது. மற்றபடி?<br /><br />ஒரு பெரிய பங்களாவையே திறந்து காட்டுகிறேன் என்று ஆசை காண்பித்துவிட்டு, கதவிடுக்கில் சிந்தும் ஒளியை மட்டுமே மீண்டும் மீண்டும் focus செய்திருக்கிறார்கள். Rather disappointing.Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5647678.post-1158573100227526722006-09-18T15:06:00.000+05:302006-12-27T23:33:04.320+05:30துணியும் 'டீ'யும்<div align="justify"><a href="http://photos1.blogger.com/blogger/5548/213/1600/Cupboard.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/5548/213/320/Cupboard.jpg" border="3" /></a><br /><br /><br /><br />"துணிகள் பெட்டி அநேகமாகக் காலியாக இருக்கிறது. துணியோ அதிக விலை; கிடைப்பதும் கஷ்டம். ஆனாலும், யுத்தகால வாழ்க்கையின் கஷ்டங்களில் இது ஒன்று. ஆதார வகைகளும் எரிதுரும்புகளும் இன்றும் கிராக்கியாய் இருக்கின்றன. வாழ்க்கை பூராவும் பிரச்சனைகளாக இருக்கின்றன. அதுதான் வெற்றியின் விலை. ஆனால் தற்கால கஷ்டங்களின் பயனாக வாழவே முடியாது என்று தோன்றும் சமயம் உங்களை ஜீவித்திருக்க உதவுவதற்குத் தயாராக ஒரு நேசன் இருக்கிறான். அதுதான் டீ.<br /><br />இன்னமும் நியாயமான விலையில், எப்போது வேண்டுமானாலும் கிடைக்கிறது. இந்தக் கஷ்ட காலங்களில் டீ ஒரு ஆச்சர்யத்தக்க சுகத்தைக் கொடுக்கிறது. கெடுதலனியில் கிளர்த்துகிறது. அதன் விசேஷ குணங்களினால் பிரச்சனைகள் அதிகக் கஷ்டமில்லாமலும் கவலைகள் மிக முக்கியமற்றவைகளாயும் ஆறிவிடுகின்றன. "</div><div align="center"><br /><br />- இந்தியன் டீ<br />(<em>இந்தியன் டீ மார்க்கெட் எக்ஸ்பான்ஷன் போர்டாரால் வெளியிடப்பட்டது</em>)<br />-<br /><strong>கல்கி இதழ், ஜூன் 10, 1945. </strong></div><strong><div align="justify"><br /></strong></div><p><br />துணியில்லாவிட்டால் டீ சாப்பிட வேண்டும் என்ற லாஜிக் சிரிப்பை வரவழைத்தாலும் ... மவுண்ட் ரோடில் நிற்கும் RMkv ஹோர்டிங்குகளைப் பார்த்தால் 'அப்படியொன்றும் தவறில்லை" என்று தோன்றுகிறது. </p>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5647678.post-1157957758983114462006-09-11T12:20:00.000+05:302006-09-14T11:40:09.156+05:30<span style="font-size:130%;"><strong><u>BlogCampஉம் மற்றவையும்</u></strong></span><br /><br /><p><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/5548/213/320/DreamChaser_BlogCamp_logo.jpg" border="3" /><br />நேற்றுடன் ப்ளாக்கேம்ப் வெற்றிகரமாக முடிவடைந்தது.<br /><br />இதோ அதோ என்று செப்டெம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி, பத்தாம் தேதி <a href="http://blogcamp.in">BlogCamp</a> முடிந்தேவிட்டது. இரண்டு நாட்களும் அங்கேயிருந்து, பார்த்து, கேட்டு, ரசித்து உண்டு வந்தேன்.<br /><br />டைடெல் பார்க்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு நான் முதலில் செல்வதாகவே இல்லை. வருபவர்கள் கண்டிபாக ஒரு presentation கொடுத்தே ஆகவேண்டுமென்று <a href="http://kiruba.com">கிருபா</a> தன் வலைப்பதிவில் மிரட்டியிருந்ததால், 'நமக்கேன் வம்பு' என்று சனி ஞாயிறை டீ வி பார்த்துக் கழிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அப்போதுதான் <a href="http://vicky.in">விக்கி</a>யின் கடிதம் வந்து சேர்ந்தது. "சும்மா வாங்க," என்று அவர் ஏற்றிவிட, தடாலென்று "போகலாம்," என்று முடிவெடுத்து, இன்ஸ்டண்டாக பதிவு செய்து ... இதோ எல்லாம் முடிந்து உட்கார்ந்து வலைபதிந்துகொண்டிருக்கிறேன்.<br /><br />இந்தியாவின் மிகபெரிய Unconference என்று சொல்லப்பட்டது இது. நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் வலைப்பதிவாளர்கள் வந்திருந்தார்கள். Indian blogosphere என்பதால், வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் வலைப்பதிவு வைத்திருந்த சென்னைக்காரர்கள்/சென்னைக்கு வெளியே இருந்தோர். பலருக்கு மற்றவர்களை வலைப்பதிவு மூலம்தான் தெரியும். முதன்முறையாக சந்தித்துக்கொண்டோம்.<br /><br />முதலில், டைடல் பார்க்கே எனக்குப் புதிய அனுபவம். நான் இதற்கு முன் ஒரே முறைதான் அங்கு சென்றிருக்கிறேன். கேட்டில் நுழைந்து மூன்று இடங்களில் செக்யூரிட்டி செக்குகளைக் கடந்து (ஒவ்வொரு இடத்திலும் ப்ளாக்கேம்ப்பில் கொடுத்த கடிதத்தை வைத்துக்கொண்டு) நடந்து, டைடல் பார்க்குக்குள் நுழைந்து, கீழ் ஃப்ளோரில் இருந்த ஏசி அரங்கிற்குள் நுழைவதற்கு முன், ஒரு பெரிய ப்ளாஸ்டிக் மூட்டையைக் கையில் கொடுத்தார்கள்: Yahoo!வின் பை, ஒரு மக், பேப்பர் பேனா சமாச்சாரம், டி-ஷர்ட் என்று கசாட்டாவாக ஒரு gift pack.<br /><br />அன்கான்ஃபெரன்ஸ் (இதுக்கு என்னங்க தமிழ்ல?) நடக்கும் அரங்ககிற்குள் நான் நுழைந்த போது, <a href="http://sulekha.com">சுலேகா</a>வைச் சேர்ந்த ஒருவர் பேசிக்கொண்டிருந்தர். அரங்கு முழுவதும் லாப்டாப் மயம். ஒரு நிமிடம், வந்திருந்தவர்கள் அத்தனை பேருக்கும் லாப்டாப் உண்டோ என்ற நப்பாசை (பேராசை?) எழுந்து, உடனேயே அடக்கிக்கொண்டேன். தமிழ்நாட்டில் இலவச டீவி வழங்குவதுபோல், இலவச லாப்டாப் வழங்கும் காலம் ஒன்று வராமலா போகும்? [அடுத்த முறை லாப்டாப் பையுடன் லாப்டாப்பே தருவார்கள் என்று விக்கி சமாதானப்படுத்தினார்.]கடைசியில் போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டேன். சுற்றிலும் ஒன்று கூட தெரிந்த முகமாக இல்லை.<br /><br /><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/5548/213/320/Amit_agarwal.jpg" border="3" /><br /><br />பேசியவர்கள் எடுத்துக்கொண்ட டாப்பிக் எல்லமே வலைப்பதிவுகளை மையமாகக் கொண்டவைதான். <a href="http://www.labnol.blogspot.com">அமித் அக்கர்வால்</a>, [எனக்குத் தெரிந்து வலைப்பதிவு மூலம் லட்சக்கணக்கில் பணம் ஈட்டும் ஒரே சாமர்த்தியசாலி], தன் அனுபவங்களைப் பற்றிக் கூறினார். கூகிள், இவரது வலைப்பதிவுக்கு வரும் டிராஃபிக்கைக் கண்டு, தனியாக ஒரு ஏஜெண்ட்டைக் கொடுத்துவிட்டதாம். ஒரு நாளுக்கு அவரது வலைப்பதிவுக்கு வருவோரின் எண்ணிக்கை 1.25 மில்லியனைத் தாண்டுமாம். ["அப்படி எவ்வளவுதான் சம்பாதிக்கிறீங்க?" என்று ஒரு வலைப்பதிவர் தொணப்ப, "அதெல்லாம் சொல்ல முடியாது," என்று மறுத்துவிட்டார்.]<br /><br />"கூகிள், யாஹூவை நம்பித்தான் வண்டி ஓடுகிறது. அதனால், திடீரென்று அவர்கள் கடையை மூடினால், நானும் நடுத்தெருவில்தான்," என்று சிரிக்கிறார்.<br /><br />வெவ்வேறு வலைப்பதிவாளர்கள் நம் வலைப்பதிவை சுவாரசியமாக்குவது எப்படி, எப்படி டிராஃபிக்கை அதிகப்படுத்துவது என்றெல்லாம் பேசினார்கள். யாரும் பேச்சாளர்கள் இல்லை என்பதால், கொஞ்சம் போரடித்தது. சொல்லும் விஷயம் சுவாரசியமாக இருந்ததென்னவோ நிஜம். ஓம் ப்ரகாஷ் என்பவர் வலைப்பதிவாளரே இல்லை. இருந்தாலும், என்னென்ன இணையப்பக்கங்களுக்கெல்லாம் சென்றால் டிராஃபிக் கூடும் என்று ஒரு லிஸ்ட் கொடுத்தார். [அவரிடம் பேச்சுக்கொடுத்த போது, "என்கிட்ட லாப்டாப் இல்லை - ரெண்டு நாள் முன்ன செத்துப்போச்சு. இருந்திருந்தா இன்னும் அட்டகாசமா இருந்திருக்கும்," என்றார் வயிற்றெரிச்சலுடன். டெல்லியிலிருந்து வந்திருக்கிறார், இதற்காக.]<br /><br /><br /><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/5548/213/320/Dreamchaser_Collab_blogging.jpg" border="3" /><br />முதல் நாள் மதியம் <a href="http://desipundit.com">நேஹா</a>, <a href="http://dinamehta.com">டினா மேத்தா</a>, <a href="http://zigzackly.blogspot.com">பீட்டர் க்ரிஃஃபின்</a>, எல்லோரும் சேர்ந்து, ஒரு கூட்டு உரையாடல் போல நடத்தினார்கள். சுனாமி போன்ற இயற்கை உற்பாதங்கள் (அல்லது மனிதன் உருவாக்கியவையாக இருந்தாலும் கூட), வலைப்பதிவர்களின் பங்கு அதில் என்னவாக இருக்கும்? சுனாமியின் போது வலைப்பதிவாளர்களால் உண்மையிலேயே எவ்வளவு தூரம் பங்கேற்க முடிந்தது? அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒரு வலைப்பதிவாளர் நேரில் சென்று வலைப்பதிவது எவ்வளவு தூரம் சாத்தியம்?" என்றெல்லாம் பேச்சு சுழன்றது. கூட்டு வலைப்பதிவுகள் நன்மைகள், சங்கடங்கள் எல்லாம் ஆராயப்பட்டன. [<a href="http://chennai.metblogs.com">சென்னை.மெட்ப்ளாக்ஸ் </a>கூட்டுக்குழு என்பதால், அதில் ஓரு அங்கமான சந்திரசூடன் கலந்துகொண்டார். ]</p><p>Merinews.com என்று இணையப்பத்திரிகையை நடத்தும் எடிட்டர் பேசினார். முக்கியமாக, வணிகப்பத்திரிகைகளை வலைப்பதிவுகள் எப்படி பாதிக்கின்றன என்பது நிறைய அலசப்பட்டது. டெக்கன் கிரானிக்கிளிலிருந்து வந்து பேசிய ஒரு நிருபர், "வலைப்பதிவுகள் எங்களுக்குப் போட்டியே அல்ல," என்றார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் முன்பு பணிபுரிந்த ஒரு நிரு பி "வலைப்பதிவாளர்கள் இதுவரை நிருபர்கள் ஆனதில்லை; ஆனால் நிருபர்களாக இருக்கும் பலர் இப்போது வலைப்பதிவு வைத்திருகிறார்கள். நானே அப்படித்தான்," என்றார். </p><p>நந்து என்று ஒரு நிருபர் நீளமாக எழுதி வைத்திருந்ததைப் படிக்க, <a href="http://scobleizer.wordpress.com/2006/09/09/i-love-the-new-max-but/">ராபர்ட் ஸ்கோபல்</a>லின் பேச்சைக் கேட்க ஆவலுடன் வந்த பலரது கவனம் வேறெங்கோ போய்விட்டது. அவர் பேசுவதில் ஏதோ டெக்கி கோளாறு ஏற்பட, "எல்லாரும் சாப்ட்டு வாங்கப்பா," என்று அனுப்பிவிட்டார்கள். அப்புறம் எல்லாம் சரியாகி, வந்து பேசிவிட்டுப் போனார் என்று வைத்துக்கொள்ளூங்கள். அவருக்கு அங்கே நடுராத்திரி. உற்சாகத்துடன் பேசினார். </p><p></p><p><br /><br /><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/5548/213/320/Jace_Gavaskar.jpg" border="3" /><br /><br />சுனில் கவாஸ்கர் podcastingபற்றிப் பேசினார். அது இரண்டாம் நாள் அன்று. "நானெல்லாம் டிரான்ஸிஸ்டர், ந்யூஸ்பேப்பர் காலத்தில் வளர்ந்தவன்; எனக்கு நீங்கள் எலோரும் என் முன்னால் லாப்டாப்புடன் உட்கார்ந்து நான் சொல்லச் சொல்ல அதை இணையத்தில் ஏற்றுகிறீர்கள் என்பதே அதிசயமாகத்தான் இருக்கிறது," என்றார். அவர் இன்னும் வலைப்பதியத் தொடங்கவில்லையாம். "அவசியம் யோசிக்கிறேன்," என்றார். "என் காலத்தை சேர்ந்தவர்கள் வேறு யாரும் இணையத்துடன் இவ்வளவு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகத் தெரியவில்லை - இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் உலகில். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் கம்ப்யூட்டரும் கையுமாகத்தான் அலைகிறார்கள்," என்று சிரித்தார். </p><p>மேலே கான்ஃப்ரன்ஸ் ஹாலில் ஒரு தனி ட்ராக் ஓடிக்கொண்டிருந்தது. "வர்ட்ப்ரெஸ்ஸ் பெரிதா, ப்ளாக்கரே போதுமா?" என்று பேசியதோடு, அவ்வப்போது கலாய்த்துக்கொள்ளவும் யாரும் மறக்கவில்லை. வர்ட்ப்ரெஸ்ஸைப் பற்றிப் பேசப்பேச, என் முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் லாப்டாப்பில் அந்த விவரங்களை அப்படியே பதிவு செய்துகொண்டு வர்ட்ப்ரெஸ் அக்கவுண்ட் திறந்துகொண்டது ரொம்ப சுவாரசியமாக இருந்தது. [அப்புறம் அவரிடமே அதைச் சொல்ல, வெட்கத்துடன் நெளிந்தார். அவர் திறந்த பதிவின் பெயர்: "Learning to blog in Wordpress."] வர்ட்ப்ரெஸ்ஸின் மகத்துவத்தைப் பற்றிப் பேசப் பேச, உட்கார்ந்திருந்த மற்ற வலைப்பதிவாளர்கள். "அடங்கு ..." என்று குரல் விட்டது வேறு விஷயம். </p><p><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/5548/213/320/Jace_Rajesh_Setty.jpg" border="3" /></p><p></p><p>ரஜேஷ் ஷெட்டி என்பவர், "எப்படி வலைப்பதிவை ச்வரசியமாக அக்கிக்கொள்வது" என்று பேசினார். வலைப்பதிவைப் பொறுத்தவரை, அவரது குரு <a href="http://blog.guykawasaki.com/">கய் கவாசாகி</a>யாம். ஏழு புத்தகங்கள் எழுதியுள்ள இவருக்கு, நாளொன்றுக்கு மூன்றிலிருந்து நான்கு லட்சம் ஹிட்ஸ் வருமாம். "அடுத்தவர்களைக் கேவலப்படுத்துவது, வம்படிப்பது, கன்னாபின்னாவென்று பேசுவது, வலுச்சண்டைக்குப் போவது என்றால், ஒரு நாளுக்கு ஹிட்ரேட் எகிறும். ஆனால் நிலைக்காது. கெட்ட பெயர் வந்துவிடும். தொடர்ந்து நல்ல கண்டெண்ட் கொடுத்தால்தான் வலைப்பதிவில் உருப்பட முடியும்" என்று திரும்பத் திரும்பச் சொன்னார். "ஷவுட் பாக்ஸ், ஜிகினா சமாச்சாரமெல்லாம் போட்டு வலைப்பதிவை ரொப்பாதீர்கள். அமெச்சூர்தனமாக இருக்கிறது," என்று சலித்துக்கொண்டார். </p><p>வீணா என்றொரு வலைப்பதிவாளர், "ஏன் நம் ஊர் அரசியல்வாதிகளெல்லாம் வலைப்பதிவு தொடங்கக்கூடாது," என்றொரு டாப்பிக்கை எடுத்துக்கொண்டார். "இதெல்லாம் நடக்கிற காரியமா? அப்பறம் வலைப்பதிவில் கொடுக்கும் வாக்குறுதியையெல்லாம் எப்படிக் காப்பாற்றுவது? ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்யும் போது சொல்வதையே செயல்படுத்த முடியவில்லை," என்று காரசாரமாக விவாதம் நடந்தது. "அமெரிக்காவில் நடக்கிறதே என்று இங்கும் நடத்த முடியுமா? அங்கே பில் க்ளிண்டன் எழுதினால் படிப்பார்கள். இங்கே ராஹுல் காந்தி எழுதினால், ஒரு சிலரைத் தவிர யாருக்கு என்ன லாபம்?" என்று வாதங்கள் தொடர்ந்தன. </p><p>வலைப்பதிவில் இசையைப் பற்றி ஸ்ரீராம் என்பவர் பேசினார். மொழிப் பதிவுகளைப் பற்றி அபர்ணா என்றொரு பெங்காலி பதிவர் பேசினார். "யுனிகோட் தான் எங்கள் தெய்வம்," என்றார், புன்னகையுடன். ஒரு பேப்பரைத் தூக்கிக் காட்டினார். </p><p></p><p><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/5548/213/320/Jace_aparna.jpg" border="3" /></p><br />"நான் ஆங்கிலத்தில் 'Paper Rat ' என்று எழுதியிருக்கிறேன். இதைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றும்? நான் எலியைப் பற்றிப் பேசுவதாக் நினைப்பீர்கள். உண்மையில், நான் 'பாபர் ராத்' - 'பாவ இரவைப்' பற்றிப் பேசுகிறேன் என்பது உங்களுக்கெப்படித் தெரியும்? Romanized scriptஇன் பிரச்சனை இது. அந்தந்த மொழியில் வலைப்பதிவு எவ்வளவு அவசியம் என்பது இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்தான் தெரியும்." [ஐகாரஸ் பிரகாஷ் - இரண்டாம் நாள் வந்து சேர்ந்துகொண்டார் - இதற்கு மிகப் பலமாக ஆமோதித்து, மேசையை ஓசைப்படுத்தித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்.]<br /><br />மனோஜ் என்றொரு வலைப்பதிவாளர், "வலைப்பதிவுகளில் நம் தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்வது எப்படி?" என்று பேசுகையில், "சச்சினில்லாத கிரிக்கெட்டா? ஸ்கோபெல் இல்லாத டெக்கி பதிவுலகமா? கிருபா இல்லாத இந்திய வலைபதிவுலகமா?" என்று பொழிந்து கொட்ட ... "ஓய்ய்ய்" என்றது கூட்டம். அங்கேயே இருந்த கிருபாவின் முகத்தைப் பார்த்திருக்க வேண்டும். மிகப்பெரிய காமெடி, கூட்டத்தில் ஒருத்தர், "யாருங்க அது போட்டோல?" என்றதுதான்.<br /><br />மதியம் நான், பிரகாஷ், விக்கி, மூவரும் சேர்ந்து, தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி ஒரு சிறிய பாட்காஸ்ட் செய்தோம். தமிழ் வலைப்பதிவுகள் வரலாறே அதில் அடங்கியிருக்குமென்று நினைக்கிறேன் - அவ்வளவு பேசினோம். [நாங்கள் பேசப்பேச விக்கியின் கண்கள் விரிந்ததைப் பார்த்திருக்க வேண்டும்.] தமிழில் வலைப்பதிவது எவ்வளவு அவசியம் என்பதற்கு நானே ஒரு உதாரணம் குறிப்பிடுகிறேன்: டைடல் பார்க்கில் ப்ளாக் அமர்க்களம் நடந்துகொண்டிருந்த போது, சுற்றியிருந்த துப்புரவாளர்களும் மற்றவர்களும் ஏதும் புரியாமல் இங்கும் அங்கும் அவர்களது வேலையைப் பார்த்துக்கொண்டு சென்றுகொண்டிருக்க, அதே ப்ளாக் கேம்ப்பைச் சேர்ந்த நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு, ஆவலாக 'என்ன பேசுகிறோம்," என்று கவனித்துக்கொண்டார்கள். [சிந்துபைரவி மீனவக் காட்சி நினைவுக்கு வரவில்லை? :)]<br /><br />நிகழ்ச்சிகள் நடந்த அத்தனை நேரமும் கேமராக்கள் பளிச்சிட்டுக்கொண்டுதான் இருந்தன. படம் சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தவர்கள் (Jace) - "Mood at the Camp" என்று எடுத்த காமெடிப் படம் ஒன்று:<br /><br /><p><a href="http://photos1.blogger.com/blogger/5548/213/1600/JAce_moodofcamp.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/5548/213/320/JAce_moodofcamp.jpg" border="3" /></a></p><p>என்னதான் இணையத்தில் விக்கிபீடியாவெல்லாம் வைத்தாலும், பேப்பரில் விக்கியெல்லாம் டூ மச். </p><p></p><p><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/5548/213/320/Jace_Paperwiki.jpg" border="3" /><br />கடைசியாக quizஎல்லாம் வைத்தார்கள். 'கில்லி' என்ற பெயரில் நானும் பிரகாஷும் கலந்துகொண்டோம் [ நான்: "டீம் பெயருக்குகூட 'கில்லி'னுதான் வெக்கணுமா?" பிரகாஷ்: "அட விடுங்க!"] ப்ரிலிம்ஸ் வரையில் வந்து அப்புறம் அவுட். கொசுறாக சாக்லேட்டாவது ஜெயிக்கலாம் என்றால் ... ஹும்.</p><p></p><p>ப்ளாக்கேம்ப்பில் கலந்து கொண்ட பெண்கள் மொத்தம் பத்து பேர் கூடத் தேற மாட்டார்கள். அதிலும் வலைப்பதிவாளர்கள் (என்னையும் சேர்த்து) - 4 பேர். Chennaiistஇல் வந்து பேட்டியெடுத்தார்கள் (ஜெ ஷங்கர் இன்னொர் கல்கி ரசிகர்!) என்றால் பார்த்துக்கொள்ளூங்கள். பிபிசி ரேடியோவைத்தான் தவறவிட்டுவிட்டதாக விக்கி சொன்னார்.<br /><br />Conclusion: கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் ஆஹா! கொஞ்சம் யாஹூ! கொஞ்சம் அறுவை, கொஞ்சம் நக்கல், நிறைய டெக்கி ... ப்ளாக்ப்கேம்ப்!</p><p></p><strong>Photos courtesy</strong>: Jace and Dreamchaser. மேலும் புகைப்படங்களுக்கு <a href="http://www.flickr.com/search/?q=blogcamp&s=int">இங்கே</a> செல்லவும்.<br /><br /><div align="center"><img src="http://static.flickr.com/59/210806036_b48d43343b_o_d.png" /></div>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5647678.post-1157807898204061792006-09-09T18:46:00.000+05:302006-09-18T21:53:11.676+05:30இன்று BlogCamp சென்று வந்தேன்.Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5647678.post-1157196582423827742006-09-02T16:59:00.000+05:302006-09-04T20:59:25.480+05:30<font size=4><strong>சென்னையும் படச்சுருளும் - 2</strong></font><br /><br /><font size=2>Madras in Moviesஇன் இரண்டாம் பகுதி. <br /><br /><strong>படச்சுருள் - 2</strong> <a href="http://plugin.smileycentral.com/http%253A%252F%252Fwww.smileycentral.com%252F%253Fpartner%253DZSzeb008%255FZNxdm824YYIN%2526i%253D90%2526feat%253Dprof/page.html" target="_blank"><img src="http://smileys.smileycentral.com/cat/90.gif" alt="SmileyCentral.com" border="0"></a><br /><br />"I am going to talk about the history of mankind," என்று ஆரம்பித்தார் ராண்டார் கய். கடைசி நிமிடத்தில் பேச வேண்டிய உரையை மாற்றிவிட்டர்களா என்று யோசித்துக்கொண்டிருந்த போது, "இது சினிமாவின் எழுபத்தைந்தாவது வருடம்," என்று சொல்லி நிம்மதியேற்படுத்தினார். <br /><br />பெண்ணாத்தூர் சுப்ரமணியம் ஹை ஸ்கூலில் மாலை மணி ஏழு. ஸ்கூலின் கடைசிப் பகுதியில் இருந்த தக்ஷினாமூர்த்தி ஹால். வெளியே சடசடவென்று மழை வந்து விட்டது. அதன் சப்தத்துடன் போட்டியிட்டு எழுந்தது ராண்டார் கய்யின் கரகரப்பான குரல். "க்ளிப்பெல்லாம் சரியா இருக்கா?" என்று விசாரித்துக்கொண்டார். "அன்றைய சினிமாவில் மதராஸ்பட்டினத்தைப் பார்க்கலாமா?" என்றார். உற்சாகமாக எல்லோரும் தலையசைக்க, தமிழ் சினிமா சரித்திரத்தின் பக்கங்கள் பின்னோக்கிப் புரட்டப்பட்டன. <br /><br /><a href="http://photos1.blogger.com/blogger/5548/213/1600/Randor_guy_1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/5548/213/320/Randor_guy_1.jpg" border="3" alt="Randor Guy" /></a><br /><br />1931இல், இந்திய சினிமாவின் முதல் பேசும் படம் வெளிவந்தது. <a href="http://en.wikipedia.org/wiki/Alam_Ara">'ஆலம் ஆரா</a>.' படம் எடுத்தவர் ஆர்தேஷிர் இரானி. சப்தமில்லாத சினிமாவின் காலம் முடிந்துபோய்விட்டது என்பதை நன்கு உணர்ந்தவர்.<br /><br />அதே படத்தை தமிழிலும் எடுக்கலாம் என்று நினைத்தவருக்கு, தமிழில் அந்தப் படம் 'டப்' ஆகுமா என்று சந்தேகம் வந்தது. படத்தில் தமிழ் வசனங்கள் ஒலிக்காவிட்டால் எப்படி? அப்புறம் தெலுங்கு வசங்கள் சேர்த்தார். மீண்டும் சந்தேகம் தலைதூக்கியது. அதனால் இந்தி வசனங்கள் சிலதைச் சேர்த்தார் ('ஆலம் ஆரா' எடுத்ததால், ஹிந்தி கண்டிப்பாக ஒலிக்கும் என்ற நம்பிக்கை). <br /><br />இதனால் அறியப்படுவது என்னவென்றால், நாம் முதல் தமிழ் 'டாக்கீ' - ஒரு trilingual படம் என்பதே. சுதேசமித்திரனில் விளம்பரம் கொடுத்த போது, "<em>தமிழ்/தெலுங்கு பேசும் படம்</em>" என்று கொடுத்தார்கள். <br /><br />காளிதாஸ் படத்தில் நடித்த கதாநாயகி, டி. பி ராஜலக்ஷ்மி. மிகச் சிறிய வயதில் திருமணம் ஆகி, கணவர் பிரிந்து போய்விட, அந்த துக்கத்தில் அப்பாவும் இறந்துவிட்டார். தன்னந்தனியாக நிறுத்தப்பட்ட தாயும் மகளும், நாடகத்தில் சேர்ந்துவிடும் முடிவுடன் திருச்சி வந்து சேர்ந்தார்கள். ராஜலக்ஷ்மியின் தாய் தீர்க்கதரிசி. மகளின் ஆடல் பாடல் திறமைகளுக்கு இங்கு நிச்சயம் இடமுண்டு என்பதை நம்பினார். அந்தக் காலத்தில் இந்த முடிவை எடுக்க, பயங்கர தைரியம் இருந்திருக்க வேண்டும். <br /><br />திருச்சியில் ஜகன்னாத ஐயரை (பட இயக்குனர்)சந்தித்திருக்கிறார்கள். வந்திருந்த சின்னப் பெண்ணை நடித்துக்காட்டச் சொன்னாராம் அவர். அப்போது அருகிலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் ஒருவர். தமிழ் நாடகங்களின் தந்தை என்று புகழப்படும் சங்கரதாஸ் சுவாமிகள். "இந்தப் பெண் மிகப்பெரிய நடிகையாக வருவாள்," என்று ஆருடம் சொன்னவரும் அவர்தான். <br /><br />இன்று நம் காதாநயகர்களும் நாயகிகளும் என்னென்னவோ டைட்டில்களுடன் வலம் வருகிறார்களே? அன்று டி.பி.ராஜலக்ஷ்மியின் டைட்டில், 'சினிமா ராணி.' அது ஒன்றே போதுமானதாக இருந்தது. அன்றைய தேதியில் அவரது சம்பளம், மாதம் முப்பது ரூபாய். செய்தியைக் கேட்டதும் அவரது தாயால் விஷயத்தை நம்பவே முடியவில்லை. "நெஜமாவா? மாசாமாசம் முப்பது ரூவா தருவீங்களா?" என்று அதிசயத்துடன் கேட்டாராம். அப்போது ரூபாய் ஒன்றுக்கு பதினாறு படி அரிசி வாங்கலாம். பவுன் விலை பதின்மூன்று ரூபாய்.<br /><br />Windfall!<br /><br />பின்னாளில் வாசு தெரிவில், 'ராஜா நிவாஸ்' என்று பெரிய பங்களா கட்டிக்கொண்டு அதில் வாழ்ந்தார்கள். சினிமாவின் செழிப்பு அப்பேர்ப்பட்டது. <br /><br />அப்போதெல்லாம் புராணக் கதைகளையும், ராஜா ராணிக் கதைகளையும்தான் எக்கச்சக்கம். 'As is, where is,' முறையில் நாடக வசனங்களை அப்படியே திரைக்கு மாற்றினார்கள். 1933இல் அப்படி வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் <a href="http://www.intamm.com/movies/history/history1.htm">'வள்ளி திருமணம்.'</a> இதிலும் நம் 'சினிமா ராணி'தான் ஹீரோயின். Elephantstone Cinemaவின் ரிலீஸ். இயக்குனர் சாமிக்கண்ணு வின்செண்ட். படத்தைத் திரையிட்டபொது ஒரு ரீல் எங்கோ காணாமல் போய்விட, அது இல்லாமலேயே ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அப்புறம் எப்படியோ அது கிடைத்துவிட, கல்கத்தாவிலிருந்து (?!) அதை வரவழைத்து, "<em>காணாமல் போன ரீலுடன் சேர்த்து மீண்டும் திரையிடப்படுகிறது</em>" என்று ரி-ரிலீஸ் செய்தார்கள் ... படம் படு பயங்கர ஹிட்! <br /><br />இதைதான் ராசி என்கிறார்கள் போலும். <br /><br />அப்புறம் வந்ததுதான் தியாகராஜா பாகவதரின் பொற்காலம். [ ஃபிலடெல்ஃபியாவில் இன்று தி.பாவின் ரசிகர் மன்றம் முழுவீச்சில் செயல்படுகிறதாம்.]'பவளக்கொடி'யில் ஆரம்பித்து, அவருக்கென்று பித்துப்பிடித்து அலையும் ஒரு fan followingஐ உருவாக்கினார். [ஜெயகாந்தன் எங்கோ எழுதிப் படித்திருக்கிறேன்: பொன் கலர் ஜிப்பாவை அவர் அணிந்துகொண்டால், ஜிப்பா எது, கை எது என்று தெரியாத அளவு, பொன் நிறத்தில் இருப்பாராம். அவர் ட்ரெயினில் எங்காவது செல்லும்போது, ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று கூட்டம் அலைமோதுமாம். ஸ்டேஷனில் எங்காவது நின்றால், 'கொஞ்சம் வெளிய வந்து நில்லுங்களேன்,' என்று டிடிஆர் வந்து ரிக்வெஸ்ட் செய்துகொள்வாராம்.]<br /><br />Srinivas Cinetoneஐ ஆரம்பித்தவர் ஏ நாராயணன். அவரது மனைவி மீனாக்ஷியை அன்றைய மடிசார்மாமி என்று சொல்லலாம். கர்நாடக சங்கீதம் நன்கு தெரிந்த அவர்தான் தமிழ் சினிமாவின் முதல் பெண் இசையமைப்பாளர். ['ஒரு பெண்ணின் கீழ் வேலை செய்வதா?' என்று பலர் முறைத்துக்கொண்டு வெளியேறியதாகக் கேள்வி.]<br /><br /><div align=center><img src="http://img.photobucket.com/albums/v86/pavithra/RANDERGUYSPEECH_small.jpg" border=3 alt="Audience"></div><br /><br />அன்றைய மதராஸ் பட்டினத்தில், அவுட்டோர் ஷூட்டிங் எடுப்பதற்கென்று பரவலாக அறியப்பட்ட இடம் அடையாறு. மரங்கள் சூழ்ந்த பகுதி. வெய்யில் வந்தால்தான் ஷூட்டிங். ஏனென்றால் லைட்டிங்கிற்கெல்லாம் வசதியில்லை. மேகம் வரும்போதெல்லாம் உட்கார இடம் தேடி, சாப்பாட்டுக் கடையை முடித்து, இப்படியே சமாளித்திருக்கிறார்கள். சாப்பிட்ட பருக்கையையெல்லாம் காடு போல் வலர்ந்திருந்த பகுதியில் எல்லோரும் வீசியெறிய, அதைக் கொத்தித்தின்ன காக்காக்கூட்டம் வந்துவிடும். 'கா, கா," என்று அவை கத்தி அமர்க்களப்படுத்துவது ஷூட்டிங்கை பாதிக்கவே, அவற்றை விரட்டுவதற்காகவே தனியாக ஒரு Anglo-Indianஐ ஏற்பாடு செய்தார்கள்: படம் வெளிவரும்போது, 'Crow-shooter Joe' என்று டைட்டிலில் தெரியுமாம். <a href="http://plugin.smileycentral.com/http%253A%252F%252Fwww.smileycentral.com%252F%253Fpartner%253DZSzeb008%255FZNxdm824YYIN%2526i%253D4%252F4%255F1%255F3%2526feat%253Dprof/page.html" target="_blank"><img src="http://smileys.smileycentral.com/cat/4/4_1_3.gif" alt="SmileyCentral.com" border="0"></a><br /><br /><br />இதோடு ராண்டார் கைய்யின் பேச்சு முடிந்தது. அப்புறம் ஃபிலிம் கிளிப்புக்களை ஓடவிட்டு, அதனுடன் சேர்ந்து பேச ஆரம்பித்தார். பழைய மதராஸைக் காட்டும் சில படங்களைப் பார்த்தோம். முக்கியமாக 'என் மனைவி' [இதைப் பற்றி என் ஆங்கிலப் பதிவில் எழுதியிருக்கிறேன்]- மதராஸ் தெருக்களெல்லாம் ஈயோட்டிக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு முறை நான் பார்த்திருக்கீறேன். [<em>எனக்கு இதில் மிகப்பிடித்த வசனம்:<br /><br /><strong>சாரங்கபாணி</strong>: நாங்க இப்போ ஊரை விட்டு ரொம்ப தொலவு குடிபோயுட்டோம்.<br /><br /><strong>வந்தவர்</strong>; அப்படியா? மின்னே மைலாப்பூர்ல இருந்தேளே? இப்போ எங்கே?<br /><br /><strong>சா</strong> (மிகுந்த சோகத்துடன்): கோடம்பாக்கம்.<br /><br /><strong>வந்தவர்</strong>: அடப்பாவமே!<br /><br />ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். கோடம்பாக்கம் வெகு தொலைவாமே</em>!]<br /><br />படத்தில் ஆர் பத்மா என்றொரு நடிகை வருவார். கதைப்படி, பட்டிக்காட்டிலிருந்து வந்து, முதன்முறையாக மதராஸ் பட்டினத்தைப் பார்க்கும் வேலைக்காரப் பெண் அவர். வீட்டின் முற்றத்தில் அங்கும் இங்கும் 'தங்கு தங்'கென்று குதிப்பார். தமாஷாக இருக்கும். அவர் பாடும் பாட்டிலிருந்து:<br /><br /><em>"மானத்திலே போகுது பார் மாடில்லாத வண்டி!"</em> (ஏரோ ப்ளேன்)<br /><br />கடற்கரையில் கார்ப்பரேஷன் ரேடியோவில் அப்போதெல்லாம் (1930s) செம்மங்குடி, அரியக்குடி பாட்டுக்களையெல்லாம் ஒலிபரப்புவார்கள். அது பற்றியும் இந்தப் பாட்டில் வரும். பின்னாளில் கார்ப்பரேஷன் ரேடியோ 'ஆல் இந்தியா ரேடியோ'வாக மாறியது. <br /><br />கிடக்கட்டும். ஆர் பத்மா வாங்கிய பட்டம் என்ன தெரியுமா? Sex symbol! [ஜாக்கெட்டில்லாமல் வந்ததனால்.]<br /><br />அப்புறம் 'சபாபதி.' இதுவும் ஒரு (அன்றைய வார்த்தைகளில் சொன்னால்) 'காமிக்' படம். ரோஜா முத்தையா லைப்ரரி சென்றிருந்த போது, அதைப் பற்றிய விமர்சனம் ஒன்றைக் கண்டுபிடித்தேன். பேப்பர் கையில் உதிர்ந்து விழும்போல, அவ்வளவு பழையதாகவும், லேசாகவும் இருந்தது:<br /><br /><p align=center><strong>'சபாபதி'யில் சாரங்கபாணி!</strong></p><br /><br />"<em>சபாபதி டாக்கியில் ஸ்ரீ கே சாரங்கபாணி ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதராக நடிக்கிறாறென்ரறிந்து யாம் கழைபேருவகை எய்தினம். வெண்டிரைட் டண்டமிழ்ப் படத்தின் கண் இற்றைவரை நகைச்சுவை நடிப்பிற் பல் வேடம் புனைந்து மக்களைக் களிப்பூட்டுவார் சிலரேயாம்; மிகச் சிலரே யெனினும் பிழைபடா. இன்னவர்களி லின்று இயல்பே டொட்டியக்களி நடிப்பிறம்மோ டொப்பாரற்ற திறன் வாய்ந்த திரு சாரங்கபாணி என்பார், இச் 'சபாபதி,' வெண்டிரைப் படத்தினிற் றோன்றித் தண்டமிழ்ப் பண்டிதராய் நடிக்கிறாறெறுஞ் செய்தி கேட்டு உவகை யெய்தாத மாந்தரும் உளராங்கொல்! 'சபாபதி'யின்கண், சாரங்கபாணியின் ஆசிய நடிப்பினைக் கண்ணுற்ற வன்பர்களொரு கருத்தினராய்ப் புகழ்ந்த லிவண் நோக்கிற் பிற கூறுத லெற்றுக்கு </em>...?"<br /><br />- <strong>கல்கி இதழ், டிசம்பர், 1941</strong>. <br /><br />[<strong>கொடுந்</strong>தமிழைப் பார்த்து அயர்ந்துவிடாதீர்கள். படத்தில் சாரங்கபாணி ஆசிரியராக நடிக்கிறார் அல்லவா? அதான். தமிழ் ஆசிரியர் விமர்சனம் செய்வது போல் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். :) ஆனால் எழுதி முடிப்பதற்குள் கை உடைந்தே போய்விட்டது.]<br /><br />அப்புறம் 'தியாக பூமி' படம். முதல் முறையாக பேபி சரோஜாவைப் பார்த்தேன். 'பாங்கிள் வாங்கலாமா?' என்று ஏதோ பாடிக்கொண்டிருந்தார். இந்தப் படம் வந்த பிறகு எல்லோருக்கும் பேபி சரோஜா பைத்தியம் பிடித்து சகலத்திற்கும் அவர் பெயரை வைத்து (ஜாப்பானிய சோப்புக்குக் கூட!), கோர்ட் வரை சென்று அதை நிறுத்தியிருக்கிறார்கள்.<br /><br />'ஜெனோவோ' படத்தில் (பெயர் சரியா என்று தெரியவில்லை), எம்ஜியார் கிறிஸ்துவ மணமகனாக வந்து அசத்துகிறார். 'கைதி' என்றொரு படம் - எடுத்தவர் எஸ். பாலசந்தர். Humphrey Bogartஇன் Dark Passage படத்தின் தமிழ் ரீமேக்காம். அதற்கு முதலில் இயக்குனர் 'இரத்தம்' என்று பெயர் வைக்க, ஜூபிட்டர் பிக்சர்ஸ் அதை ரிலீஸ் செய்யும்போது 'இரத்தம் ஓடுகிறது' என்று வரவே, எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகி, back அடித்துவிட்டர்கள். அப்புறம் 'கைதி' (இயக்குனருக்கு அவ்வளவாக இஷ்டமில்லையென்றாலும்) என்று பெயர் மாற்றினார்களாம். <br /><br />அன்றைய தமிழ் பற்றி ராண்டார் கை சொன்னது ஜாலியாக இருந்தது. அதிலும் 'மங்கம்மா சபதம்' படத்தில் அரச வேடம் பூண்டு வரும் ரஞ்சன், "<em>இவா ஊதுவா, அவா வருவா</em>," என்று பேசும் 'வசனம்' ... <a href="http://plugin.smileycentral.com/http%253A%252F%252Fwww.smileycentral.com%252F%253Fpartner%253DZSzeb008%255FZNxdm824YYIN%2526i%253D4%252F4%255F1%255F205%2526feat%253Dprof/page.html" target="_blank"><img src="http://smileys.smileycentral.com/cat/4/4_1_205.gif" alt="SmileyCentral.com" border="0"></a><br /><br />கண்ணாம்பாள் நடித்த பழைய 'கண்ணகி' படம் வேறு மாதிரி. அவர் தெலுங்கு நடிகையல்லவா? தமிழ் வசனங்களை தெலுங்கில், கரும்பலகையில் எழுதி கேமராவுக்குப் பின்னால் மாட்டியிருந்ததர்களாம். கண்ணகியாக அவர் ரௌத்ரம் பொங்க, கண்களில் ஆத்திரம் தெறிக்க, இறுதிக் காட்சியில் ஆவேச வசனம் பேசும்போது "என் பேச்சூ, என் மூச்சூ..." என்று தெலுங்கூஊ ஸ்டைலில் இழுக்க ... ரஷ் பார்க்கும்போது, "என்ன சார் இது?' என்று சிரிப்பு தாங்க முடியாமல் இயக்குனரைக் கேட்டிருக்கிறார்கள். அவர் கையைப் பிசைந்துவிட்டு, 'எப்படியோ போகட்டும்," என்றாராம். [அப்புறம் மனோகரா படத்தில் அவரது "பொறுத்தது போதும், பொங்கியெழு," வசனம் தன்னுடைய அற்புத வசனங்களையெல்லாம் சாப்பிட்டு விட்டதாக சிவாஜி கணேசன் ஜோக்கடிப்பாராம். இன்னொரு சுவாரஸ்யமான டிட்பிட்: 'மனோகரா' நாடகமாக நடத்தப்பட்டு வருகையில், கண்னாம்பாவின் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் சிவாஜிதான்! Ironic, இல்லை? ]<br /><br />'காதலிக்க நேரமில்லை' படத்தின் கடற்கரைப் பாட்டுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. <br /><br />கொட்டும் மழை நின்றிருந்தது. எனக்கு ஒரு ரோ முன்னாலமர்ந்திருந்த ஐக்காரஸ் பிரகாஷைப் பார்த்து ஹலோ சொன்னேன். [இருவரும் சினிமா ஸ்டைலில் "நீங்கதான...? என்று ஆரம்பித்தோம்.]வெளியே விற்றுக்கொண்டிருந்த 'எம் கே டி'யின் புத்தகம் ஒன்றை வாங்கிக்கொண்டு, ஐகாரஸ்ஸுடன் பேசிக்கொண்டே மைலாப்பூர் தெருக்களில் நடந்தேன். பழைய சென்னையின் வாசத்தில் மிதந்தவாறு வீடு வந்து சேர்ந்தேன். <br /><br /><strong>பி.கு</strong>: Madras University Senate House Restoration பற்றிய என் ஆங்கிலப் பதிவு <a href="http://pavithra.rediffblogs.com/2006_27_08_pavithra_archive.html#1157167858">இங்கே</a>.</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5647678.post-1156932146645845712006-08-30T15:28:00.000+05:302006-08-30T17:31:03.813+05:30<strong><font size=4><u>"A-ஆ!"</u></font></strong><br /><br /><font size=2>அவசர அவசரமாக ஒரு மொழிபெயர்ப்பு rant:<br /><br />"அவனை அங்கே அனுப்பணும்னு நீதான் தலைகீழ நின்னே..." என்கிறது தமிழ்.<br /><br />அதை "You only were standing upside down on the head to send him there" என்றா மொழிபெயர்ப்பது? <br /><br />[bangs head on desk]<br /><br />[end rant]</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5647678.post-1156786623477370392006-08-28T23:04:00.000+05:302006-09-01T08:59:21.290+05:30<strong><font size=4><u>சென்னையும் படச்சுருளும்</u></font></strong><br /><br /><font size=2>Madras in Movies. "சென்னையில் சினிமா'வா நீங்க எடுத்துக்கிட்ட தலைப்பு?" என்று வின்சென்ட் டி'சௌசா கேட்க, கொஞ்சம் யோசித்துவிட்டு (பக்கத்தில் இருக்கும் யாரோ ஒருவரிடம் கலந்தாலோசித்துவிட்டு) 'இதுதாங்க,' என்று உரைக்குப் பெயரிட்டவர் அவரே. <br /><br />சென்னை தினம் போய் சில நாள் ஆகிவிட்டாலும், மதராஸ்பட்டினக் கொண்டாட்டங்கள் இன்று மாலை ஐந்தரை மணியளவில், கனிமொழியின் கவிதைப் பேச்சுடன் முடிவடைந்தன. ஒரு பெரிய திருவிழாவைக் கண்டு களித்த உணர்வுடன் திரும்பினேன். <br /><br />முந்தைய இரண்டு நாட்களில் நடந்தவை exclusively சினிமா. பின்னது பழைய்ய்ய காலச் சினிமா. ஒன்று இயக்குனர் ஹரிஹரனின் உரை. மற்றொன்றுதான் மேலே குறிப்பிட்ட ராண்டார் கைய்யின் உரை. <br /><br /><b>படச்சுருள் - 1</b> <a href="http://plugin.smileycentral.com/http%253A%252F%252Fwww.smileycentral.com%252F%253Fpartner%253DZSzeb008%255FZNxdm824YYIN%2526i%253D5%252F5%255F8%255F4%2526feat%253Dprof/page.html" target="_blank"><img src="http://smileys.smileycentral.com/cat/5/5_8_4.gif" alt="SmileyCentral.com" border="0"></a> <br /><br />"நான் படமெடுத்தால் எதுவும் புரியாது" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார் <a href="http://www.imdb.com/name/nm0363029/">ஹரிஹரன்</a>. சேமியர்ஸ் கடையில் நடந்த நிகழ்ச்சி இது. காபி, பிஸ்கெட் எல்லாம் மென்று தின்று ருசித்துவிட்டு, ஆவலாக உட்கார்ந்திருந்தோம். ஒரு புன்னகையுடன் ஹரிஹரன் எழுந்து மைக் முன்னால் நின்றார். <br /><br />[<em>கூட்டத்தில் சிரிப்பலை பரவியது. கூடவே ஆச்சர்யமும். என்னதான் தன்னடக்கம் என்றாலும்</em>...]<br /><br />உடனேயே தொடர்ந்தார். "நான் <a href="http://movies2.nytimes.com/gst/movies/filmography.html?p_id=191072">Mani Kaul</a>லின் கலையுலக வாரிசு என்று ஒரு காலத்தில் பரவலாக அறியப்பட்டவன். பெரிய இயக்குனர் என்று பாராட்டு பெற்றவர் அவர். அவருடைய படங்கள் யாருக்கும் புரிந்ததில்லை. அதே போலத்தான். நான் எடுத்த படமும் யாருக்கும் புரியவில்லை. 1977/78இல், <a href="http://www.mouthshut.com/review/Ghashiram_Kotwal-98617-1.html">'காசிராம் கோட்வால்'</a> என்று ஒரு படம் எடுத்தேன். அது என்னென்னவோ ஃபிலிம் பெஸ்டிவலுக்கெல்லாம் சென்றது.<br /><br />அப்புறம் அவ்வளவுதான். <br /><br />எனக்கோ படம் எடுக்க வேண்டும் என்று பயங்கர ஆசை. ஆனால், எப்படி, என்ன செய்வது என்று புரியவில்லை. கையில் காசில்லை. அப்போதுதான், சிபிடியின் ஷந்தாராம், 'சென்னைக்கு வருகிறாயா? குழந்தைகளுக்காகப் படம் எடுக்கிறாயா?" என்றார். எனக்கோ படம் எடுத்தால் போதும் என்று இருந்தது. பம்பாயில் ஒரு கணம் கூட இருக்க முடியவில்லை. உடனே கிளம்பிச் சென்னை வந்துவிட்டேன்."<br /><br />[<em>கொஞ்சம் அமைதி</em>.]<br /><br />"சென்னையைப் போல் சினிமா எடுப்பதற்கென்றே அமைந்த இடத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. நான் வந்த காலத்தில், சென்னைதான் தென்னிந்திய சினிமாவுக்கே தலைநகரம் போல. ரொம்ப ஆரம்ப காலங்களில் புராணப்படங்களாக எடுத்துத் தள்ளினனர்கள். அப்புறம் தேசப்பற்றுப் படங்கள் வந்து குவிந்தன. அப்போதும், அதற்குப் பிறகும் சென்னைதான் எல்லாவற்றுக்கும் செண்டர். தெலுங்கு, மலையாளம் என்று எல்லாவித மொழிப்படங்களுக்கும் சென்னை டெக்னிஷியன்களைத்தான் நம்பினார்கள். இந்தியா மொத்தத்தில் எடுக்கப்பட்ட படங்களுக்கு, 65% லேபர் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு. அந்த விஷயத்தை நினைத்துப் பெருமிதப்பட்டுக்கொள்ளலாம். <br /><br />நம் ஊரில்தான் டெக்னிஷியன்கள் (இட்லி, பொங்கலுக்கு ஆசைப்பட்டாவது) நேரத்துக்கு வந்து சேர்வார்கள். Near-obese ஹீரோயின்கள் தெற்கேயும் வடக்கேயும் நடை பழகுவார்கள் - எந்த வெயிட்டும் குறையாமல், முகத்தில் அப்பிய மேக்-அப் கரையாமல். எப்போதும் குடிபோதையில் மயங்கிய கவிஞர்கள் காவியங்கள் படைப்பார்கள். நம் ஊர் சினிமாவுக்கும் ஆல்கஹாலுக்கும் தொன்றுதொட்டு வந்துள்ள உறவுக்கு ஒரு உதாரணம்: எங்கள் எல் வி பிரசாத் லேபுக்கு எப்படி வந்து சேர்வது என்று யாராவது வழி கேட்டால், 'அத்தாங்க, ரோஸி வைன்ஸுக்கு எதுத்தாப்புல!' என்று பட்டென்று பதில் வரும்!"<br /><br />அநேகமாக, தமிழ்நாட்டிலிருந்து வந்து ஹிந்தியில் ஓரளவு எடுபட்ட ஒரே ஹீரோ கமல்தான் என்று நினைக்கிறேன். அவரும் முயற்சிதான் செய்தார். பெரிய ஹிட்டாகவில்லை. <br /><br />நம்மூரில் (சென்னை) கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களாக இருந்தால் உடனே நண்பர்களாக வரித்துக் கொண்டுவிடுவார்கள். இயக்குனர் இசையமைப்பாளரின் பார்ட்டியில் இருக்கும் ஒருவரிடம், "இந்தப் பாட்டு ஹம்சத்வனி ராகம்தானே?" என்று கேட்டால், உடனே மலர்ந்து போய் இன்ஸ்டண்ட் ஃப்ரெண்டாகிவிடுவார். சென்னைக்காரர்களின் மனது அப்படி. <br /><br />இங்கேயிருப்பவர்களின் அசாதாரண தைரியம் இன்னொரு விஷயம். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பேனாவிஷன் கேமராவை இறக்குமதி செய்வார்கள். "இத்தனை செலவு உங்களுக்கெப்படிக் கட்டுபடி ஆகும்?" என்று விசாரித்தால். "எல்லாம் ரெகவர் பண்ணிக்கலாம் சார்," என்று அசால்ட்டாகப் பதில் வரும். ஜெர்மனியிலிருந்து வரும் விலைமதிப்பில்லாத equipmentடெல்லாம் அங்கே எப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்று தெரியாது ... ஆனால் அவை இங்கே மாற்றி மாற்றி கன்னாபின்னாவென்று ஷிஃப்ட் ஓடும். ஜெர்மனி மெஷினின் உண்மையான test இங்கே சென்னையில்தான் நடக்கிறது!" <br /><br />[<em>சிரிப்பு.</em>]<br /><br />"எல் வி பிரசாத் ஸ்டுடியோ ஆரம்பித்த கதை கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும். தனக்கென்று தனியாக லாபம் எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் படமெடுப்பதிலேயே பணத்தைப் போட்டவர் அவர். ஒரு முறை, அவர் பம்பாயில் ஃபிலிம் எடிட்டிங்கிற்குக் கொடுத்த போது, ஒரு ரீல் ஸ்க்ராட்ச் ஆகி வந்தது. "இதை மாற்ற வேண்டும்,"<br />என்று அவர் சொல்ல, "விடுங்க சார், இதெல்லாம் இங்க சகஜம்," என்று அவர்கள் பதில் சொல்ல, எல் வி பிரசாத விடாப்படியாக ரீலை மாற்றீனார். அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்த, நெப்ராஸ்காவில் படித்து வந்திருந்த அவரது மகன், "அப்பா, இந்தப் படம் ஓடினால், நான் உங்களுக்கு ஒரு லாப் கட்டித் தருகிறேன்." என்று சபதம் போட்டார். அப் எல் வி பிரசாத் எடுத்துக்கொண்டிருந்த படம்? 'ஏக் துஜே கே லியே.' சுப்பர் ஹிட். உடனே ஸ்டுடியோவும் லேப்பும் ரெடியாகிவிட்டன! <br /><br />இவ்வளவு பெரிய மனிதர், மதியம் ஒரு குட்டி டப்பாவில்தான் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவார். வீட்டுச் சாப்பாடுதான் உயர்ந்தது என்பதைப் புரிந்துகொண்ட மனிதர். <br /><br />பம்பாயில் எனக்குப் பிடிக்காத இன்னொரு விஷயம் - "உங்க ஊர்ல சினிமாவில எல்லோரும் சேர்றதே சிஎம் ஆகத்தான்!" என்று ஒரு அடி அடிப்பது. இல்லையென்றால் 'தமிழ் ஷாவினிசம்' பற்றி உளறுவது. எனக்கு ஒன்று புரியவில்லை: தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவரான எம்ஜியாரை தலைவராக்கிப் பார்த்த தமிழ் சினிமாவை எப்படி 'தமிழ் ஷாவினிசம்' கொண்ட இடமாக நினைப்பது?<br /><br />அது ஒரு பக்கம். இவர்கள் 'Wholesome entertainment' உள்ள படங்களை எடுப்பதாக வேறு சொல்லிக்கொள்கிறார்கள். அப்படியென்றால் என்ன? நோஞ்சானாகப் படம் பார்க்கப்போகும் எல்லோரும் புஷ்டியாகத் திரும்பி வருவார்கள் போலிருக்கிறது. அதுதானே wholesome?"<br /><br />[<em>New Wave Cinema பற்றிப் பேச்சு வர, அதைப் பற்றியும் சொன்னார்</em>. ]<br /><br />"19977/78 வரை இருந்த சினிமா வேறு. அந்தக் காலங்களை எம்ஜியாரும் சிவாஜியும் ஆட்சி செய்தார்கள். ராஜ ராஜ சோழன் படத்துடன் சிவாஜியின் அப்பீல் இறங்க ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். அதேபோல், எம்ஜியாருக்கு 'உலகம் சுற்றும் வாலிபன்.' இந்தப் படங்களிலிருந்துதான், அவர்களால் அவர்களது இமேஜை முழுதாகக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போக ஆரம்பித்தது. அப்புறம் வந்தது எமர்ஜென்ஸி. தமிழ் சினிமாவும் மாறத் தொடங்கியது. <br /><br />திடீரென்று புத்தம்புதிய இயக்குனர்களும், வித்தியாசமான படங்களும் முளைத்தன. சிந்தனைகள், செயல்பாடுகள், இதுவரை இருந்த சில கட்டுப்பாடுகள் ... எல்லாம் தகர்த்தெறியப்பட்டன. These new films attacked the hegemony of previous cinema. பாலுமஹேந்திரா, அஷோக்குமார், பி சி ஸ்ரீராம் என்று புத்தம்புதியவர்கள் தோன்ற ஆரம்பித்த நேரம். And they were unapologetic about their work, their stories and screenplays. எம்ஜியாரும் சிவாஜியும் பேசிய ஒரு மாதிரி செயற்கைத் தமிழ் காணாமல் போயிற்று. இயக்குனர் பாக்யராஜ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. "நான் எங்க சார் அந்த மாதிரி தமிழ் பேசறேண்?" என்றார், நான் ஒரு முறை அவரது திரைக்கதைகளைப் பற்றிக் கேட்ட போது. "அவங்க பேசற பாஷை எனக்குப் புரியலை. நான் எப்படிங்க அந்தத் தமிழ்ல எழுத முடியும்?" <br /><br />அதுதான் சரி என்று எனக்குத் தோன்றியது. <br /><br />நான் 'ஏழாவது மனிதன்' எடுத்த போது, ஒரு காட்சி அமைத்தோம்: புகை மண்டலத்தின் வழியே ஒரு டிரெய்ன் வருவதுபோல். பக்கத்தில் உள்ள ஒரு சிமெண்ட் ஃபாக்டரியிலிருந்து புகை சூழ்வது போலும் அமைத்தோம். அந்தக் காட்சி திரையில் தோன்றியபோது எழுந்த கைதட்டலுக்கு நான் ஆச்சர்யப்பட்டுப்போனேன். இதில் கை தட்ட என்ன இருக்கிறது? <br /><br />மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்பது நன்றாகப் புரிந்தது. <br /><br />1985யில் இந்த நியூ சினிமாவின் வீச்சு குறைய ஆரம்பித்தது. அதன்பின் வந்த காலங்களில், இரண்டு இயக்குனர்கள் சினிமாவின் போக்கை மாற்றினார்கள் என்று சொல்வேன். ஒருவர் மணிரத்னம். அவர் எப்படிப்பட்ட படங்கள் எடுத்தார், எப்படி திரைக்கதை அமைத்தார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை - உங்களுக்கே தெரியும். ஹிந்திக்குச் சென்றால்தான் முன்னேறலாம் என்ற நிலையை மாற்றியவர்களின் முன்னோடி அவர். அவர்தான் ஐஸ்வர்யா ராயை தமிழுக்குக் கொண்டு வந்தவர். தமிழ்தான் எல்லாம், என்ற நிலைக்கு அவர் முக்கிய காரணம். <br /><br />இன்னொருவர் யார் தெரியுமா? டி. ராஜேந்தர்."<br /><br />[<em>ஹாலில் சட்டென்று மயான அமைதி. யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. <br /><br />ஹரிஹரன் புன்னகையுடன், "என்ன அப்படிப் பாக்கறீங்க? நெஜமாத்தான்," என்றார், ஆங்கிலத்தில். <br /><br />"என்ன சார் சொல்றீங்க?</em>"]<br /><br />"இல்லையா பின்னே? அவரை மாதிரி யோசிக்கத் தனி திறமை வேண்டும். 'என் இதயம் துடிக்குதே!' என்று உருக்கமான பாட்டு வரி இருந்தால், எல்லாபக்கமும் இரத்தக்குழாய்கள் ஒடும் ஒரு பெரிய கார்ட்போர்ட் அட்டை ஹார்ட்டை ஓட வைப்பார். அது கருஞ்சிவப்புக் கலரில் பூதாகாரமாக ஸ்கிரீன் முழுக்க நகரும். கேட்டால், "டெக்னிக்கு சார், டெக்னிக்கு," என்பார். என்ன டெக்னிககென்று புரியவில்லை ..."<br /><br />[<em>மீண்டும் சிரிப்பு</em>.]<br /><br />"தமிழ் சினிமாவின் அத்தனை stereotypeஐயும் உடைத்தவர் அவர். கேரளாவில் 'என் தங்கை கல்யாணி' படம், ஆறு ஷோ ஓடியது தெரியுமா? காலை ஏழு மணிக்கெல்லாம் படம் பார்க்க கியூவில் நிற்பார்கள். என்ன லாஜிக்?! ஆனால், அதுதான் சினிமா." <br /><br />[<em>டப்பிங் படங்கள் பற்றிப் பேச்சு வந்தது</em>.]<br /><br />"டெர்மினேட்டர் படம் டப் ஆகி தமிழில் வந்த போது, பிபிசியில் இருந்த நார்மன் பிரௌன் அதைக் கேட்டுவிட்டு, "Schwarzeneggar sounds better in Tamil,"என்றார். எனக்குத் தெரிந்து, 'மம்மி' படம்தான் சக்கை போடு போட்டது என்று நினைக்கிறேன். 'கல்லறை மனிதன்' என்ர பெயரில். <br /><br />[<em>'இம்சை அரசன் இருபத்துமுன்றாம் புலிகேசி பயங்கர ஹிட் ஆகியதே? இனிமேல் சரித்திரக் காமெடிகள்தான் ஓடுமா?</em>]<br /><br />"நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தால், புலிகேசி படத்தில் மக்கள் அதிகம் ரசித்தது, நிகழ்காலப் பிரச்சனைகளையும், அரசியலையும் அந்தப் படத்தில் கோடிகாட்டியிருப்பதைத்தான். அதனால் பயப்பட வேண்டாம்: அப்படியெல்லாம் சரித்திரப் படமாக எடுத்து நம்மைப் பழி வாங்க மாட்டார்கள்." <br /><br />[<em>இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் mindless தமிழ்க் காதல் படங்களைப் பார்த்துக்கொண்டே இருப்பது?</em>]<br /><br />"Mindless என்று சொல்லாதீர்கள்." [நெஞ்சில் கை வைத்துக்கொண்டு] "எனக்கு மிகப் பிடித்ததே அந்த மாதிரியான படங்கள்தான். நம்முரில் இரண்டு வகைப் படங்கள் உண்டு: ஒன்று dramatic வகை. இன்னொன்று melodramatic வகை. நம்மூர்க்காரர்களுக்கு இரண்டாவது வகையின் மீது மோகம் அதிகம். அதனால் அவையெல்லாம் mindless ஆகிவிடாது." [கண்ணடித்தார்]<br /><br />[<em>ரஜினி படங்களில் 'முத்து'வைப்போல் மற்ற படங்கள் ஓடாதது ஏன்?</em>]<br /><br />"ஒரு ரகசியம் சொல்கிறேன்: ஜப்பானியர்களுக்கு மீனா மேல்தான் காதல். அவரில்லாததால் மற்ற படங்கள் ஓடவில்லை."<br /><br />[<em>கடைசியாக ஒரு சினிமா செய்தி ...?</em>]<br /><br />"தாராசந்த் பர்ஜாட்யா என்று ஒரு தயாரிப்பாளர் இருந்தார். அவர் இன்கம் டாக்ஸ் கட்ட மாட்டேனென்று தகராறு செய்வார். 'அதான் எண்டர்டெயின்மெண்ட் டாக்ஸ் கட்டப்படுகிறதே, நான் ஏன் இன்கம் டாக்ஸ் கட்டவேண்டும்?'' என்று வாதாடுவார். 'ஐயா, அதை மக்கள் கட்டுகிறார்கள்; நீங்கள் கட்டவில்லை. நீங்கள் வருமான வரி கட்டித்தான் ஆக வேண்டும்,' என்று சொன்னால், 'அதான் எவனோ கட்றானே, அப்றம் என்ன?' என்பார்.<br /><br />வாழ்நாள் முழுவதும் வரி கட்டாமல் தப்பிக்க என்னெல்லாம் வழி உண்டோ அத்தனையையும் செயல்படுத்தினார், அவர். அப்புறம் ஒரு நாள் பெரிய தப்பொன்று செய்தார். ஒரு படத்திற்கு distribution rights எடுத்தார். அந்தப் படம் என்ன தெரியுமா? Sholay. <br /><br />பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. பிய்க்காமலும் கொட்டியது. நொந்து போனார் பர்ஜாட்யா. புதுமுகங்களை வைத்து, ஃப்ளாப் கொடுத்த இயக்குனர்களை வைத்தெல்லாம் படம் தயாரித்தார். எல்லாம் செம ஹிட். 'சினிமாவும் ஆச்சு, புண்ணாக்கும் ஆச்சு,' என்று சொத்தையெல்லாம் அஸ்ஸெட்டாக வாங்கிப் போட்டு freeze செய்தார். 'நஷ்டமாகப் போனால் போகட்டும்' என்று சூளுரைத்தார்.<br /><br />ஒரு நாள் அவர்து பேரம் வந்தான். 'தாத்தா, எனக்கு ஒரே ஒரு படம் எடுக்க வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. ஒன்றே ஒன்று. புதுமுகங்களாகப் போடுகிறேன். எடுக்கத் தெரியாமல் எடுக்கிறேன். கண்டிப்பாக நஷ்டமாகும் தாத்தா. அந்த ஒரு படத்தையாவது நான் எடுக்க வேண்டும்,' என்று கெஞ்சினான். பேரனின் ஆசையைக் கெடுப்பானேன் என்று அவர் சம்மதிக்க ...<br /><br />அந்தப் பேரன் எடுத்த படம் Maine Pyar kiya. பேரன் பெயர் சூரஜ் பர்ஜாட்யா.<br /><br />அதிர்ச்சியில் நொந்து நூலாகிப் போன தாராசந்த் என்ன செய்தார் தெரியுமா? <br /><br />இரண்டே வாரத்தில் மாரடைப்பில் போய்ச் சேர்ந்தார்!"</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5647678.post-1156416403314482602006-08-24T14:50:00.000+05:302006-08-25T16:49:27.370+05:30<strong><font size=4><u>ஐந்து விரல்</u></strong></font><br /><br /><font size=2>இன்று காலை, வேலை விஷயமாக வெளியே போயிருந்தப்போது, யதேச்சையாக <a href="http://kalairani.net/">கலைராணி</a>யைச் சந்திக்க நேர்ந்தது. படு கேஷுவலாக, பிங்க் கலரில் பான்ச்சோவும் மணி மாலைகளும் அணிந்துகொண்டிருந்தார். <br /><br />நான் வந்த வேலையை மறந்து (ஒரு கணம்) "Oh my God!உங்களை இங்க பார்ப்பேன்னு நினைக்கவேயில்லை!" என்று சொல்ல, அவர் அதை எதிர்பார்க்கவில்லை என்பது நன்கு தெரிந்தது. 'இங்கே யாருக்கு நம்மை அடையாளம் தெரியப்போகிறது?' என்று நினைத்திருப்பார் போலும். <br /><br />கலைராணியை எனக்கு '<a href="http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/devadhai.htm">தேவதை</a>' நாட்களிலிருந்து பிடிக்கும். அந்தப் படத்தில், கீர்த்தி ரெட்டியிடம் அவர் நாட்டுப்புறக் கதை சொல்வார் பாருங்கள் ... கதையில் தலையில்லாத முண்டமாக வரும் இராட்சசன் ராஜகுமாரியைக் காதலிப்பதாக வரும் இடத்தில், தலையின் மேல் புடவைத் தலைப்பை போட்டுக்கொண்டு அவர் நடித்த நடிப்பில் நிஜமாகவே தலையற்ற முண்டம் ஆடுவது போலிருக்கும். படத்தின் அந்தக் காட்சிக்காக நான் காத்திருந்து, ரசித்துப் பார்ப்பேன். Eerie, I tell you. அதுவும் கூத்துப்பட்டறைக்காரர்களின் சிறப்புதான். அவருடைய நடிப்பின் வீர்யத்தைப் பார்த்து அசந்து போனேன். ['பரமார்த்த குரு பார்த்தேன் என்று சொன்னபோது, ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி, "நல்லா இருந்துச்சா?" என்றார்.]<br /><br />வேலை முடிந்து (நான் வந்த வேலையில் அவரும் சம்பந்தப்பட்டிருந்தார் என்பது பிறகு தெரிந்தது), கிளம்பும் சமயத்தில் திடீரென்று ஆட்டோகிராஃப் வேண்டும் என்று நான் புக்கை நீட்ட, "அய்யோ!" என்று சீட்டில் சாய்ந்தவர்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு சொன்னார் - அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையாம். அப்புறம் ஐந்து விரல்களை வரைந்து, உள்ளுக்குள்ளே பெரிதாக எழுதிக்கொடுத்தார்.<br /><br />அதான். தலைப்பில் ஐந்து விரல். Heh.<br /><br /><strong>பி.கு</strong>: இன்று <a href="http://chennai.metblogs.com/archives/2006/03/chamiers.phtml">சேமியர்</a>ஸில் 'சென்னையில் சினிமா' பற்றி நிகழ்ச்சி.</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5647678.post-1156245898535488852006-08-22T16:49:00.000+05:302006-08-22T16:54:59.243+05:30<font size=4><u><strong>இது சென்னை வாஆஆஆரம்</strong>!</u></font><br /><br /><font size=2>மெட்ராஸ் வாரம் ஆரம்பமாகிவிட்டது. நேற்று, மெட்ராஸ் மியூஸிங்ஸ் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். டாக்டர் வெங்கடாசலபதியின் உரையைக் கேட்டு அசந்து போனேன். அது இங்கே, <a href="http://pavithra.rediffblogs.com/2006_20_08_pavithra_archive.html#1156223005">ஆங்கிலப் பதிவில்</a>. <br /><br />தமிழில் எழுத வேண்டும்: ஏழு பக்கங்களை மொழிபெயர்ப்பதென்றால் விழி பிதுங்குகிறது. பார்க்கலாம்.</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5647678.post-1155993641511964852006-08-19T18:48:00.000+05:302006-08-26T11:24:28.406+05:30<strong><u><font size=4>கூத்துப்பட்டறையில் பரமார்த்த குரு</font></u></strong><br /><br /><br /><a href="http://photos1.blogger.com/blogger/5548/213/1600/guru.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/5548/213/320/guru.jpg" border="0" alt="" /></a><br /><br /><font size=2><a href="http://www.ciil.org/Main/Announcement/MBE_Programme/paper/paper26.htm">பரமார்த்த குரு</a>வின் கதை உங்களுக்குத் தெரியும்தானே? பதினெட்டாம் நூற்றாண்டில் ·பாதர் பெஸ்கி (தூய தமிழில் சொன்னால் பெசுகி :)) என்னும் வீரமாமுனிவர் எழுதிய நூல். பரமார்த்த குரு என்பவரும், அவரது அறிவற்ற, மூட சிஷ்யர்களையும், அவர்கள் அடையும் வெவ்வேறு அனுபவங்களைப் பற்றிய கதை. அன்றைய சமூகத்தைப் பார்க்கும் ஸடையர் பாணி. <br /><br /><a href="http://www.koothu-p-pattarai.org/koothupattarai/services.htm">கூத்துப்பட்டறை</a>யில் அதை நாடகமாக்கியிருக்கிறார்கள். அல்லையன்ஸ் ·ப்ரான்ஷேயில் பதினைந்தாம் தேதியிலிருந்து நடத்தி வருகிறார்கள். நாளைதான் (20th ஆகஸ்ட்)கடைசிக் காட்சி. <br /><br />ஈமெயிலைப் பார்த்தவுடன் போய் வருவது என்று தீர்மானித்துக்கொண்டேன். அதன்படி, போய், பார்த்து, ரசித்து, வந்துவிட்டேன். வந்த சூட்டுடன் மனதில் நின்றவற்றை அப்படியே எழுதிவிடவேண்டும் என்ற எண்ணம் பீடித்துக்கொள்ள, ப்ளாக்கரும் கீபோர்டுமாக உட்கார்ந்துவிட்டேன் (சனிக்கிழமை சன் டீவியின் 'ஆனந்தம்' படத்தையும் கண்டுகொள்ளாமல்.)<br /><br />கூத்துப்பட்டறைக்காரர்களின் காட்சியமைப்பையும் கதையமைப்பையும் இதற்கு முன்னேயே நான் ரசித்ததுண்டு: 'பொன்னியின் செல்வன்' நாடகமாக அமைத்தபோது. நான்கு மணி நேரம் எங்கே சென்றதென்றே தெரியவில்லை. அதன்பிறகு 'பட்டம்' என்றொரு நாடகம் பார்த்தேன். [இந்த நாடகங்கள் <a href="http://www.digantik.com/digantik/specials/theatre%20trail/pmagic.htm">மேஜிக் லேண்டர்ன்</a> குழுவால் அரங்கேற்றப்பட்டாலும், இவற்றில் முக்கியப் ப்ங்கு வகித்த பசுபதி (விருமாண்டி ஆள்தான்) கூத்துப்பட்டறை குழுவில் பல வருடங்கள் இருந்தவர்.] எதையும் வித்தியாசமாகப் பார்க்கும் அபூர்வத் தன்மை படைத்தவர்கள்.<br /><br />பரமார்த்த குரு கதையையும் அப்படியே எடுத்திருக்கிறார்கள். <br /><br />நேரமாகிவிட்டதோ என்ற பரபரப்புடன் மதியம் மூன்று மணி ஷோவிற்குப் பறந்தடித்துக்கொண்டு Alliance Francaiseவிற்குச் சென்றால், அங்கு ஆளற்று ஏகாந்தமாக இருந்தது. பரமார்த்த குரு போஸ்டரைப் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்த வாட்ச்மேனைப் பிடித்து விவரங்கள் கேட்டு தபதபவென்று இரண்டாவது மாடிக்கு ஓடி பட்டுப்புடவையில் ஜொலித்த இரு பெண்மணிகளை முந்திக்கொண்டு (பாஸ் ஏதாவது வைத்திருந்தார்களோ என்னவோ?) டிக்கெட் வாங்கிக்கொண்டு அவசரமாகக் கையெழுத்துப்போட்டுவிட்டு அவர்கள் கொடுத்த காகிதம் கப்பெல்லாம் பொறுக்கிக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தால்...<br /><br />... சுடலை, இடுப்பில் சங்கிலியும் காதில் தொங்கட்டானும் தலையில் கொண்டையுமாக நாற்காலிகளுக்குப் பின்னால் 'தங்கு தங்க்'என்று குதித்துக்கொண்டிருந்தாள். <br /><br />அல்லையன்ஸ் ·ப்ரான்ஷேவின் தியேட்டர் அமைப்பை முழுதாக நான் ரசித்தது அந்தக் கணங்களில்தான்.<br /><br />ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. ஏதாவது ரிகர்ஸல் சமயத்தில் எக்குத் தப்பாக நுழைந்துவிட்டோமாவென்று நானும், என் பின்னால் வந்த பட்டுப்புடவைகளும் யோசித்துக்கொண்டிருந்த போது, அங்கேயிருந்த சல்வார் கமீஸ் பெண் புன்னகையுடன், "போங்க, போய் உக்காருங்க,"என்று - முன்னிருக்கையென்றால் என்னவென்றே அறியாத என்னை முன்ன்ன்ன் சீட்டில் கொண்டு போய் உட்கார வைத்துவிட்டார். <br /><br />ஏறக்குறைய மேடையின் மேலேயே உட்கார்ந்துகொண்டிருப்பதுபோல் இருந்தது. அந்த தியேட்டரின் அமைப்பு அப்படி. நூறு பேர்தான் உட்காரலாம் போல அவ்வளவு சிறியதாக இருந்தது. நான் இருந்த இடத்திலிருந்து ஒரு படி இறங்கினால் அங்கே விளக்கெல்லாம் வைத்து இருட்டாக்கியிருந்தார்கள். திரும்பிப்பார்த்தால், "சூ பக்கரியா!" என்று பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தது. சுடலை அடிவயிற்றிலிருந்து கத்திக்கொண்டு அமர்க்களமாகப் பாடிக்கொண்டிருந்தாள். <br /><br />அப்படியே ஒவ்வொரு படியாக இறங்கி வந்து, என் பக்கத்தில் நின்று புரியாத மொழியில் என்னவோ கேட்டுவிட்டு, அப்புறம் மேடைக்குச்சென்றாள். நாடகத்தின் 'கதைசொல்லி' அவள்தான். பரமார்த்த குருவின் சிஷ்யன்/சிஷ்யையாக அவள் எப்படி வந்து சேர்ந்தாள் (நடித்தவர் ஆனந்தசாமி. எம்பிஏ படித்தவராம். அவரது வெடுக்கும் சொடுக்கும், ஆட்டமும் பாட்டமும் ... பின்னியெடுத்திருக்கிறார்.)அப்புறம் பரமார்த்த குருவும், அவரது சிஷ்யர்கள் மிலேச்சன், பேதை, மூடன், மட்டி, மற்றும் மடையன், எல்லோருமாகச் சேர்ந்து அடிக்கும் 'கூத்து' தான் மிச்சக் கதை. <br /><br />நடித்தவர்கள் எல்ளோருமே உணர்ந்து, ரசித்து செய்திருக்கிறார்கள். அவர்கள் propsசை பயன்படுத்தியிருக்கும் விதமே தனி. ஒரு சில குச்சிகள், நீலத்துண்டு, இவற்றை வைத்தே கதையை அற்புதமாக நகர்த்திக்கொண்டு போகிறார்கள். நதியைக் காண்பிக்க ஒரு நீலத்துணியைத் தரையில் விரித்து ஒரத்தில் கலர் கலராக கிழிசல்களைத் தைத்திருக்கிறார்கள். அசப்பில் கொஞ்சம் குப்பைகள் ஒதுங்கியிருக்கும் நதி போலவே இருக்கிறது. <br /><br />பரமார்த்த குருவின் அசட்டு சிஷ்யர்கள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள். நதியில் சுளுந்தைப்போட்டு ஆற்று நீரை சோதிக்கும் போது, குதிரை முட்டை வாங்கும்போது, இறுதியில் குருவைப் பாடையில் கொண்டு போகும் போது ... அழுது, அரற்றி கத்தி, கும்மாளமிட்டு - மேடையே அதிர்கிறது ... ஆடியன்சாகிய நாங்கள் சிரிக்கும் போது அவர்களுக்கும் சிரிப்பு வந்துவிடுகிறது (பரமார்த்த குரு சிரித்துக்கொண்டே 'தம்பிமார்களை' கண்டித்தது தமாஷாக இருந்தது.)<br /><br />காதில்லாத, நொண்டிக் கிழட்டுக் குதிரை கல்யாணராமனாக வந்து கலக்கியவர் சோமசுந்தரம். அவர் தலையில் குட்டி குட்டிப் பின்னல்களாகப் போட்டு, பின்னால் ஒரு வாலைக் கட்டிவிட்டிருந்தார்கள். மனிதர் நடித்ததைப் பார்த்தால், வேறொரு ஜென்மத்தில் குதிரையாகத்தான் இருந்திருப்பாரென்று நினைக்குமளவுக்கு இருந்தது. [எங்களுடன் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஐந்து வயதுப் பையன், மேடையில் நடந்துகொண்டிருந்த நாடகத்தால் ஈர்க்கப்பட்டு, அருகில் போக ... குதிரை கல்யாணராமன் அவனைப் பார்த்து எக்ஸ்ட்ரா கனைப்பு கனைக்க, அலறிக்கொண்டு அம்மாவிடம் ஓடிவிட்டான். அதைப் பார்த்துவிட்டுக்கொஞ்ச நேரம் சிரித்துக்கொண்டிருந்தோம்.] ஒவ்வொரு முறை சுடலை வந்த போதும் ஒரு கலக்கு கலக்கினார். அப்படியே நடுவில் வந்த மத்தியஸ்தம் செய்யும் பெரியவரும், அருகில் குடித்துவிட்டு 'ஹெஹ்ஹே'யென்று ஆடும் வேலையற்ற கிராமத்தானும். Secondary charactersசை எவ்வளவு கவனமெடுத்து செய்திருக்கிறார்கள்!<br /><br />நடிகர்களின் body languageதான் என்னை அதிகம் வியக்க வைத்தது. நாடகத்தில் ஒரு காட்சியில் சுடலையும் குருவும் பேசிக்கொண்டிருக்கும்போது கூட, ஓரத்தில் நிற்கும் குதிரை கனைத்துக்கொண்டு, கர்புர்ரென்று சத்தமிட்டுக்கொண்டு, சீடர்களில் ஒருவரை முட்டிக்கொண்டேயிருக்கிறது. சீடர்களும் அவரவர் முட்டாள்தனமான பாணியில் இவர் அவரைத் தள்ளி, அவர் இவரைத் தள்ளி - அதுவும் பேதையாக நடித்த ரமேஷ் அமர்க்களம் செய்திருக்கிறார். பேக்குத்தனம் personified. ஒரு நிமிடம் கூட நாடகம் பார்க்கும் நம் கவனம் வேறெங்கும் திரும்பாதபடிக் காப்பாற்றிக்கொள்கிறார்கள். நாடகம் பார்க்கும் நம்மையும், மொத்த அரங்கையுமே மேடையாகப் பயன்படுத்துகிறார்கள் - குதிரையைக் காணாமல் எல்லோரும் தேடும்போது, பார்வையாளர்களையும் கேட்கிறார்கள். நாம் உட்கார்ந்திருக்கும் சீட்டுக்குக் கீழெல்லாம் தேடுகிறார்கள். [பேதை என்னிடம் வந்து "எங்க போச்சு குதிரை?" என்று கத்திவிட்டுப் போனான். :)]<br /><br />நாடகம் முடிந்ததும், இயக்குனர் அபர்ணாவின் வித்தியாசமான தலையாலங்காரத்தைப் பார்த்து அதிசயித்துவிட்டு, அவரது அபாரத் திறமையைப் பாராட்டிவிட்டு வந்து சேர்ந்தேன்.<br /><br />ஒரு முறை பார்க்கலாம். வாய்விட்டு சிரிக்கலாம். Good show. </font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5647678.post-1155222858526708542006-08-10T20:42:00.000+05:302006-08-19T12:52:41.340+05:30<strong><u><font size=4>கண்டனூரில் மூவர்</font></u></strong><br /><br /><div align=center><img src="http://www.thehindu.com/fr/2006/01/20/images/2006012002731101.jpg" border="3"></div><br /><br /><br /><br /><font size=2>வெகு நாளாயிற்று, இந்த மாதிரி ஒரு படம் பார்த்து. எப்பேர்ப்பட்ட கதாபாத்திரங்கள். என்ன கதை. என்ன களம். தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரும் சுற்றுபுரங்களும் மனதை அள்ளுகின்றன.<br /><br />மகேந்திரனின் <a href="http://www.chennaionline.com/film/Moviereviews/2006/08sasanam.asp">'சாசனம்'</a> படத்தைதான் சொல்கிறேன். <br /><br />ஏறக்குறைய இரண்டேமுக்கால் மணி நேரப்படம். பார்த்ததிலிருந்து, மனதில் பதிந்துபோன காட்சிகள் சில ...<br /><br /><strong>1</strong>. கண்டனூர் அழகாக இருக்கிறது. பழையகால வீ¢டுகளும், திண்ணைகளும், தூண்களும் ... ஆரம்பக் காட்சிகளில் அர்விந்தசுவாமியும் கௌதமியும் - கௌதமி என்ன அழகாக இருக்கிறார். கோயில் சிற்பம் மாதிரி. இருள் படிந்த அறையில் ஒளிரும் ஒரே ஒரு தீபம் போல. முதன் முதலில் இராமநாதனும் (அ.சுவாமி) விசாலமும் (கௌதமி) ஒருவரையொருவர் சீண்டிக்கொள்ளும் இடங்கள் ரம்மியமாக இருக்கின்றன. ஊருக்குப் புதிதாக வந்து சேரும் ரஞ்சிதாவும் (சரோஜி) அவளது அம்மாவும் வியந்து போகின்றனர். "ரொம்ப வயசானவரா இருப்பாரோ?" என்று அ.சுவாமியைப் பற்றி ரஞ்சிதா கவலைப்படுவது தமாஷாக இருக்கிறது.<br /><br /><strong>2</strong>. "ஆரம்பமே நன்றாக இருக்கிறதே" என்று சற்று நிமிர்ந்து உட்காரும்போது அபசுரம் லேசாகத் தலையைக் காட்டுகிறது. முதன்முதலில் வீட்டுக்கு வரும் ரஞ்சிதாவின் கைகளில் கோணல் மாணலாக இருக்கும் அல்தாவைப் பார்த்து "மருதாணி ரொம்ப நல்லா பத்தியிருக்கு உங்களுக்கு" என்று விசாலம் புகழ்கிறாள். சரி, விசாலத்திற்கு மருதோன்றியும் தெரியவில்லை, அல்தாவும் தெரியவில்லை போலும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொள்ள முயலும்போது ...<br /><br /><strong>3</strong>. அடைக்கலம் கேட்டு வரும் தாய்க்கும் மகளுக்கும் இராமநாதன் பெரிய அரண்மனைபோல வீட்டைத் திறந்துவிடுகிறார். சரி. நல்ல மனிதர். பெரிய மனிதர். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டைக் கொடுக்கிறார். அப்புறம் 'அவர்களைப் பார்த்து வருகிறேன்' என்று போய், சரோஜி பாடுவதைக் கேட்டுவிட்டு, "நீ எனக்கு மட்டும் பாடிக்கொண்டேயிருக்கணும்போல இருக்கு," என்று ஒரு ஸ்டேட்மெண்ட் அடித்துவிட்டு வருகிறார். ஆகா, துரோகம் என்ற வார்த்தை முதன்முதலில் மனதுக்குள் தோன்றுகிறது. சரோஜியின் அம்மாவுக்கும் தெரிகிறது. "இதெல்லாம் நல்லா இல்லை," என்று நாசூக்காக மகளிடம் சொல்கிறார். "கடை வெக்கலாமா, பாட்டு சொல்லித் தரலாமா," என்று கொஞ்சமாவது வாழும் வகை செய்துகொள்ள அவர் மட்டுமே பாடுபடுகிறார். "பாட்டு, கடையெல்லாம் சரி வராது," என்று இராமநாதன் மறுக்கும்போது, சந்தோஷமென்று சரோஜியும் நிம்மதியாக வீட்டிலேயே இருந்துவிடுகிறாள். <br /><br /><strong>4</strong>. Then things go the predictable way. ஆனால், அவை அப்படி செல்வதற்கான காரணங்கள் தான் சரிவர கொடுக்கப்படவில்லை. இராமநாதன் அப்பாவால் சுவீகாரம் கொடுக்கப்படுகிறார். பல சொத்துகளுக்கு அதிபதி ஆகிறார். அப்பாவால் 'விற்கப்பட்டோம்' என்ற எண்ணம் மனதின் அடியாழத்தில் உறுத்துகிறது. ஒப்புக்கொள்ளலாம். [சுவீகாரம் கொடுக்கும் காட்சிகளை விஸ்தாரமாகக் காட்டியிருக்கிறார்கள். சுவாரஸ்யமாக இருக்கிறது.] அந்த வருத்தம் தெரிந்த விசாலம் அன்பான மனைவியாக அவரை சமாதானப்படுத்துகிறார். [இப்படிப்பட்ட மனைவி கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.] அதற்கும் அவர் சரோஜியிடம் அடிமையாவதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அவருக்கும் விசாலத்திற்கும் ஒத்துப்போகவில்லையா என்றால், இல்லை. இருவரும் மிக அன்னியோன்யமாக வாழ்கிறார்கள். 'சிந்து பைரவி' படத்தில் வருவதுபோல், மனைவிக்கு ரசனை கிடையாது என்பது மாதிரியான காரணமா என்றால், அதுவும் இல்லை. [ரஞ்சிதா அற்புதமான நடனக் கலைஞர் என்பதை மனது சுத்தமாக ஏற்கமாட்டேனென்கிறது. ஒரே ஒரு பாடல் பாடி அவர் உத்தமரான இராமநாதனின் மனதைக் கலைத்து விடுகிறாராம்.]Only one explanation fits the bill: சரோஜியைப் பார்த்தவுடனேயே இராமனாதனின் மனதில் சபலம் உண்டாகிவிட்டது என்பதுதான். அப்படியென்றால் மனைவி விசாலத்தின்மேல் அவருக்கிருக்கும் 'அன்பு'? <a href="http://plugin.smileycentral.com/http%253A%252F%252Fwww.smileycentral.com%252F%253Fpartner%253DZSzeb008%255FZNxdm824YYIN%2526i%253D359%2526feat%253Dprof/page.html" target="_blank"><img src="http://smileys.smileycentral.com/cat/359.gif" alt="SmileyCentral.com" border="0"><img border="0" src="http://plugin.smileycentral.com/http%253A%252F%252Fimgfarm%252Ecom%252Fimages%252Fnocache%252Ftr%252Ffw%252Fsmiley%252Fsocial%252Egif%253Fi%253D359/image.gif"></a><br /><br /><strong>5</strong>. இராமநாதனின் அப்பா இறந்ததற்கு சரோஜியும் செல்கிறாள். (ஏன்? "ஊர்ல எல்லாரும் தப்பா பேசறாங்க," என்று முந்தைய நாள் வரையில் துயரப்படும் சரோஜிக்கு இது அதிகப் பேச்சைக் கிளப்பும் என்று தெரியாதா?] அங்கு, எல்லோரும் (எதிர்பார்த்தது போல்)தவறாகப் பேசுவதைத் தாள முடியாமல், பாதியிலேயே தன் வீட்டுக்கு வந்து, உள்பாவாடையைக் கட்டிக்கொண்டு மேலே ஒரு புடவையை மட்டும் போட்டுக்கோண்டு தேம்பித் தேம்பி அழுகிறாள். அங்கு சரியாக வரும் இராமநாதன் (?!) அவள் அழுவதைக் காணச் சகிக்காமல் தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு வரும் கலாசாரத்தின்படி நெற்றியில் ஒரு திலகம் வைத்து, சரோஜியின் மனக்காயத்தைத் தீர்க்கிறார். "நாங்க அந்த மாதிரி ஒருத்தரையொருத்தர் நினைக்கவேயில்லை" என்று அவரும் சரோஜியும் மாற்றி மாற்றி புலம்புவதும், அழகான, அற்புத குணம் படைத்த விசாலத்திற்கு துரோகம் செய்வதும் என்ன மாதிரியான காதல் என்று புரியவில்லை. அப்படியே அது காதல்தானா என்றால், அதுவும் இல்லை. ஏதோ விபத்தாம். கண நேரத்தில் திருவிழாவில் குழந்தை காணாமல் போவது மாதிரி தொலைந்து போய்விட்டார்களாம். [காதில் பூ சுற்றும் ஸ்மைலி எதாவது இருக்கிறதா?]<br /><br /><strong>6</strong>. நடுவில் மெய்யம்மை ஆச்சி அவ்வப்போது தலைகாட்டி, சரோஜிக்கு மிக ஆதரவாக இருக்கிறார். அவர் சரோஜியை ஏறக்குறைய தத்தெடுத்துகொள்வதைப்பார்த்தால், விசாலத்திற்கும் அவருக்கும் ஜென்மப்பகை என்பது போல தோன்றுகிறது. அப்படி எதுவும் இல்லை. அவரும் இராமநாதனும் அக்கா, தம்பி முறை - விசாலமும் அவருக்கு சொந்தப்பெண் போலத்தானாம். நிகழ்ந்து விட்ட எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, என்னவோ 'நேற்று வைத்த ரசம் கெட்டுவிட்டது," என்று சரோஜி சொன்னது போல சாதாரணமாக பூஜையறைக்குள் சென்று சரோஜி தலையில் பத்து முழம் பூவைச் சுருட்டி வைக்கிறார். பற்றாக்குறைக்கு வீட்டை வேறு அவளுக்கு எழுதி வைக்கிறார். <br /><br /><strong>7</strong>. பெரிய குடும்பங்களில் இன்றியமையாத அம்சம் - கணக்குப்பிள்ளை போன்ற இதர காரியதரிசிகள். இதில் கணக்குப்பிள்ளையின் கதாபாத்திரம் கச்சிதமாக இருக்கிறது. ஆனால், தலைவாசல் விஜய்யின் கதாபாத்திரம் ஒட்டவேயில்லை. எல்லோரையும் போல் அவரும் சரோஜியைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். நல்ல குணம் படைத்த விசாலத்திற்கு ஆதரவாக யாராவது இருக்கிறார்களா என்று கண்ணில் விளக்கெண்ணெய்விட்டுத் தேடினாலும் யாரும் அகப்பட மாட்டேனென்கிறார்கள். <br /><br /><strong>8</strong>. மெய்யம்மை ஆச்சியின் வீட்டில் வேலை செய்வது உமா என்று ஒரு சிறுமி. படத்தின் தொடக்கத்தில் 'கண்டனூர் 2005' என்று கொட்டை எழுத்துக்களில் காட்டுகிறார்கள். எந்த ஊரில் ஜாக்கெட் இல்லாத இளங்குமரிகள் ஊரின் எல்லா மூலைகளிலும் நடமாடுகிறார்கள் என்று தெரியவில்லை. படத்தின் கடைசியில் மட்டும் உமா 'போனால் போகிறது' என்று திருமணமாகி நான்கு (!) குழந்தைகளுடன், ஜாக்கெட் அணிந்து வருகிறாள்.ஆ. மனதில் ஒரு அபூர்வ திருப்தி பரவுகிறது. <br /><br /><strong>9</strong>. மீண்டும் இராமநாதன்-சரோஜி-விசாலம். சரோஜியின் தாயார் (படத்தில் கொஞ்சமாவது உருப்படியாக யோசிப்பவர்), தன் பெண் இப்போதைக்கு கண்டனூரை விட்டுக் கிளம்பப்போவதில்லை என்பதைப் புரிந்துகொண்டு, திடீரென்று ஒரு நாள் காணாமல் போகிறார், [கடைசி வரையில் அவர் கிடைப்பதேயில்லை. அவரும் சரோஜியும் கிணற்று மேட்டில் இது பற்றிப் போடும் சண்டை, படத்தின் யதார்த்தமான காட்சிகளில் ஒன்று.] படத்தில் அவ்வப்போது "அம்மா எங்கேன்னு தெரியலை," என்று சரோஜி முகத்தைத் தொங்க வைத்துக்கொள்வதோடு சரி. இராமநாதன் - மனைவியின்மேல் உயிரையே வைத்திருக்கும் இராமநாதன் - எப்படி கூசாமல் சரோஜியுடனும் இருக்கிறார் என்பது புரியாத புதிர்களில் ஒன்று.<br /><br /><strong>10</strong>. "நான் தவறு செய்துவிட்டேன்," என்று இராமநாதன் விசாலத்திடம் புலம்பும் இடத்தில் கௌதமி - wow. அவர் கண்களில் தெரியும் வலியும், பரிதாபமும் - bravo! இபப்டிப்பட்ட நடிகைக்கு படத்தில் சரியான வாய்ப்பே இல்லை. சரோஜிக்குத் திருவாரூரில் பாட்டும் நடனமும் சொல்லித் தரும் ஆசிரியை வேலை கிடைத்தவுடன் - இதையும் படத்தில் வில்லனாகவே சித்தரிக்கப்படும் ஒருவர்தான் வாங்கித் தருகிறார் (சரோஜிக்கு நன்மையாகவே எல்லாம் நடப்பதைதான் ஜீரணிக்க முடியவில்லை) தடாலென்று 'தலைவலி, காய்ச்சல்', என்று அழுது, சொத்துக்களையெல்லாம் சரோஜியின் குழந்தைக்கு எழுதிவைத்து விட்டு, இறந்துபோகிறார். What a waste. <br /><br /><strong>11</strong>. பெரிய காமெடி: அவர் இறந்த விஷயத்தை யாரும் திருவாருரில் இருக்கும் சரோஜிக்குத் தெரிவிக்கக்கூடாது என்று தடா செய்கிறார் இராம்நாதன். அதனால் விசாலம் இறந்து பதினைந்து வருடமாகியும் சரோஜிக்கு விஷயமே தெரியாதாம். ஹ¤ம். நிஜ வாழ்க்கையில் அடுத்த செகண்டே தெரிந்துவிடும். [நிஜ வாழ்க்கையில், விசாலம் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டாள் என்று கதை கட்டுவார்கள். அல்லது, இராமநாதனே மனைவியை விஷம் வைத்துக் கொன்றுவிட்டார் என்று சொல்வார்கள்.]<br /><br /><strong>12</strong>. இன்னொரு மிகப்பெரும் காமெடி: சரோஜியின் நடன நிகழ்ச்சி. அவர் போட்டுக்கொண்டிருக்கும் உடையே விசித்திரமாக இருக்கிறது. நடனத்தில் திடீரெண்று பரதநாட்டியம், ஒடிஸ்ஸி, வெஸ்ட்டர்ன் நடனம் என்று கலந்துகட்டியாக தையாதக்கா என்று குதிக்கிறார். நடனம் முடிந்தபின், மெய்யம்மை ஆச்சி வந்து இராமநாதனிடம் "சரோஜியின் நடனம் அபாரமா இருந்துச்சாம். வெளிநாட்டுக்கெல்லாம் கூட்டிட்டுப் போகப்போறாங்களாம்" என்று சொல்லும்போது தியேட்டரே கொல்லென்று சிரிக்கிறது. <br /><br /><strong>13</strong>. கடைசியில் சரோஜியும் இராமநாதனும், அவர்களுக்குப் பிறந்த பெண்ணும் அமோகமாய் வாழ்கிறார்கள். சுபம். <br /><br /><strong>14</strong>. Net result: பெருத்த ஏமாற்றம். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டும் முயற்சி என்று வைத்துக்கொண்டாலும், கதாபாத்திரங்களில் அழுத்தமேயில்லை. யார் எதை, எதற்காக செய்கிறார்கள் என்று சொல்லப்படவேயில்லை. எல்லோரும் எல்லோருக்காகவும் விட்டுக்கொடுக்கீறார்கள்; மாற்றி மாற்றி அழுகிறார்கள். தவறே நடந்திருந்தாலும், "ஐய்யோ பாவம்," என்று தவறு செய்தவர்களையே தூக்கி வைத்துக்கொண்டாடுகிறார்கள். சரோஜியிடம் சென்றதற்காக இராமநாதனிடம் விசாலத்திற்கு மலையளவு ஆத்திரம் வந்திருக்க வேண்டாம்? எந்த மனைவியும் அவ்வளவு விட்டுக்கொடுப்பாள் என்பதை சுத்தமாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. போட வேண்டிய சண்டைகளையெல்லாம் போட்டபிறகு மன்னிப்பு வரலாம். அதுவும் சந்தேகமே. <br /><br />அப்புறம் சரோஜி. ஆரம்பத்திலிருந்து அவளது செய்கைகளையெல்லாம் பார்த்தால், she's played her cards very well. அப்பாவி போல இருந்து, அழ வேண்டிய இடங்களில் அழுது, சிரிக்க வேண்டிய இடங்களில் சிரித்து, மயக்கி ... யாரிடமெல்லாம் சொத்து வாங்க முடியுமோ வாங்கி ... இறுதியில் சந்தோஷமாக வாழ்கிறாள். மற்றவர் மனதைக் கொஞ்சமும் புண்படுத்தாத பிறவி, அற்புத நாட்டியப் பேரொளி என்று அவளை ஏற்க முடியவில்லை. <br /><br />எப்பேர்ப்பட்ட கதாபத்திரங்கள். என்ன கதை. என்ன களம். <br /><br />இதோடு ஒப்பிட்டால், நேற்று பார்த்த மரிலின் மன்ரோவின் <a href="http://en.wikipedia.org/wiki/The_Seven_Year_Itch">'Seven year Itch</a>' எப்படிப்பட்ட படம்! ஒரே ஒரு சிறிய வீட்டிற்குள், முன்று கதாபாத்திரங்களை வைத்து, ஏறக்குறை இதே கருத்துள்ள படம்தான். அதைக் கையாண்ட விதமே தனி. அற்புதமான திரைக்கதை அது. அப்புறம் மரிலின் ... <a href="http://plugin.smileycentral.com/http%253A%252F%252Fwww.smileycentral.com%252F%253Fpartner%253DZSzeb008%255FZNxdm824YYIN%2526i%253D4%252F4%255F1%255F208%2526feat%253Dprof/page.html" target="_blank"><img src="http://smileys.smileycentral.com/cat/4/4_1_208.gif" alt="SmileyCentral.com" border="0"><img border="0" src="http://plugin.smileycentral.com/http%253A%252F%252Fimgfarm%252Ecom%252Fimages%252Fnocache%252Ftr%252Ffw%252Fsmiley%252Fsocial%252Egif%253Fi%253D4%252F4_1_208/image.gif"></a><br /><br />இதையும் அதையும் ஒப்பிடுவது என்ன நியாயம் என்கிறீர்களா? ஒன்று சீரியஸ் படமென்றாலும் அபத்தக் களஞ்சியமாக இருந்து சிரிப்பை வரவழைக்கிறது; இன்னொன்று காமெடி படமாக இருந்தாலும், சமயத்தில் சீரியசாக இருந்து யோசிக்க வைக்கிறது. <br /><br />சாசனம் ...? <br /><br />பழையகாலத்தின் லாஜிக் அற்ற, பிழியப் பிழிய அழும் படங்கள் வரிசையின் ரசிகர் என்றால், அவசியம் பாருங்கள். யதார்த்தவாதியா? Stay away.</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5647678.post-1150014161834551722006-06-11T13:09:00.000+05:302006-07-28T15:11:19.730+05:30<font size=4><strong><u>இரு வேறு உலகங்கள் ...</u></strong></font><br /><br /><font size=2>இப்பொழுது படித்துக்கொண்டிருப்பது இமையத்தின் 'செடல்'. 'செடல்' என்றால் என்னவென்றே தெரியாமல்தான் புத்தகத்தை எடுத்தேன். ஒரு நாவலின் முதல் வார்த்தையிலிருந்து வாசகர்களை உள்ளே இழுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது எவ்வளவு நிஜமென்பதைப் படிக்கப் படிக்கப் புரிந்துகொண்டேன். செடல் ஒரு பெண்ணின் கதை. வருடக்கணக்காக மழையே இல்லாமல் பொய்த்துப்போன ஒரு கிராமத்தில், கூத்தாடுபவர்களின் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை பிடுங்கியெடுத்துக் கோயிலில் நட்டு வைக்கிறார்கள் - பொட்டுக் கட்டி விட்டு. <br /><br />அவள் பெயர்தான் செடல். <br /><br />செடல் வாழ்கக்கையைப் பார்க்கும் விதமே சுவாரசியமாக இருக்கிறது. அம்மா அப்பாவை விட்டு வந்துவிட்டோம் (அவர்கள் கண்டிக்கு பஞ்சம் பிழைக்கப்போகிறார்கள்) என்ற ஆதங்கம் ஒரு பக்கம், அப்புறம், 'நான் செல்லியாயிக்கு நேந்துவுட்ட புள்ள', என்ற லேசான - மிக லேசான - அலட்டல் ஒரு பக்கம் என்று, அவள் வயது ஏற ஏற உலகத்தை அவள் பார்க்கும் பார்வையும் மாறி வருகிறது.<br /><br />முதன் முதலில் கிராமத்திற்கு மழை வரும் அந்தத் தருணங்கள் அற்புதம். <br /><br />இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறேன். பாயும் நதி போல் அருமையாக இருக்கிறது அவர் நடை. "எப்படி சார் இந்த வட்டார வழக்கை அப்படியே கொண்டு வந்தீங்க?" என்று இமையத்தைக் கேட்டால், சிரிக்கிறார். "எல்லாம் நம்ம வாழ்க்கையைத் சுத்தி நடக்கிறதுதான். என்ன பெரிய ஆராய்ச்சி?" <br /><br />இமையத்தின் speciality என்று சொல்லலாம்: வெளியுலகத்தில் எது எப்படி ஆனாலும், தனக்குள்ளேயே இயங்கிக்கொள்ளும் ஒரு சிறிய உலகத்தைப் படம் பிடித்துக்காட்டுவது. 'ஆறுமுக'த்தில் அவர் தேர்ந்தெடுத்த களம்: செக்குமேடு. இந்தக் கதையில், அது ஒரு சிறிய கிராமம். வெளியே யுத்தமோ, வெள்ளமோ, பஞ்சமோ, யார் ஆள்கிறார்களொ, யார் சாகிறார்களோ, அதைப் பற்றியெல்லாம் அதிகம் பாதிக்கப்படாமல்,திருவிழா, வயல்வெளி, கூத்து, கோயில் குளம், வேப்பமரம் என்று ஒரு சிறிய இடத்திற்குள் நடக்கும் போராட்டங்கள். அப்புறம், அதிக வார்த்தைகளை வாரி இறைக்காமல், 'நறுக் நறுக்'கென்று எழுதும் விதம். அங்கே அவர் ஜெயிக்கிறார். <br /><br />பெண்களை அவர் சித்தரிக்கும் விதத்தில், 'தி. ஜா'வை நிறைய நினைவு படுத்துக்கிறார். <br /><br />கடந்த நான்கு மாத காலமாக நான் படித்து (ஓரளவு கிழித்துப்) போட்ட இன்னொரு புத்தகம், சு.ராவின் 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்'. எடிட் செய்யப் படித்தது கொஞ்சம்; உண்மையாகவே ரசித்து ரசித்துப் படித்தது நிறைய. கொஞ்சம் கரடுமுரடாக இருக்கின்றன முதல் சில அத்தியாயங்கள். அப்புறம் போகப் போக சுளுவாகிறது. கேரளத்தைச் சேர்ந்த என் நண்பி அதைப் படித்த்விட்டு உருகிப்போய்விட்டார். இப்போதும் 'கு. பெ'ஆ'வைப் பற்றி அவரிடம் பேச ஆரம்பித்தால், கண்களில் பல்ப் மின்னும். நாவலில் வரும் 'களரிக்கல் பஜா'ரைத் தோற்றுவித்தவர் அவரது தாத்தா - அதனால், எப்போதெல்லாம் நாவலில் அந்த இடம் வருகிறதோ, அப்போதெல்லாம் பயங்கர ஆவலுடன் நான் இருக்குமிடம் தேடி வந்து, அமைதியாக உட்கார்ந்திருப்பார். அப்புறம் மெதுவாக, 'இந்த மாதிரி நான் படிச்சதேயில்லை. கோட்டயம் போயிட்டாப்புல இருக்கு," என்பார். <br /><br />எனக்கும் 'கு.பே'ஆ', பிடித்திருக்கிறது. எஸ்.ஆர்.எஸ் மனதில் கம்பீரமாக நிற்கிறார். It's a saga. அந்த முறையில் அதன் நுணுக்கங்களை ரசிக்க முடிகிறது. என்றாலும் ... கொஞ்சம் அங்கங்கே வார்த்தைகள் ஏராளமாக தேங்கி நிற்கின்றன. <br /><br />'ஜே. ஜே', சில குறிப்புக்களில், சு,ரா'என்னும் மனிதரின் எண்ணங்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே அள்ளித் தெளிக்கப்பட்டிருந்ததாக எனக்குத் தோன்றும். 'அட, இவ்வளவு யோசிக்கும் திறன் பெற்றவனா நான்?' என்று தன்னைத் தானே வியந்துகொள்ளும் தன்மை தூக்கலாக இருந்தது. 'கு. பெ.ஆ' அப்படி இல்லை. It is unselfconscious. கோட்டயம் பச்சைப் பசேலென்று மழைக்காற்றுடன், கேரளத்து வாசனையுடன் கண் முன்னால் வந்து நிற்கிறது. திருநக்கரை கோயிலின் மணிகள் காதில் ஒலிக்கின்றன. ஆனந்தமும், கௌரியும், லக்ஷ்மியும் உயிர்ப்புடன் நடமாடுகிறார்கள். <br /><br />எனக்கு மிகப் பிடித்த இடம்: லக்ஷ்மி, தன் தங்கை கோமதிக்குக் கடிதமெழுதும் பகுதி: "...ஒதுங்கிப் போகாதே, தனியாக அறைக்குள் உட்கார்ந்துகொண்டு உனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருக்காதே. தனியாக இருக்க முடிகிறவர்களை மற்றவர்களுக்குப் பிடிக்காது."<br /><br />I'm not quoting it verbatim. நினைவில் இருப்பதை எழுதியிருக்கிறேன். படித்த போது, 'எவ்வளவு உண்மை?' என்று தோன்றியது. 'எனக்குத் தனியாக இருக்க ரொம்பப் பிடிக்கும்,' என்று சொல்லும் எத்தனையோ பேரைச் சந்தித்திருக்கிறேன். ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவர்களால் தனிமையைத் தாங்கிக் கொள்ள முடிந்ததில்லை. அருகிலிருக்கும் நம்மை அரிக்கத் தொடங்கி விடுவார்கள். வேண்டுமென்றே வம்புக்கிழுப்பார்கள். 'என்னால் தனியாக இருக்க முடியவில்லை. நீ மட்டும் இருக்க விடுவேனா?' என்று கண்களாலேயே அதட்டுவார்கள்.<br /><br />தனியாக இருக்க முடிவது ஒரு கலைதான். செடல் கூட, ஒரு கட்டத்தில் தனியாக இருப்பதை விரும்புகிறாள். ஆயிரம் பேர் அவளைச் சுற்றிக் குழுமிக்கொண்டே இருக்கின்றனர். அவள்தான் சுற்றுப்பட்டுக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். கோயில் காரியங்களைக் கவனிக்க வேண்டும். பூஜை செய்ய வேண்டும். விளக்கேற்ற வேண்டும். இன்னாரையும் அன்னாரையும் கௌரவித்து, அதே சமயம் தனக்கும் எந்த தீங்கும் நேராமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வப்போது யாராவது கண்ட இடத்தில் கை வைத்தால், நாசூகாக சிரித்துக்கொண்டு நழுவத் தெரியவேண்டும். வேண்டாமென்றால் தள்ளியிருக்கவும், வேண்டுமென்றால் சிரித்துகொண்டிருக்கவும் தெரிய வேண்டும். அவளுக்குத் தெரிகிறது. <br /><br />உண்மையில், செடல்தான் தனிமைக் கலையை அதிகம் கற்றிருக்கிறாள் போல. She is her own self. <br /><br />அவளுடன் நானும் கொஞ்சம் நிலா வெளிச்சத்தில் உறங்கும் ஊரைப் பார்த்துவிட்டு வருகிறேன்.</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5647678.post-1148795026221119632006-05-28T10:41:00.000+05:302006-06-02T00:10:53.533+05:30<strong><u><font size=4>இன்றைய பொழுது...</u></strong></font><br /><br /><font size=2>'எழுதி ரொம்ப நாளாகிவிட்டது' என்று இன்னொரு முறை சொன்னால் அது படிப்பவருக்கு எக்கச்சக்கமாக அலுப்புத் தட்டும். என்ன செய்ய? அதே வாக்கியத்துடன்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. <br /><br />எம் எஸ் வர்டில் தமிழில் டைப் அடித்து எவ்வளவு நாட்களாகிவிட்டன என்பதை மறைந்துபோன 'அ', 'ஷ'க்களிலிருந்து தெரிந்துகொண்டேன் (கூடவே அருணாவின் எச்சரிக்கையிலும்.) கை ஒழுங்க்காக தட்டச்சு செய்வதற்குபதில் கண்ட கண்ட எழுத்துக்களின் மேல் தந்தியடிக்கிறது. (Grr.)<br /><br />விட்டுப்போன பகுதிகள் சிலவற்றை இணைத்து, கதா உத்ஸவ் பகுதி இரண்டை இங்கே தருகிறேன். ஜாப்பர் ஹ¤ஸ்ஸேன், மஹேஷ் தத்தானி, இருவரும் பேசி விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமானவையாக எனக்குப்பட்டன. அதனால் அவற்றை அப்படியே, verbatim, தருகிறேன்.<br /><br />இன்னொரு விஷயம்: கட்டுரையில், எழுத்தாளர் இமையத்தின் 'ஆறுமுகம்' நாவலின் மொழிபெயர்ப்பை நான் எடிட் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னேன் அல்லவா? புத்தகம் வெளிவந்துவிட்டது. இதோ அதன் அட்டை:<br /><br /><img src="http://www.hindustantimes.com/wfsf/medium/2006/05.02/images/medium1688823.jpg"><br /><br />சுட்டி <a href="http://www.hindustantimes.com/news/181_1690580,00110004.htm">இங்கே</a>. <br /><br /><br /><br />******************<br /><br /><strong>கதா உத்ஸவ் - 2</strong><br /><br />உற்சவம். திருவிழா. எல்லோரும் உற்சாகமாக உரையாடி, முடிந்தால் டிப் பாடி, புத்தம் புது மனிதர்களைச் சந்தித்து, நட்பாக்கிக்கொண்டு, மனம் நிறைந்து திரும்பும் சமயம். இந்த முறை கதா (KATHA Asia International Utsav, 2006) உற்சவமும் எனக்கு அப்படித்தான் அமைந்தது. சென்னையிலிருந்து கிளம்பும்போது ஏகப்பட்ட கேள்விகளூடன் கிளம்பினேன் - இந்த மாதிரியான இலக்கிய விழா எப்படி இருக்கும்? ஒரே சமயத்தில் ஏழெட்டு இடங்களில் நிகழ்ச்சிகள் இருக்கும்போது, எப்படி எல்லாவற்றையும் ரசிப்பது? யார் யார் வருவார்கள்? யாரை சந்திப்பது, யாரை விடுவது? <br /><br />முக்கியமாக, இந்த மாதங்களில் தில்லியை உறைய வைக்கும் குளிரை சமாளிப்பது எப்படி? <br /><br />பார்த்தவர்கள் எல்லோரும் பயமுறுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். "இந்த வெதர்லியா போறீங்க? அங்க இப்ப மைனஸ்ல இருக்கும்ங்க," என்றார்கள், எங்கள் முகங்கள் வெளிறிப்போவதைப் பார்த்து ரசித்தபடி. "கவலையே படாதீங்க. உறைஞ்சு போயிடுவீங்க. சென்னை குளிர்காலத்தை பாத்தவங்களால அங்க சமாளிக்கவே முடியாது. என்னவோ போங்க. தெரிஞ்சுதான் செய்யறீங்களா?" என்றெல்லாம் ரொம்பவே ஏற்றிவிட்டார்கள். தில்லி வந்து சேரும் முன்பே நாங்கள் (நானும் சக எடிட்டரும்) நடுங்க ஆரம்பித்துவிட்டோம். <br /><br />எல்லாவற்றையும் மீறி, கதா இலக்கிய விழா எப்படித்தான் இருக்கும் என்ற குறுகுறுப்பு எங்களுக்குள் எழுந்துகொண்டுதான் இருந்தது. <br /><br />ஜனவரி ஆறாம் தேதி ஏழேகால் மணிக்கு ராஜதானியில் ஆரம்பித்த எங்கள் தில்லிப் பிராயணம், ஏழாம் தேதி மதியம் மூன்றேமுக்காலுக்கு, ஹஜ்ரத் நிஜாமுத்தீன் ஸ்டேஷனில் முடிந்தது. வந்து இறங்கியவுடன் நான் கவனித்த முதல் விஷயம் - ஜிலீரென்று காதுக்குள் ஐஸ் மாதிரி நுழைந்த குளிர். கொஞ்சம் கலங்கிப்போய் காதுகளை முடிக்கொண்டேன். மதியானம் மூன்று மணிக்கே இப்படியென்றால், இரவு எப்படியோ? (அன்று இரவுதான் 0.2 டிகிரியைத் தொட்டது குளிர்.)<br /><br />ஆளை அடிக்கும் சிவப்பு ம·ப்ளரும், நீலக் கலர் ஸ்வெட்டருமாக நாங்கள் இறங்கிய தோரணையைப் பார்த்து தில்லியே சிரித்திருக்கக் கூடும் - அங்கே நாங்கள் பார்த்தவர்கள் எல்லோரும் அநியாயத்திற்கு பொருத்தமாக உடுத்துகிறார்கள். தில்லியின் பிரதான வீதிகளைத் தாண்டி, ISI ஹாஸ்டலுக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது, மாலை மணி ஐந்து. பெட்டி படுக்கைகளையெல்லாம் இறக்கிவிட்டு, கதா உத்ஸவ் நடந்து கொண்டிருந்த இந்தியா ஹாபிட்டாட் செண்டருக்கு (India Habitat Centre) நடந்தோம். வாயால் ஊதினால் புகை வருகிறதா என்று சோதனை செய்துகொண்டே (புகை வந்தது) ஹாபிட்டாட் செண்டருக்குள் நுழைந்த பிறகு ... குளிராவது? எல்லாம் மறந்துவிட்டது. <br /><br />சாயங்காலம் ஆறு மணிக்கு ஹீட் செய்யப்ப்ட்ட ஸ்டெய்ன் (Stein) டிட்டோரியத்திற்குள் நுழைந்த போது, கதா சூடாமணி விருது வழங்கும் விழா அப்பொழுதுதான் தொடங்கியிருந்தது. <br /><br />கதா உத்ஸவ் ஒவ்வொரு வருடமும் நடக்கும் வி"யம் இல்லை. இரண்டு வருடத்திற்கொருமுறை - முடிந்தால், விட்ட வருடத்தில் சிறியதாக ஒரு இலக்கியத் திருவிழா கொண்டாடிவிடுவது வழக்கம். கதாவின் இலக்கிய உற்சவங்கள் மூன்று பிரதான நிகழ்ச்சிகளைச் சுற்றிப் பின்னப்படும் ஒளிப்பின்னல்கள். ஒன்று: கதா சூடாமணி விருது வழங்கும் விழா. இரண்டு: ஓவியர்களைக் கௌரவிக்கும் சித்ரகலா விழா. மூன்று: கதா பரிசுத் தொகுப்பிற்காகத் (Katha Prize Stories) தேர்ந்தெடுக்கப்பட்ட வெவ்வேறு இந்திய மொழிச் சிறுகதை எழுத்தாளர்கள், அவர்களது சிறுகதைகளை மொழிபெயர்த்தவர்கள், மற்றும் அந்தக் கதைகளை தொகுப்பிற்காகத் தேர்தெடுக்கும் பத்திரிகை ஆசிரியர்களையும் கௌரவிக்கும் கதா விருதுகள். இவை மூன்றையும் சுற்றித்தான் கதா உத்ஸவ் நடைபெறுகிறது.<br /><br />இந்த முறையும் அதற்கு விதிவிலக்கல்ல. 2005ம் வருடக் கதா சூடாமணி விருது, ராஜஸ்தானில், பொருண்டா என்ற கிராமத்தில் பிறந்து, நாட்டுப்புறக் கதைகளின் கருவை வைத்தி அருமையான கதைகளைப் பின்னும் எழுத்தாளர் விஜய்தான் தேதாவுக்குச் (Vijaydan Detha) சென்றது. சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் இவர். "பாலைவனத்தில் தோன்றும் கதைகள் பாலையின் மணல்துகள்கள் போன்றவை - நுட்பமானவை, கண்ணாடி போன்ற துல்லியத்தைக் கொண்டவை" - என்கிறார், அவர் பிறந்த மண்ணின் கதைகளின் வளத்தைப் பற்றிப் பேசும்போது. விருது கொடுத்து கௌரவித்த திரு.மணி ஷங்கர் ஐயர் உட்பட பலர் ஹிந்தியில் பேசினார்கள். மொழி அவ்வளவாகப் புரியவில்லை என்றாலும், அவர்கள் பேசிய ஒலி இனிமையாக, மென்மையாக இருந்தது. காம்பியர் செய்தது எங்கள் Editorial team தில்லி கிளை - நீலம் நரூலா.<br /><br />இதுதான் என் முதல் தில்லி விஜயம் - அதனால் பார்த்த எல்லாமே புதுமையாக இருந்தது. தில்லி போன பிறகு, தலைநகரைச் சுற்றிப் பார்க்க இந்த மாதங்களில்தான் செல்லவேண்டும் என்று தெரிந்துகொண்டேன். <br /><br />உடனேயே குளிர் சற்றுக் குறைந்தாற்போல் இருந்தது. <br /><br />தினமும் கால்லையில் எழுந்து, ISI ஹாஸ்டலில் காலை எட்டு மணிக்கு சுடச்சுட சப்பாத்தி/பூரி/சேவை/உப்புமா சாப்பிட்டுவிட்டு, ஒன்பதரை மணிக்கெல்லாம் ஹாபிட்டாட் செண்டர் என்னும் பிரம்மாண்டத்திற்குள் நுழைந்து விட்டால், நேரம் போவதே தெரியாது. கேட் மூன்று வழியாக நடந்து சென்று, அதி நவீன சிற்பம் ஒன்றை தாண்டி (முன்று காலோ, ஐந்து காலோ உள்ள ஒரு வடிவம்) படிக்கட்டுக்களில் ஏறி, புல்தரையில் கால் வைத்தால் "தன் பரப்பளவு புரியும். சுற்றிலும் மிகப் பெரிய, செங்கல் நிறக் கட்டிடங்கள், வானை முட்டிக்கொண்டு. ஒவ்வொன்றிலும் அரங்குகள் - ஒவ்வொன்றிலும் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்துகொண்டிருக்கும். <br /><br />இந்த முறை கதா விழாவுக்காக எடுத்துக்கொண்ட கரு: நகரங்கள். City Stories. ஒரே நகரத்தில் எத்தனையோ இருக்கிறது. அதைப் பார்ப்பவர்கள் பார்வை எவ்வளவோ மாறுபடும். நகரத்தை வடிவமைப்பவர் "தைப் பார்ப்பதற்கும், அதில் வாழ்வோர் அதைக் காணுவதிலும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். அந்த வித்தியாசங்களை எழுத்து, பேச்சு, திரைப்படம், ஹைக்கூ என்று கலை வடிவமாக ஸ்பரிசிக்கவும் இந்த ஐந்து நாட்கள் பல சந்தர்ப்பங்களைத் தந்தன. <br /><br />இதனால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நகரத்தைச் சுற்றியே இருக்கும். முதன்முதலில் நாங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி - சில்வர் ஓக் என்ற சிறிய அரங்கில் (எங்கள் வீட்டு ஹால் சைஸ்தான் இருக்கும்) - 'But you can't get there on a city bus' - அதுதான் தலைப்பு. சதானந்த் மேனனுடன் ஒரு கலந்துரையாடல். சாதிப் பிரச்சனைகள்; அப்பொழுது நம் நகரங்கள் இருந்த நிலைமை, இப்பொழுது அதே கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா? நகரங்களில் இருப்பவர்கள் உண்மையிலேயே சுதந்திரம் பெற்றவர்கள்தானா? அடுத்த வீட்டில் இருப்பவர்கள் யார் என்றே தெரியாமல் இருப்பது உண்மையில் விடுதலையா, அல்லது அதுவே ஒரு தளையா?<br /><br />அப்பொழுதுதான் கல்லூரியிலிருந்து வெளியேறியது போல் இருந்த ஒரு இளைஞர், 'நம் ஊரில் ஜாதிகளை ஒழிக்கவே முடியாதா?' என்று வீராவேசத்துடன் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதில்கள் சுவையானவை. பலரிடமிருந்து புன்னகைகள்; சிலர் உண்மை நிலவரம் இப்பொழுது எப்படி என்று விவரிக்க ரம்பித்தனர்; மற்றும் சிலர் தனிப்பட்ட மனிதர்களால் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களைப்பற்றிப் பேசினர். <br /><br />அப்புறம் வேறொரு அரங்கில் மஹேஷ் தத்தானி (Mahesh Dattani), ஜாப்பர் யஸ்ஸின் ஹ¤ஸ்ஸேனுடன் (Jabber Yassin Hussein) ஒரு உரையாடல் - Cities and the Concept of the Contemporary. தத்தானி BBCக்காக நாடகங்கள் எழுதுபவர். ஹ¤ஸ்ஸேன் பாக்தாத்தில் சிறு வயதில் வளர்ந்தவர் (பின்னால் ·ப்ரான்ஸ¤க்குக் குடியேறிவிட்டார்). முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பித்தாலும், பிறகு அரபிக்தான் தனக்கு இன்னும் சரளமாக வருகிறது என்று சொல்லியதால், மொழிபெயர்ப்பாளர் மோனா பேக்கர் (Mona Baker) அவருக்காக (அற்புதமாக, நடுவில் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வே தோன்றாமல்) மொழிபெயர்த்தார். அவரது வார்த்தைகளின் அழகை என்னவென்று சொல்வது? ரத்தினக் கம்பளத்தை விரித்தாற் போல ஒரு கவர்ச்சி; நுணுக்கம், சொற்கள் மணிகளைத் தரையில் கொட்டினாற்போல் வந்து விழுகின்றன. <br /><br />"தனிப்பட்ட மனிதர்களின் கற்பனைகளின் மொத்த உருவம்தான் ஒரு நகரம்," என்றார் அவர். "ஆனால், நம் நகரங்களில் இப்பொழுதெல்லாம் கற்பனைகளுக்கு வெளியே உருவம் கொடுக்க முடியவில்லை - நம் நகரங்கள் அவற்றை உள்நோக்கியே செலுத்தப் பார்க்கின்றன." <br /><br />அவர்களது உரையாடல் முழுவதையும் இங்கு தந்திருக்கிறேன்: <br /><br />ஜாப்பர் யஸ்ஸின் ஹ¤ஸ்ஸேன்:<br /><br />The name it self suggests that - it comes from the name Bawulla (?), which literally means, The Door of God. I have visited many ancient cities around the world, including Athens, Cairo, Paris and Rome. But I was born in Baghdad. <br /><br />All these cities, at different times in history have tried to be ideal cities, like the City of Babel, but history has not allowed them opportunity to assume that. <br /><br />On the other hand the idea of an ideal city seems to me to be an actual pssibility and perhaps the city of Babel was destroyed because it came nearest to that ideal. <br /><br />And it also seems to me that the architects of those 'old cities?' - they were more human than the architects of today. <br /><br />When you walk around cities like Old Rome and Cairo and Old Delhi, it seems that the spaces in these cities allow you to connect, that won't be allowed in new cities. <br /><br />The modern city seems to me to be violent and to be designed to disperse people into separate pockets.<br /><br />A city like Paris where I've lived for many years, seems have a kind of rhythm, a rhythm that comes from within. At the same time, it is actually a city that is difficut to live in, a city that does not allow people to live in prosperity. <br /><br />People who live in Paris are separated on the basis of class, ethnicity, and many divisions that do not allow them to come together.<br /><br />Cities like Paris and London that gives an impression of quietness, of loneliness. <br /><br />On a personal level, and because I have been away from home, and have lived in France for a long time, I have tried to bring these cities togther. <br /><br />In my book, for the Bagdhdad reader, I have tried to bring together cities like Beunos Aries, and Bagdad, bring these cities together, because modern cities seem to be based on isolation. <br /><br />The city above all is the individual's way of imagination. The modern city does not allow the imagination take rein, to develop as much as it forces it to turn onto itself. <br /><br />The human imagination has invented something called the city, which is one of the greatest inventions of mankind, but we now have the problem of the city. <br /><br />I believe that the whole world has completely failed to produce the modern city. <br /><br />We only need to see the layouts at the plans, for old Mexico city which was the basis of a great civilization, to realize that we have completely failed to produce a great city. <br /><br />As I roam round cities today, I keep thinking, we have to reconsider how to produce the humane city , the city that will allow its people to live happily, to live as an individual. <br /><br />We live in vast cities, today they are very big, but they are cities without. <br /><br />மஹேஷ் தத்தானி:<br /><br />People are still in denial about who they really are. They want to project themselves, that is the preoccupation. Until that they are projecting an identity, we won't really understand who we really are.<br /><br />I think again, what is I'm sure its going to be definitely called by someone, who might not be interested in coming. What is urban-ness?<br /><br />Urban spaces give me the space to do what I want to do, even my parents were not allowed this, which might be acceptable in a rural environment. Oh, I've said too much, [laughter]<br /><br />Uh, so I guess it is to do with: the mind and the place are connected. Seeking out to exist. The mind could project itself. Those are places in s\cities you would want to belong. That is what we identify as city. <br /><br />According to Kakkar, what is Bombay? The Taj, and the Sapphire Grill, and when you ask someone else, they might say completely different.<br /><br />Chowpatti Beach, panipuri wala and the bhelpuri wala. For me it was completely different. And the city is as fluid as the mind. It is the mind and the place. <br /><br />The Rippon building was built in 1924. Shantiniketan a building was built - a small house. But when we think these things closer. The problem arises. Suppose there was a naxalite movement in Kolkatta and there was a problem. The police identified the students. Kolkatta and Chennai - these cities were built under British rule. Colonization. The model was England. <br /><br />Well again, I see your point that especially if you're looking at the colonized mind - the Indian urban mind. To my father - he was very pro- Gandhian. In his time he was, I think, British. But he wanted us to study in an English. I believe that everything good came out of Europe. I've been to Shantiniketan - what's the big deal. It's only when you interact with the people, what SN did to the people nearby that you understand. It was, in that sense a village made into a city. Not in the colonial sense of the word. Not tall structures and all that stuff. <br /><br />Widening of gap between rural and urban landscapes, hasn't this created a rift between us? The hatred - tee wouldn't be such tings called solutions. <br /><br />Disruptions keep creeping in. The rural areas have been neglected - when you say that, that just adds fuel to the rural-urban divide. If you go to villages, they aren't really concerned about us, either. It's an illusion that we're different. It really boils down to whether you're being displaced, whether you follow tradition, and that's where you send your attention. I've seen the urban -rural divide falling apart - maybe my imagination. I don't think exploitation come only from the city. Exploitation is about fear and power and threats to your community. As long as there's exploitations, you will have uprising. The naxalbari happened out of necessity and lots of good am out of it. That's a completely different issue. <br /><br />Cities are very much caught up in the present. <br /><br />If you miss your village, you're displaced. You're a city person now. Someone's going to miss the city of twenty years ago. Someone who misses their place brings change here. You may bring out your village, or you might adapt. No matter what you do, you bring change. You create the parampara. It happens because it's true. Displacement is the only truth. I think I can stick my neck out and say that. [laughter]<br /><br /><br />புகைப்படங்கள் வழியே நகரம். தொலைக்காட்சியின் மூலம் நகரம். பழைமையும் புதுமையும். ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த அதே நகரமா இப்போதும் இருக்கிறது? ஐந்து நிமிடங்களுக்கு முன் இருந்த நகரமே இப்பொழுது இல்லையே? Urbanization என்று சொல்லிக்கொண்டு நகரத்தை மாற்றியமைப்பவர்கள் உண்மையில் நன்மையைத்தான்ச் செய்கிறார்களா?<br /><br />பல உரையாடல்கள். கட்டுரைகள். குறுக்கும் நெடுக்குமாக வார்த்தைப் பரிமாற்றங்கள். <br /><br />பிறகு வெளியே புல்வெளியில் மதிய உணவு. ஏகப்பட்ட உணவு வகைகள். எல்லாவற்றையும் சுவைத்துவிட வேண்டும் என்று எடுத்துக்கொண்டதில், தட்டு முழுவதும் வர்ணக் கலவையாக இருந்தது. சாப்பிட்டுக்கொண்டே பேசுவதும் ஒரு சுகம். ஒரு பக்கம் திபேத்தியக் கவிதைகள் கேட்கும். இன்னொரு பக்கம் ஷ்யாம் பெனகல் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டிருப்பார். <br /><br />அன்று இரவு, 'West Beirut' என்ற படம் பார்த்தோம். 1975இல் நடக்கும் அமளியில், கிழக்கில் கிறிஸ்துவ திக்கத்திற்குட்பட்ட பெய்ரூத்தாகவும், மேற்கே முஸ்லிம் திக்கத்திற்குட்பட்ட நகரமாக பிரியும் தருணத்தில், தாரிக், ஒமர் என்னும் இளைஞர்களும், மே என்ற இளைஞியும் அடையும் அனுபங்கள்தான் படம். லெபனான் தந்த இந்த அற்புத படைப்பைப் பார்த்துக்கொண்டிருந்த போது நேரம் போனதே தெரியவில்லை. <br /><br />'அம்மா, எனக்கு ஸ்கூலுக்குப் போகப் பிடிக்கலை,' என்று அடம்பிடிக்கும் இரு பையன்கள், மெல்ல மெல்ல குழப்பமும் அமளியும் ஊரில் அதிகரிக்க அதிகரிக்க, தவித்துப் போகிறார்கள். திடீரென்று ஒரு நாள் வீட்டுப் பக்கத்தில் குண்டு வெடிக்கும்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிகிறது. இதற்கிடையில் துக்கடா காதல், வயதுக் கோளாறு விஷமங்கள், என்று வாழ்க்கையும் அதன் போக்கில் போகிறது. என்றாலும், போரின் நிழலுருவம் அவர்களைத் துரத்திக்கொண்டேதான் இருக்கிறது. <br /><br />தாரிக்கின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் பின்னியிருக்கிறார். 'இனிமேல் பெய்ரூத்தில் இருக்க முடியாது, நாம் கிளம்புவோம்,' என்று அழுது புரண்டு "மர்க்களம் செய்யும்போது, தடாலென்று காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் பிள்ளையை இழுத்துக்கொண்டு இறங்கி எங்கோ மோதிவிட்டு அழுதுகொண்டு இருக்கும்போது, கடைசியில், கணவரின் கிட்டார் இசையைக் கேட்டுக்கொண்டு மென்மையான புன்னகையுடன் 'பெய்ரூத்தில்தான் இருக்க வேண்டும்,' என்ற அவரது உணர்வை மதிக்கும்போது ...<br /><br />கடைசிக் காட்சியில் அவரைக் காணவில்லை. கண்ணீர் மல்க தாரிக்கும் அவனது அப்பாவும் போரால் துவம்சம் செய்யப்பட்ட பெய்ரூத்தை பால்கனியிலிருந்து பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.<br /><br />படம் முடிந்து வெளியில் வந்த போது (எண்ணி நாங்கள் பார்வையாளர்கள் பத்து பேர் இருந்திருப்போம்.) சிறிது நேரம் பேச்சே வரவில்லை. <br /><br />அடுத்த நாளிலிருந்து, நாங்களும் கதாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், உத்ஸவ் பார்வையாளர்கள் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டு, விருந்தாளிகளைக் கவனித்து உத்ஸவ்வில் இன்னும் நேரடியாகப் பங்கெடுத்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம்.<br /><br />ஹாபிட்டாட் செண்டரில் உள்ள ஏழு "ரங்குகளில் ஒன்றை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு வந்தது (எனக்குக் கொடுக்கப்பட்ட "ரங்கின் பெயர் - 'கதம்பா'.) சமூக சேவகி ஜெயா அருணாச்சலம், ஹைக்கூ க்ளாஸ் எடுத்த கலா ரமேஷ் என்று பலரை "ன்று தெரிந்துகொள்ளவும், மற்றவர்களுக்கு "றிமுகப்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது. ஜெயா "ருணாச்சலம் மிடுக்காக வந்து, இதுவரை தனது சமூக அமைப்பு செய்து வரும் பணிகளை, தன்னுடைய அனுபவங்களை அவசரமில்லாமல் தன்னடக்கத்துடன் பகிர்ந்துகொண்டார். ஹைக்கூ பற்றிப் பேச வந்த கலா ரமேஷ் முறையாக சங்கீதம் பயின்றவர். அகன்று விரிந்த கண்களுடன் அவர் நகரத்தைப் பின்னணியாக வைத்து ஹைக்கூ எழுதும் கலையை பயிற்றுவித்த விதமே "ழகு. ஒன்றரை மணி ஒன்றரை நிமிடமாகப் பறந்துவிட்டது.<br /><br />'ஆசியாவின் பெண்களின் குரல்' என்ற தலைப்பில் பேச வந்த ரஜினி பால்ரிவாலாவை (Rajni Palriwala)ஒரு கல்லூரியின் விரிவுரையாளர் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. ஹைஸ்கூல் பெண்ணைப் போல் இருந்தார். பளீரென்ற புன்னகையுடன் என்னை சந்தித்தார். அவரது செஷன் முடிந்த போது, இன்னும் ஒரு மணி நேரம் பேசியிருக்க மாட்டாரா என்று ஏங்க வைத்தது.<br /><br />உள்ளே நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில், வெளியே புல்தரை லான்களில் குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நிகழ்ச்சிகள். ஓவியர்களை அழைத்து வொர்க்ஷாப், கதை சொல்லும் அனுபவங்கள், காலிக்ரா·பி, முகத்தில் பெயிண்ட்டால் வரைவது, பப்பெட் செய்வது என்று Amazing Asia Carnivalலில் நடந்துகொண்டிருந்தன. வேறொரு பக்கம் புத்தக வெளியீட்டு விழாக்கள்.<br /><br />பிரதாப முதலியார் சரித்திரம், லாசராவின் குறுநாவல்கள், தமிழ்ப் புதுக்கவிதைகள் என்று தமிழ்ப் புத்தகங்கள் இந்தப் பட்டியலில் அதி முக்கியம். <br /><br />மராத்திய கவிஞர் திலிப் சித்ரேவை (Dilip Chitre) சந்தித்தேன். கவிதை என்றால் என்ன என்பதிலிருந்து, தனக்குள் கவிதை எப்படி ஊற்றெடுத்தது என்பதை அழகாக விவரித்தார். மற்ற கவிஞர்களைத் தங்கள் படைப்புக்களை படிக்குமாறு கேட்டார். திபேத்திய கவிஞர் டென்ஸிங் ட்ஸ¤ன்டூவின் (Tensing Tsundue) கவிதை 'தொடுவானம்' அற்புதமாக இருந்தது. <br /><br />அப்புறம் எகிப்திய மொழிபெயர்ப்பாளர் மோனா பேக்கரின் Translation Workshop. நூதனமாக ஆரம்பித்தார். இஸ்ரேல், பாலஸ்தீனிய சண்டைகளின் போது அங்கிருந்து ஒளிபரப்பட்ட செய்தித்தொகுப்பில், அங்கிருக்கும் அராபியர் ஒருவர் போர் அமளியை விவரிப்பதை எப்படி மொழிபெயர்க்கிறார்கள் என்பதிலிருந்து தொடங்கினார். ஆரம்பமே எல்லோரையும் எழுந்து உட்கார வைத்தது. <br /><br />உதாரணத்திற்கு ... <br /><br />அராபியர் ஒருவர் பதறுகிறார்: "My God, My God, our home is no longer ours."<br /><br />அமெரிக்காவில் இந்த் வாசகம் மொழிபெய்ர்க்கப்பட்டபோது, செய்தியாளர்கள் அதை இப்படி மொழியாக்கம் செய்திருந்தார்கள், சப்டைடில்களில் : Oh my God, not even Vietnam was as bad as this."<br /><br />'எங்கள் இடம் அழிந்துவிட்டது' என்பதை மொழிபெயர்க்கும்போது, விய்டநாம் எங்கிருந்து வந்தது? இப்படி மொழிபெயர்ப்பது விதிகளுக்குள் அடங்குமா? அமெரிக்கர்களுக்கு இந்த கலவரத்தின் வீச்சைப் புரிய வைக்க வேண்டுமென்றால், அதற்கு வியட்நாம் மூலமாகத்தான் செல்ல வேண்டுமா?<br /><br />ஒரு மொழி, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குத் தாவும்போது அது எப்படியெல்லாம் உருமாறிப் போகிறது. எந்த இடத்தில் அந்த மொழியை நாம் அப்படியே தக்க வைத்துகொள்வது; எங்கே நாம் அதை வேற்றுநாட்டுக்காரர்களும் அறிந்துகொள்ளும்படியாக மாற்றுவது? அப்படி மாற்றினால், அது மொழியாக்கம் ஆகுமா? மொழிபெயர்ப்பாளருக்கு இதில் எவ்வளவு உரிமை உண்டு?<br /><br />ஒரு மொழிபெயர்ப்பாளர் நினைத்தால், சொல்லப்படும் விஷயத்தை அப்படியே மாற்றி எழுதும் சக்தி அவருக்கு உண்டு. <br /><br />இன்னொரு சின்ன உதாரணம். (ஆங்கிலத்தில்):<br /><br />Anwar Sadat: Visionary Who dared (Joseph Finklsestone, 1996), - 1999இல் ஆங்கிலத்திலிருந்து, அரபிக்கில் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட தலைப்பு - Wahm Al- Tahaddi (Sadat : The Illusion of Challenge) !<br /><br />English Original (Finklestone, 1996):<br /><br />After centuries of living under teh shadow of great powers, often humiliated and derided, Egypt, under Sadat, was grappling with tremendous, almost insoluble problems - inadequate resources, insufficient fertile land and burgeoning population which was increasing at the rate of over one million every year.<br /><br />அராபிய மொழிபெயர்ப்பு (1999):<br /><br />Historically, after Egypt had remained for long centuries humiliated and oppressed by the cruelty of the Great Powers, it submitted/surrendered (கவனிக்க) to Sadat's rule. And with Sadat's rule Egypt witnessed numerous large and complex problems, foremost of which were the lack of resources, the limited availability of agricultural land, and the growth of population at a rate of over one million every year.<br /><br />ஆக, ஒரு மொழிபெயர்ப்பாளர் நினைத்தால் ...<br /><br />நிற்க. மொழிபெயர்ப்பு உரையாடலில் ஏன் இவ்வளவு அரசியல் நெடி என்று யோசித்தால் - அதை மோனா பேக்கரிடம்தான் கேட்க வேண்டும். <br /><br />மூன்று மணி நேரம் நடந்த இந்த கலந்துரையாடலில் பல சுவாரசியமான கேள்விகள். அதைவிட சுவாரசியமான பதில்கள். <br /><br />நம் வட்டார வழக்குச் சொற்களைக் கையாளும் முறையும் அலசப்பட்டது. 'சும்மாடு' என்ற வார்த்தையை (லக்ஷ்மி ஹால்ம்ஸ்ட்ராமின் மொழிபெயர்ப்பில்) அப்படியே விட்டிருக்க வேண்டும்; அதை மொழிபெயர்த்திருக்கவே கூடாது என்று வாதாடினார் மங்கை (ஸ்டெல்லா மேரிஸ் ஆங்கில விரிவுரையாளர்). எங்கு எந்த வார்த்தையைப் பிரயோகம் செய்யலாம், எங்கு அது எடுபடாது என்பதில் ஆரம்பித்து, ஒரே விஷயத்தை உரைநடையில் சொன்னால் ஒரு விதம், வசன கவிதை வடிவில் சொன்னால் வேறொரு விதம் என்று அது மாறுவதை மோனா அழகாக எடுத்துக் காட்டினார். <br /><br />மூன்றரை மணி நேரம் ஓடியது நினைவிலில்லை. <br /><br />அடுத்த நாள் இரானிலிருந்து சில ஓவியர்களை சந்தித்தேன் (அவர்கள் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்க வேண்டியது; அதை எடுத்து நடத்தும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன்). நம்முடைய ஓவியங்களிலிருந்து அவர்களுடைய வண்ணங்களும், அவர்கள் அவற்றைப் பயன்படுத்தும் விதமும் எவ்வளவு மாறுபடுகின்றன. அத்தனை பேரும் எப்படியாவது தங்கள் கருத்துக்களை எங்களிடம் எடுத்துச்சொல்லும் தீவிரத்துடன் பேசினார்கள். ஆங்கிலம் அவர்களுக்குக் கொஞ்சம் தடுமாற்றம்தான். என்றாலும், பேச வேண்டும், மற்ற எழுத்தாளர்கள், ஓவியர்களுடன் பழக வேண்டும் என்ற அவர்களுடைய ஆவல் ... உடைந்த ஆங்கிலத்தில் அவர்கள் "எங்க ஊர்ல சண்டை நடக்குது, ஆனாலும் நாங்க சந்தோஷமா இருக்கோம்," என்று தட்டுத் தடுமாறி சொல்லும்போது, மனது நெகிழ்ந்துபோய் விடுகிறது.<br /><br />குறிப்பாக அனாஹிதா தேய்மொரியன் (Anahita Teymourian) என்ற பெண் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டார். <br /><br />இறுதியில் எனக்கு ஒரு சிறிய ஓவியத் தொகுப்பை நினைவுப்பரிசாக அளித்தபோது என் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டேன். <br /><br />இலங்கை எழுத்தாளர் கே. எஸ். சிவகுமாரன் 'உங்கள் முகங்கள் மறந்துபோனாலும் புகைப்படத்தைக் கொண்டு நினைவு வைத்துக்கொள்வேன்,' என்று காலை முழதும் புகைப்படக் கருவியுடன் காணப்பட்டார். தினமணி அலுவலகத்திலிருந்து திரு. அமுதன், சுப்ரபாரதி மணியன், எழுத்தாளர் இமையம் (இவருடைய 'ஆறுமுகத்'தைதான் இத்தனை நாட்கள் எடிட் செய்துகொண்டிருந்தேன்.) ஆகியோரைச் சந்தித்துப் பேசிய நிமிடங்கள் பொன்னானவை. அப்படியே இரண்டு அஸ்ஸாமிய நடன மாதர்களுடன் பேசிய சில நொடிகளும். <br /><br />நம் தமிழ் எழுத்தாளர்கள், தில்லி வாசம் எப்படியிருக்கிறது என்று கேட்டபோது, பெரிய சிரிப்புடன், "ஒரு யுகமாயிட்டது போல இருக்குது," என்றார்கள். (எழுத்தாளர் இமையத்தை உத்ஸவ் முடிந்த பிறகு, கதா அலுவலகத்தில் சந்தித்தேன்.)<br /><br />2005ம் ஆண்டுக்கான சூடாமணி விருதை விஜய்தான் தேதாவுக்கு வழங்கியதால், அவரை கௌரவிக்கும் முறையில் 'பஹேலி'யைத் திரையிட்டார்கள். (அவர் எழுதிய 'துவிதா' என்ற கதைதான் 'பஹேலி'யாக எடுக்கப்பட்டது.)<br /><br />ஜனவரி 11ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு நடுக்கும் குளிரில் ஹாபிட்டாட் செண்டரிலிருந்து ஹாஸ்டல் திரும்பிய பொழுது, அந்த ஐந்து நாட்களில் சந்தித்த மனிதர்களையும், எடுத்த புகைப்படங்களையும் கிரஹித்த விஷயங்களையும் மனதிற்குள் திரைப்படம் போல ஓட்டிப் பார்த்துக்கொண்டேன். மின்னல் வெளிச்சம் போல சில மின்னின; சில தரையில் கால் வைத்தால் மெல்ல அமுங்கும் கார்ப்பெட் போல இதமாக இருந்தன. எத்தனை புன்னகைகள். எத்தனை விவாதங்கள். எத்தனை மனிதர்கள். எத்தனை அனுபவங்கள்.<br /><br />நிறைவாக இருந்தது.</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5647678.post-1138515246436770962006-01-29T11:15:00.000+05:302006-05-11T09:55:01.936+05:30<font size=4>மீண்டும் ஒரு 'KATHA'</font><br /><br /><br /><font size=2><a href="http://www.katha.org/Events/KathaAsia.htm">KATHA ASIA INTERNATIONAL UTSAV 2006</a> இந்த வருடம் இனிதே நிறைவடைந்து முடிந்தது. தில்லி குளிர் வெளியே சுரீரென்று உறைத்தாலும், நாங்கள் இந்தியா ஹாபிடாட் செண்டருக்குள் இருந்ததால் அநேகமாக அதிலிருந்து தப்பிவிட்டோம். <br /><br />திரும்பிய பக்கமெல்லாம் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள். பத்திரிகை ஆசிரியர்கள். கவிஞர்கள். ஓவியர்கள். பல நாடுகளிலிருந்து, பல முகங்கள். எங்கு திரும்பினாலும் புன்னகைகள். பல வித்தியாசமான அனுபவங்கள், சந்திப்புகள். முகவரி பரிமாற்றங்கள். <br /><br />ஜனவரி ஆறாம் தேதியிலிருந்து பதினொன்றாம் தேதி வரை நடைபெற்ற இந்த இலக்கிய உற்சவத்தில் நான் கண்டதும், கேட்டதும் நிறைய. ஒவ்வொரு முறையும் 'கதா'வில் ஒரு குறிப்பிட்ட கருவை மனதில் வைத்துக்கொண்டு, அதைச் சுற்றி உற்சவ இழைகள் பின்னப்படும். இந்த முறை நாங்கள் எடுத்துக்கொண்ட கரு, 'நகர வாழ்க்கை - மாறுபட்ட கோணங்களும் பரிமாணங்களும்.' இத்தனை விதமாக ஒரு நகரத்தை - அது எந்த நகரமோ, சென்னையோ, தில்லியோ, பாக்தாத்தோ, லண்டனோ - பார்க்க முடியும், இத்தனை விதமாக ஒரு நகரத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்பதையே நான் முதன் முதலாக இங்கு கண்டேன். <br /><br />'என் எழுத்தை நகரம் எப்படியெல்லாம் உருவாக்கியது?' என்பதில் ஆரம்பித்து, 'நகரம் என்னை எப்படியெல்லாம் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிற்று' என்பது வரை பலர் விதம் விதமாகப் பேசினார்கள். முடிந்தவரை அவற்றை பதிவு செய்துகொண்டேன். விரைவில் அவற்றை எல்லாம் எழுத்து வடிவமாக்கி, அத்துடன் என் நகரப் பரிச்சயத்தையும் - தில்லி மூலமாக - கலந்து எழுதலாம் என்றிருக்கிறேன். <br /><br />ஆகவே, விரைவில் ... மீண்டும் ஒரு பயணக் கட்டுரை - இந்த முறை, தில்லியின் 'கதா'வைச் சுற்றி.</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5647678.post-1136464963602852192006-01-05T18:10:00.000+05:302006-01-05T18:13:32.396+05:30<strong>Warning</strong>: Random Thoughts.<br /><br /><font=4>எது கற்பனை?<br /><br />சிலருக்குக் கற்பனை கண்களில் விரியும்.<br />கண்களில் மட்டும்.<br />சிலருக்கு உள்மனம் வரை செல்லும்.<br />கற்பனை நிஜமாய் விரியும்.<br /><br />எதற்குக் கற்பனை? ஏன் கற்பனை?<br />சிலர் சொன்ன பதில்:<br />வாழ்க்கையில் முன்னேற.<br />செல்வம் கொழிக்க.<br />காதல் கிடைக்க.<br />குடும்பம் செழிக்க.<br />உலகம் மதிக்க.<br />வாழ்க்கையில் முன்னேறி <br />இவையெல்லாம் கிடைக்க.<br /><br />எனக்குக் கற்பனை -<br />இயல்பிலிருந்து விடுதலை.<br />நிஜத்திலிருந்து தப்பிக்க.<br />பயங்களிலிருந்து விடுபட.<br /><br />என் பயங்கள் என்னைத் துரத்தும்போது...<br />கனவுலகத்தின் கதவுகள் எனக்குத் திறக்கும்.<br /><br />என் கற்பனை நண்பர்கள் கை கோர்ப்பார்கள்.<br />ஆத்திரத்தில் எரிந்து விழ மாட்டார்கள்.<br />துக்கத்தைக் கிளற மாட்டார்கள்.<br />மகிழ்ச்சியைப் பொறாமையால் கெடுக்க மாட்டார்கள்.<br />துருவித் துருவித் துன்புறுத்த மாட்டார்கள்.<br />அவர்களும் என்னைப் போன்றவர்கள்.<br />என்னைத் தெரிந்தவர்கள்.<br />என் நிஜ உலக பயங்கள் விலகும் வரை <br />என்னுடன் இருப்பவர்கள்.<br /><br />பயம் தெளிந்தவுடன்<br />புன்னகையுடன் விலகுபவர்கள்.<br /><br />இப்பொழுதும்...<br />பயமாக இருக்கிறது.</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5647678.post-1130951289395072552005-11-02T22:37:00.000+05:302006-03-12T17:14:01.260+05:30<strong><font=4><u>தேவதை</u></font></strong><br /><br /><font=2>எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு குட்டி இளவரசி இருக்கிறாள். <br /><br />அல்லது குட்டிப் புயல். குட்டி இராட்சசி. த்ரிஷா (த்ரிஷாவைப்போல் உடையணிந்து நடனமாடுவதால்). மிஸ் சென்னை (சில பேருக்கு ஒரு வயதிலேயே மிஸ் பட்டம் அணிவதற்கான தகுதிகள் ஏற்பட்டுவிடும் - முக்கியமாக, catwalk செய்வது) - டயத்திற்கு ஏற்றாற்போல் அவளுடைய பட்டப்பெயரும் மாறும். <br /><br />அவள் எதிர்வீட்டில் குடியில்லை. என்றாலும், குடியிருப்பதுபோலத்தான். காலை ஒன்பது மணிக்கு சங்கூதுவது போல் 'ஓ'வென்று ஒரு அலறல் கேட்டால் அது குட்டிப் புயலாகத்தான் இருக்கும். எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் இயங்கும் க்ரஷிற்கு (creche) வரும் குழந்தைகளிலேயே அவள் தான் வயதில் சிறியவள். அவள்தான் முதலில் வருபவளும்கூட. அலுவலகமும் பள்ளியும் செல்பவர்கள்கூட இவ்வளவுதூரம் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். தன்னைவிட பெரிய சைஸ் கூடையுடன் வந்து இறங்குவாள். அஸின், ஷ்ரேயா ஆகியோர் தோற்று ஓடும்படி உடையணிந்து வருவாள். <br /><br />க்ரஷ்ஷிற்குள் நுழைந்து, தன் அரண்மனையில் எல்லாம் அதன் இடத்தில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாசல் படிக்கட்டை சிங்காதனமாக்கித் தன் பிரஜைகளைச் சந்திக்க உட்கார்ந்தால், மணி ஒன்பதரை. அநேக நாட்களில் நான் கிளம்பும் சமயம் இது என்பதால் மரியாதையாக வணக்கம் செலுத்திவிட்டுப்போவேன். லீவாக இருந்தால் ஆரம்பிக்கும் அரசவை. <br /><br />சின்ன த்ரிஷாவுக்கு செருப்புக்களின் மீது மோகம் உண்டு (எதிர்காலத்தில் இமெல்டா மார்கோஸாக உருவெடுக்கும் வாய்ப்புக்கள் அதிகம்). அதிலும் பிறருடைய செருப்பு என்றால் பிரியம் இன்னும் அதிகம். வாசல் கம்பிக்கதவை திறக்கும் வரை அவளுக்குத் தெரிந்த ஒரே வார்த்தையை வைத்து எட்டூருக்குக் கேட்கும்படி அலறுவாள்: "பேஏஏஏஏஏஏஏ!" இந்தக் கட்டளைக்குரலுக்கு எல்லோரும் அடி பணிந்தே ஆகவேண்டும். வாசல் கதவில் கால்பகுதி வரைதான் அவள் உயரம். அதனால் கதவைத் திறந்து மூடி, அவளுக்கு சேவை செய்வது மற்ற குழந்தைகளின் வேலை. திறந்து விட்டவுடன் செருப்புக்களை அடுக்கி வைத்திருக்கும் ஷெல்·புக்கு சென்று, இருப்பதிலேயே பெரிதான செருப்பு (ஒன்றே ஒன்று)காலில் (அல்லது கையில்) மாட்டிக்கொண்டு 'தொம்' 'தொம்'மென்று சில முறை குதிப்பாள். இந்த சமயத்தில் யாரும் அவளை தூக்கவோ, தொடவோ முயற்சி செய்யக்கூடாது (வெளியே செல்பவர்களைத் தவிர்த்து.) அவள் நடக்கும் போது பிடித்துக்கொள்ள வாகாக நாங்கள் prop வேலை பார்க்க வேண்டும். மீறித் தூக்க முயன்றால், சைரன் எழும். <br /><br />சில மாதங்களுக்கு முன்பு வரை தூளிதான் சிம்மாசனம் (இப்பொழுதெல்லாம் எத்தனை வீடுகளில் தூளி இருக்கிறது?!). இப்பொழுது மாடிப்படி. க்ரஷ் நடத்தும் பெண்மணி சாப்பாட்டை ஊட்டிவிட்ட பிறகு, அடுத்து வீட்டில் எதை உடைக்கலாம் என்று அசை போடுவாள். மற்ற குழந்தைகளின் சாப்பாட்டை வாரி இறைத்துவிட்டு, அவர்கள் தலைமுடியெல்லாம் பிடித்து இழுத்துவிட்டு, எங்கள் வீட்டுக் கம்பி கதவருகே நின்று ஓரக்கண்ணால் கள்ளப்பார்வை பார்ப்பாள். அவளைப் பொறுத்தவரை எங்கள் விடு, சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதை'யில் வரும் மர்ம வீடு - அங்கே என்னென்ன அதிசயங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வதில் அவளுக்குத் தீராத ஆர்வம். அதோடு உள்ளே வந்து ஒரு கண்ணாடிக் குப்பியையாவது உடைத்து எறியாவிட்டால் ராத்திரித் தூக்கம் வராது. குறைந்த பட்சம் ஒரு காகிதத்தையாவது கிழித்து எறிய வேண்டும். <br /><br />இன்று முழுவதும் சென்னையின் புதிய குளுகுளு (சில சமயங்களில்) வெதரை அனுபவித்துக்கொண்டு 'கீச் கீச்' சென்று மூஞ்சுறுவைப்போல் கத்தும் செருப்பை (ஒரு மாறுதலுக்கு தன்னுடைய செருப்பையே) போட்டுக்கொண்டு வாசல் முழுவதும் நடை பழகிக்கொண்டிருந்தாள். பார்க்க பீங்கான் பொம்மை போல் இருப்பதால், அவளைத் தூக்கிக் கொஞ்சாத ஆளில்லை. சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை வீடுகளுக்கும் அவள்தான் முடிசூடா ராணி. மாறி மாறி எல்லோரும் ஜன்னல் வரை அவளைத் தூக்கி எறிவதை அவள் மிகுந்த சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக்கொள்வதை காண இரு கண்கள் போதாது.<br /><br />மாதக்கணக்காக அவளை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மூன்று மாதக் குழந்தையாக 'கம்'மென்று ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த நாளிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடு முழுக்கத் தவழ்ந்து, பிறகு எழுந்து நின்று, எங்களைப் பார்த்துப் பல்லில்லாத புன்னகை பூத்து, செருப்பு போட்டுக்கொண்டு காலால் மிதித்து, புதிதாக முளைத்த பல்லால் கடித்து, இதோ - இப்போது ராணியாக "பே!" என்று சைகை பாஷை பேசுவது வரை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். <br /><br />தினமும் காலையில் அவளை ஒன்பது மணிக்கு எதிர் வீட்டில் கொண்டு வந்து விடும் அம்மா. இரவு மீண்டும் ஏழு மணிக்கு செல்·போனுடனும், கைப்பையுடனும் உள்ளே நுழைந்து மீண்டும் தூக்கிக்கொள்ளூம் அம்மா. "வீட்ல பயங்கர விஷமம்" என்று எங்களிடம் ரகசியம் பேசும் குரலில் பகிர்ந்துகொள்வார். குட்டி த்ரிஷா தன் அரசாங்கத்தை எங்களிடம் பாதுகாப்பாகக் கொடுத்துவிட்டு வீடு செல்வாள். <br /><br />நாளையும் அவள் வருவாள். "பா? பூ?" என்று தனக்கு மட்டுமே புரியும் மொழியில் எங்களுடன் பேசுவாள். அவளுக்கென்று நினைவு வந்து, கேள்வி கேட்கும் வயது வந்து, சிங்காரச் சென்னையின் குழந்தைகளைப்போல் இரண்டு வயதில் 'ப்ளே ஸ்கூல்' செல்லும் வரை இங்கே தூளியில் ஆடிக்கொண்டிருப்பாள். அராஜக அரசாங்கம் நடத்துவாள். <br /><br />எப்பொழுதும் அவள் இப்படியே இருந்துவிடப்போவதில்லை. விவரம் தெரிந்து ஆடம்பர அரசியாக, லேசான ஆணவத்துடன் அவள் வளர்வதை அவள் குடும்பம் காணும். இப்பொழுது 'சின்ன குழந்தை' என்று மன்னிக்க முடிகிற விஷயங்கள் வளர்ந்தால் விஸ்வரூபம் எடுக்கும். இப்பொழுது எங்களைப் பார்த்து 'ஈ'யென்று பூக்கும் மந்தகாசமாகப் புன்னகை பின்னாளில் காணாமல் போகலாம். குட்டி த்ரிஷா மிக அழகான குழந்தை. அந்த உணர்வு அவளது மனதில் இப்பொழுதே விதைக்கப்பட்டுவிட்டது. <br /><br />நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். தன்னைப் பற்றிய சுய உணர்வு அதிகமில்லாத, குழந்தைத்தனம் மட்டுமே கண்களில் இருக்கும் இந்த மாதங்களை அனுபவிக்கும் சந்தோஷம் மட்டும் எங்களுக்குத்தான். வளர்ந்த பிறகு இது எதுவும் அவளுக்கு நினைவிருக்காது. பாதகமில்லை. <br /><br />பின்னால் வரப்போகும் நீலாம்பரியைப் பார்ப்பதை விட, இப்பொழுது இருக்கும் கலப்படமற்ற குழந்தைத்தனம் எவ்வளவோ பரவாயில்லை.<br /><br />Life is made of simple pleasures, after all. <br /><br /><em>சம்பந்தமில்லாத பின்குறிப்பு</em>: Edited, as I don't know want to blow my own trumpet. இருந்தாலும்... <br /><br /><a href='http://www.smileycentral.com/?partner=ZSzeb008_ZNxdm824YYIN' target='_blank'><img src='http://smileys.smileycentral.com/cat/4/4_1_206.gif' alt='Bouncy 5' border=0></a><br /></font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-5647678.post-1124624156348716942005-08-21T13:06:00.000+05:302005-08-21T17:05:56.393+05:30<strong><font size=4><u>செதுக்குதல்...</font></u></strong><br /><br /><font size=2>சில நாட்களுக்கு முன்னால் தி.ஜா பித்துப் பிடித்து, 'அம்மா வந்தாள்', 'மரப்பசு', 'அக்பர் சாஸ்திரி' என்று கசாட்டாவாகப் படித்துக் கிழித்தேன்.<br /><br />மனதில் அதிகமாக - மிக அதிகமாக நின்றது 'அம்மா வந்தாள்' தான். 'மோகமுள்' படித்து முடித்த புதிதில், சில நாள் மேகக் கூட்டங்களுக்கிடையில் அலைந்தது நினைவிலிருக்கிறது. 'அ.வா' முடித்த பிறகு, 'நுணுக்கமென்றால் தி.ஜா' என்று சற்று நேரம் மெய்மறந்து உட்கார்ந்திருந்தேன்.<br /><br />நல்ல புத்தகம் படிப்பதில் பாதி சந்தோஷம், நல்ல புத்தகங்களின் ரசிக/ரசிகையுடன் அதைப் பகிர்ந்துகொள்வதும். நானும் என் நண்பியும் போன வாரம் முழுவதும் அதைத்தான் செய்து கொண்டிருந்தோம். வேடிக்கை என்னவென்றால், அவருக்குத் தமிழ் தெரியாது. பேசினால் புரியும். புளிய மர நிழலில் நான் பத்தி பத்தியாகப் படித்துக்காட்ட, உள்ளங்கையில் மோவாயை வைத்து உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ['செந்தமிழும் நாப்பழக்கம்' என்று சும்மாவா சொன்னார்கள். பதினைந்து பக்கம் 'அ.வா' படித்தவுடனேயே நாக்கு ஒரு மாதிரி மடங்கி விட்டது. படிக்கப் படிக்க சரியாகிவிட்டதென்பது வேறு விஷயம்.]<br /><br />எத்தனை முறை படித்தாலும், புதிது புதிதாக அர்த்தம் தோன்றும் நாவல் இது. <br /><br /><em>'சரஸ்வதி பூஜை'யன்று புத்தகம் படிக்கக் கூடாதென்று சொல்வார்கள்...'</em> என்று முதல் வரியே contradictionஇல் தொடங்குகிறது. அங்கேயே, கதாநாயகன் அப்பு கடைசியில் எடுக்கப்போகும் முடிவின் முன்னறிவிப்பு வந்துவிடுகிறது. நாசூக்காக, எதையும் கோடி காட்டி, அதோடு முடித்துவிடும் தி. ஜாவின் அபாரத் திறமையை எத்தனை அனுபவித்தாலும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் தோன்றுகீறது. இந்த வரிகளுக்குள் இத்தனை விஷயம் இருக்கிறதா என்று நினைக்க வைக்கும் நடை. 'காவேரி'யின் வர்ணனை, இந்து படைக்கப்பட்டிருக்கும் விதம், எல்லாவறிற்கும் மேல், அலங்காரத்தம்மாளின் பாத்திரப் படைப்பு...<br /><br />'அம்மா வந்தாள்' நாவலை முழுக்கப் படித்து முடித்த பின், என் நண்பி சொன்ன முதல் விஷயம்: <em>"என்ன ஒரு character இது!"</em> என்பதுதான். <br /><br />மொழிபெயர்ப்பின் சந்தோஷங்களில் ஒன்று - நுணுக்கமாக, வரி வரியாக ஒரு நாவலை ஆராய முடிவதுதான். முதல் முறை படிக்கும் போது ஒரு விதமாகவும், நான்காவது முறை படிக்கும்போது முற்றிலும் வேறு மாதிரியாகவும் இருக்கும். முதல் முறை அலங்காரத்தமாளைப் பார்த்த போது, அப்புவுடன் சேர்ந்து நானும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தேன். மூன்றாம் முறை படிக்கும் போது, எனக்கு முன்னால் படித்து முடித்துவிட்ட (என்) அம்மா சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. "<em>அப்புவும் சரி, அவன் அம்மாவும் சரி, சுலபத்தில் கிடைக்காத, சமூகம் ஏற்றுக்கொள்ளாத ஒன்றுக்குத்தான் ஆசைப்படுகிறார்கள்."</em><br /><br />கடைசிக் கடைசியில், அலங்காரத்தம்மாள், <em>"நீயும் அம்மாவுக்குப் பிள்ளையா இருக்கே..." </em>என்று 'நறுக்'கென்று சொல்லும் இடம்...என்ன மாதிரியான கதாபாத்திரம் இது என்று பிரமித்து போனேன். தி.ஜாவின் நடையில் துளியும் judgemental தொனி தெரியாமல் இருப்பது, அற்புதம். Wow, wow, wow.<br /><br />ஒரு விஷயத்தைத் தமிழில் தி. ஜா போன்றவர்கள் நான்கே வார்த்தைகளில் சொல்லிவிடுகிறார்கள். அதை வேறு மொழியில் கொண்டு வருவதென்றால் முழு பிதுங்கித்தான் போகும் என்பதை நேரில் அனுபவித்தேன். அதுவும் அந்த வருடங்களின் தமிழ், வார்த்தைப் பிரயோகம், மொழி ஆளுமை, எல்லாமே வேறு. அதை ஆங்கிலத்தில் அடக்குவது...? <br /><br />ம்ம்...அங்குதான் சவாலே அடங்கியிருப்பதாக எனக்குத் தோன்றும். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், பெருந்துறையில் sanatorium (TB) இருந்ததென்பது. நாவலில் இது பற்றி இரண்டு முண்ரு இடங்களில், 'பெருந்துறைல இருந்தப்ப...' என்கிற மாதிரியான பிரயோகம் வரும். 'பெருந்துறை'யின் உள்ளர்த்தம் என்னவென்று அப்போது புரியவில்லை. டி.பி. பற்றிய பேச்சு வந்ததும்தான். பெருந்துறையின் முக்கியத்துவம் புரிந்தது. <br /><br />நாளை இதைப் பற்றி நண்பியிடம் பேச வேண்டும். அப்புறம் மீண்டும் 'மோகமுள்' படிக்க வேண்டும்.<br /><br /><strong>பி.கு</strong>: பதினைந்து விசிறிக்கதைகள் முடித்துவிட்டேன். போன வாரம் நடந்த Fanfiction Awardsஇல் 'Best Original Characterization' அவார்டு கிடைத்தது.</font><br /><br /><a href='http://www.smileycentral.com/?partner=ZSzeb008_ZNxdm824YYIN' target='_blank'><img src='http://smileys.smileycentral.com/cat/36/36_2_27.gif' alt='Bounce' border=0></a>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-5647678.post-1118254259247628872005-06-08T20:43:00.000+05:302005-06-08T23:47:20.446+05:30<font sie=4><b><u>Me and Meme</u></b></font><br /><br /><font size=2>புத்தகம் படிக்கும் வழக்கத்திற்காக வாங்கிக்கட்டிக்கொள்ளூம் அனுபவம் எத்தனை பேருக்கு ஏற்பட்டிருக்கிறதோ, தெரியவில்லை. நான் திட்டு வாங்கிய சமயங்கள் ஏராளம், ஏராளம். சாப்பிடும்போது மடியில் புத்தகத்தை வைத்துப் புரட்டிக்கொண்டே சாப்பிடும் பழக்கத்திற்காக கணக்கு வழக்கில்லாமல் 'கடி' பட்டிருக்கிறேன். ("<em>என்னிக்காவது சோறுன்னு நெ¨னைச்சு, பேப்பரைக் கடிக்கப்போற</em>...")<br /><br />இத்தனை அனுபவங்களுக்குப் பிறகும் புத்தகப் பழக்கம் விடாமல் என்னைப் பீடித்துக்கொள்ள, இன்று வரையில் சாப்பாடும் புத்தகமும்ம் ஈருடலும் ஒருயிருமாக ஒன்றுடன் கலந்து போய்விட்டன. <br /><br />அப்படியிருக்க, பிடித்த புத்தகம் பற்றி எழுத அமையும் சந்தர்ப்பத்தை விடுவதா, என்ன? அதுவும் நண்பர்கள் <a href="http://kvraja.blogspot.com/">கேவியாரும்</a> <a href="http://thavam.blogspot.com/">மீனாக்ஸ¤ம்</a> சொல்லியனுப்பிய பிறகு... :) <br /><br />இதோ என் பட்டியல்...<br /><br />என் அறையின் அலமாரியில் கன்னாபின்னாவென்று கிடப்பவை (புத்தகத்திற்கு அழகு, இப்படிக் கிடப்பதே.): <br /><br />ம் ? பல வருடச் சேகரிப்பின் பலன்: தமிழும் ஆங்கிலமும் கலந்து தோராயமாக... 450 - 500 வரை இருக்கும். நூலகம் சென்று ஷெல்·பு ஷெல்·பாகத் தேடியெடுப்பது தனி. :)<br /><br />எவ்வளவுதான் சீரியஸ் விஷயங்கள் படித்தாலும்...<br />அடிப்படையில் நான் ஒரு fiction-junkie. <a href='http://www.smileycentral.com/?partner=ZSzeb008_ZNxdm824YYIN' target='_blank'><img src='http://smileys.smileycentral.com/cat/4/4_1_3v.gif' border=0></a><br /><br /><strong><u>தமிழில் எனக்கு மிகப் பிடித்த புத்தகங்கள்:</u></strong><br /><br /><strong>1.</strong> ஹா. இதைச் சொல்வது ரொம்ப கடினமோ? <strong>'பொன்னியின் செல்வன்'</strong> தான் முதல். 'சிறுவர் இல்லகியம்'/ 'பாப்பா மலர் கதை'/ 'ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம்...' - என்ன மாதிரியாக வேண்டுமென்றாலும் நக்கலடிக்கப்படலாம். இருக்கட்டும். இப்பொழுதே கிராண்ட் ஸ்வீட்ஸ் ரேஞ்சுக்கு சிறிய பெட்டியில் அடைத்து 'பாக்கெட் சைஸ்' நாவலாக விற்கிறார்கள். வருகிற வருடங்களில் இன்னும் 'வாசிப்பனுபவத்தில்' புதுமைகள் புகுத்தப்படும்போது...'பொ.செ'தான் முதலில் நிற்கும். ['காலத்தை வெல்லும் எழுத்து', என்று இலக்கிய உலகில் அடிக்கடி பயன்படும் ஒரு சொற்பிரயோகம் - அதுதான். அதுவேதான். ] <br /><br /><strong><em>பிடித்த பகுதிகள்</em></strong>: மொத்த நாவலும். அதிலும் மிக மிகப் பிடித்த பகுதிகள்: குந்தவை-வந்தியத்தேவன் காதல், அருள்மொழிவர்மரும் வந்தியத்தேவனும் முதன் முதலில் சந்தித்துக்கொள்ளூம் சமயம், ஆதித்த கரிகாலன் மரணம், ஆழ்வார்க்கடியான் தடயடி சம்பவங்கள், கடம்பூர் சதித்திட்டம், நந்தினியை வ.தேவன் இடிந்த மாளிகையில் சந்திக்கும் கட்டம்... <br /><br /><strong>2. 'தில்லானா மோகனாம்பாள்' </strong>- கொத்தமங்கலம் சுப்புவின் தமிழ் கொஞ்சி விளையாடும். நடனம், இசை, பற்றி அவர் பொழிந்து தள்ளியிருக்கும் வர்ணனைகளைப் படிக்க உட்கார்ந்தால்...புத்தகத்தை மீண்டும் கீழே வைப்பது சிரமம். 'தி.மோ' வை முதன் முதலில் படிக்க ஆரம்பித்த போது, அதைத் தூக்கிக்கொண்டே அலைந்து கை கடுத்தது நன்கு நினைவிலிருக்கிறது.<br /><br /><strong><em>பிடித்த பகுதிகள்</em></strong>: சண்முகசுந்தரம்-மோகனாம்பாள் போட்டி நடனம், அவர்களிருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகும் தருனத்தில் ஊரில் ஏற்படும் பேச்சுக்கள், சண்முகசுந்தரம் மோகனாவுக்குத் தான் விரும்பிய வகையில் புடவை நெய்து தரும் சமயம். (படத்தில் இதெல்லாம் கிடையாது. ப்ச்.)<br /><br /><strong>3. 'கரையெல்லாம் செண்பகப்பூ'</strong>- சுஜாதாவின் நாவல்களில் என்னை மிக மிகக் கவர்ந்தது இது. எனக்குப் 'புதையல்' கதைகளின் மீது பிடித்தம் அதிகம். இதிலும் 'எழுத்து மன்னர்' புகுந்து விளையாடியிருப்பார். சுஜாதா ஒரு 'கிம்மிக் எழுத்தாளர்' என்னும் குற்றச்சாட்டைக் கேட்கும் போதெல்லாம், 'இந்தக் கதையைப் படித்தவர்கள் அதைச் சொல்வார்களா?' என்று நினைத்துக்கொள்வது என் வழக்கம்.கொசுறாக, அவரது 'ஒரு சாதாரணக் காதல் கதை'யையும் லிஸ்ட்டில் சேர்த்து விடுகிறேன். <br /><br /><strong><em>பிடித்த பகுதிகள்</em></strong>: 'பழையனூர் நீலி' கதை, ஜமீந்தாரிணி ரத்னாவதியின் உடைந்த ஆங்கிலக் குறிப்புகள் ('Rathna not happy...') - படிக்கும்போதே மனம் கரைந்து போகும். சிநேகலதாவின் கொலை, அப்புறம் கதையின் உச்சமாகப் புதையல் கண்டுபிடிப்பு...chilling.<br /><br /><strong>4. 'பூர்ண சந்திரோதயம்' </strong>- வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல். :). மகா, மெகா பழையது...ஆனால் அவர் கையாண்டிருக்கும் விஷயங்களையும், அவரது அபாரமான நடையையும் பார்க்க வேண்டும் நீங்கள். கதை என்னவோ காதல் கதைதான்...அதையே Alexander Dumas ரேஞ்சுக்கு சதி, கொலை, கொள்ளை, முகமூடியிட்ட கோஷா பெண்கள் என்று கலந்தடித்திருப்பார். எனக்குத் தெரிந்து அந்தக் காலத்தின் taboo விஷயங்கள் பலவற்றை இந்தக் கதையில் அவர் தைரியமாகக் கையாண்டிருக்கிறார். (ஒரே பெண்ணைக் கவர - கவனிக்க: 'கவர', திருமணம் செய்துகொள்ள அல்ல - ஐந்து பேர் திட்டம் போட்டுக் களமிறங்குவதில் ஆரம்பித்து...)<br /><br /><strong><em>பிடித்த பகுதிகள்</em></strong>: 'பூர்ணசந்திரோதயம்' (கதாநாயகி) அறிமுகமாகும் இடம், துரை-துரைசானிகள் வாழ்க்கை முறை...எல்லாமே. ஒரு நூற்றைம்பது வருடக் காலக் கண்ணாடி மாதிரியுள்ள புத்தகம் இது. :)<br /><br /><strong>5. 'இன்பக்கேணி' </strong>- பிரபஞ்சனின் நாவல். வில்லியனூரைச் சேர்ந்த ஆயி என்னும் கணிகையின் வாழ்க்கை. கதையைப் படித்து முடித்த போது, 'திறமையாக வரலாறும் கற்பனையும் கலந்த கதை' என்று நினைத்தேன். வேலை விஷயமாக பாண்டிச்சேரி செல்ல நேர்ந்த போது, அங்கிருந்த 'ஆயி' மண்டபம், சங்கராபரணி ஆற்றங்கரை, எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்து, 'கதை கொஞ்சம், வரலாறு அதிகம்', என்று உணர்ந்தேன். அது ஒரு இனிமையான அனுபவம்.[கொசுறுத் தகவல்: பாண்டியில் ரிக்ஷாக்கரரை 'ஆயி மண்டபம் எங்கே?' என்று விசாரிக்க, அவர் குழப்பம்/நக்கல் கலந்த பார்வையுடன் 'ஆயில் மண்டபமா? இன்னாது?' என்று பதில் கொடுக்க...]<br /><br /><strong><em>பிடித்த பகுதிகள்</em></strong>: பிரபஞ்சனின் நடை. வாசகர்களை அந்தக் காலத்திற்கே இட்டுச் செல்லும் திறமை. ஆயியின் நடை உடை, பாவனைகள், வர்ணனை... <br /><br /><strong>6. 'கோபல்ல கிராமம்'</strong> மற்றும் <strong>'தமிழ்நாட்டு நாடோடிக் கதைகள்'</strong>: கி.ராவின் master-pieces. வேறென்ன சொல்ல? <br /><br /><em><strong>பிடித்த பகுதிகள்</strong></em>: அத்தனையும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், கோபல்ல கிராமத்தின் வித்தியாசமான குணச்சித்திரங்கள். :)<br /><br /><strong>7. 'சங்கச்சித்திரங்கள்'</strong> - ஜெயமோகன்: சங்கப் பாடல்களையும் இன்றைய வாழ்க்கையயும் அவர் முடிச்சுப்போட்டிருக்கும் விதம் அருமை. ஆரம்பத்திலுருந்துதான் படிக்க வேண்டும் என்றில்லாமல், எங்கே வேண்டுமானாலும் ஆரம்பித்து, எங்கு வேண்டுமானாலும் முடிக்கலாம். ஜெ.மோவின் வழக்கமான (சற்றே கடின) நடையில்லாமல், இதில் எளிமை தான் ஓங்கி நிற்கும். <br /><br />இவை தவிர ஜெ.கா, தி.ஜா, ராஜம் கிருஷ்ணன் என்று அத்தனை பேரையும் நூலகத்தில் அடிக்கடி சந்திப்பதுண்டு. அந்தப் பட்டியல் போட்டால் நாளை முழுவதும் எழுத வேண்டி வரும். ஆங்கிலத்திற்குச் செல்கிறேன். :)<br /><br /><strong><u>ஆங்கிலத்தில் பிடித்தவை:</u></strong><br /><br /><strong>1. <a href="http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/B00003OSTW/103-4052892-1475835?v=glance">The Shoes of the Fisherman</a> ( Morris West)</strong>. Anthony Quinn நடித்த இந்தப் படத்தை யதேச்சையாக என்றோ ஓரிரவு பார்த்து அசந்து போனதின் விளைவாக இந்த புத்தகத்தைப் படித்தேன். போப் தேர்தல் சம்பந்தபட்ட புத்தகம். சைபீரியச் சிறை ஒன்றில் 17 வருடங்கள் சித்திரவதை பட்ட ஒரு கார்டினலை, போப் இறந்த பிறகு தடாலடியாக புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கிரார்கள். தனிமையில் பல வருடங்கள் கழித்த அவர், ரோமின் அரசியல நிலவரத்தையும், தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை.<br /><br /><strong><em><em>பிடித்த பகுதிகள்</em></em></strong>: அமைதியான, ஆழமான நதி போல் செல்லும் நடை. மனசஞ்சலத்திற்கு இந்தப் புத்தகம் சிறந்த மருந்து. கிரில் லகோட்டா (அவர்தான் போப்) வின் கடவுள் பற்றிய சிந்தனைகள், அவர் போப்பாகத் தெந்தெடுக்கப்பட்ட பிறகு, யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல், 'என் மக்களைக் காணச் செல்கிறேன்' என்று சாதாரணப் பாதிரியாக வேடமிட்டு 'ரோ'மை நகர்வலம் வருவது, வாட்டிகன் நகரத்தின் பிரச்சனைகளை சமாளிப்பது...எல்லாமே, எல்லாமே.<br /><br /><strong>2. <a href="http://www.readinggroupguides.com/guides/memoirs_of_a_geisha.asp">Memoirs of a Geisha</a> (Arthur Golden)</strong> - சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஜப்பானிய கீய்ஷா பெண் ஒருத்தியின் வாழ்க்கையின் சில வருடங்களைத் தொகுத்து (சற்றே கற்பனை கலந்து) வழங்கும் புத்தகம். முதல் வாசிப்பில் depressingஆக இருந்தது உண்மை. போகப் போக நடையின் வசீகரம் கவர்ந்துவிட்டது. <br /><br /><em><strong>பிடித்த பகுதிகள்</strong></em>: கிமோனோ உடை வர்ணனைகள் (ஏயப்பா! அது என்ன பட்டுத் துணியா, அல்லது கனவுகளை இழைத்து நெய்த சமாச்சாரமா?). அன்றைய ஜப்பானிய (குறிப்பாக கீய்ஷாவின்) வாழ்க்கை முறை, கதை முழுவதும் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் மெல்லிய சோகம்...<br /><br /><strong>3. <a href="http://www.bookbrowse.com/reviews/index.cfm?book_number=326">Bridget Jone's Diary</a> (Helen Fielding)</strong> - ஒரு சாதாரணப் பெண்ணின் டைரி. ஒரு டைரி படிப்பது போல் சுவாரசியமான விஷயம் வேறு உண்டா? :)<br /><br /><em><strong>பிடித்த விஷயம்</strong></em>: கதாநாயகியின் தினப்படி சில்லறைப் பிரச்சனைகள் - அலுவலகத்தில் ஆரம்பித்து, நண்பர் நண்பிகள் வரை, தினம் எழுதப்படும் டைரி போல் இருக்கும் நடை. <br /><br /><strong>4. Pride and Prejudice (Jane Austen)</strong> - பத்தி பத்தியாக ஒரு <a href="http://pavithra.blogspot.com/2005/04/blog-post.html">பதிவே</a> செய்திருக்கிறேன். :)<br /><br /><strong>5. <a href="http://www.blackmask.com/books12c/greenodysseydex.htm">The Green Odyssey</a> (Philip Jose Farmer)</strong>: சைன்ஸ்-·பிக்ஷன் என்னும் மிகப்பெரிய கடலில் காலடி நனைக்க வைத்த அருமையான நாவல்.வேற்று கிரகத்தில் மாட்டிக்கொள்ளூம் மனிதன் ஒருவன். மூட நம்பிக்கைகளின் ஊறிப்போய் மூச்சு மூட்டிப் போயிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து அவன் எப்படி வெளியேறி தப்பித்துச் செல்கிறான் என்பதுதான் கதை.<br /><br /><em><strong>பிடித்த பகுதிகள்</strong></em>: வேற்றுக்கிரக வர்ணனை, கதாநாயகன் முதன் முதலில் தப்பிக்கும் கட்டம், இறுதியில் அந்தக் கிரகத்தில் அற்புத ரகசியம் ஒன்றைக் கண்டுபிடித்து அவன் தப்பித்துச் செல்லும் இடம்...<br /><br /><strong>6. Ashok Banker's Ramayana </strong>- நெருங்க முடியாத கடவுளை மனிதனாக்கி, அவனது உணர்வுகளில் என்னையும் பங்குகொள்ள வைத்த தொடர் நாவல்கள். இதைப் பற்றியும் முன்னமே எழுதியிருக்கிறேன். <br /><br /><strong>7. O'Henry's Shortstories</strong> - 'Gift of the Magi'தான் என்னை முதலில் படிக்கத் தூண்டியது என்றாலும், அப்புறம் முழுத்தொகுதியையும் படித்து முடித்து பிரமித்துப்போனேன். இவரளவுக்கு நடையாளுமை உள்ள எழுத்தாளரை ஆங்கிலத்தில் நான் இதுவரை பார்த்ததில்லை. Whew. <br /><br /><strong>8.</strong><strong>Harry Potter</strong>, மற்றும் <strong>Lord of the Rings</strong> Series. :)<br /><br />இன்னும்...இன்னும்...இன்னும்...[கை வலிக்கிறது. <a href='http://www.smileycentral.com/?partner=ZSzeb008_ZNxdm824YYIN' target='_blank'><img src='http://smileys.smileycentral.com/cat/4/4_2_108.gif' border=0></a>]<br /><br /><strong><u>படிக்க நினைக்கும் புத்தகங்கள்...</u></strong><br /><br /><strong>1.</strong> Revenge of the Sith - Matt Stover<br /><strong>2.</strong> Dark Tower Series - Stephen King<br /><strong>3.</strong> பாதி படித்து வைத்திருக்கும் ராஜம் கிருஷ்ணனின் 'வனதேவியின் மைந்தர்கள்'<br /><strong>4.</strong> ஜெ.கா வின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'<br /><strong>5.</strong> Pied Piper - Nevil Shute<br /><br />இவர்களும் இந்த Memeஇல் கலந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்:<br /><br /><a href="http://aruna52.blogspot.com/">அருணா ஸ்ரீனிவாசன்</a><br /><a href="http://uyirmmai.blogspot.com/">மனுஷ்யபுத்திரன்</a><br /><a href="http://espradeep.blogspot.com/">'மழை' ப்ரதீப்</a><br /><a href="http://tamil.kparthas.com/">'வலைமொட்டுக்கள்' கண்ணன்</a><br /><a href="http://nesakumar.blogspot.com/">நேசகுமார்</a><br /><a href="http://upsaid.com/bala_j/">சோடாபாட்டில்</a><br /><br />என் ஆவல்தான். மற்றவை அவர்கள் கையில்... :)</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5647678.post-1115202678543453852005-05-04T15:28:00.000+05:302005-05-04T16:01:18.676+05:30<font size=4><u>இன்று மலர்ந்த காலை...</u></font><br /><br /><br /><font size=2>வலைப்பதிவிலோ, குழுமத்திலோ, எழுத்து மூலம் மட்டுமே சந்திக்கும் நண்பர்களை நேரில் பார்ப்பது ஒரு வித்தியாசமான, சந்தோஷ அனுபவம். இன்று காலையும் அப்படியொரு அனுபவம்தான். ஏழரை மணிக்கு ஜெயா டீவியில் நண்பர் பிகேஎஸ்ஸின் (அசப்பில் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் மாதிரி இருக்கிறார் :-) பேட்டி [(ஒளிபரப்பப்போகும் நேரம் நன்கு நினைவிலிருந்தது - பிரசன்னாவும் காலையில் தொலைபேசி ஞாபகப்படுத்தினார் :)] . Anyindian.com பற்றி நளினமான செந்தமிழில், கோர்வையாகப் பேசினார் (கொஞ்சம் நெர்வசாக இருந்தாரோ? :). தொகுப்பாளர்களும் அதிகபட்ச விஷயத்தை வெளிக்கொண்டு வரும் முறையில் ( அஞ்சல் செலவிலிருந்து, எவ்வளவு விற்பனை என்பது வரையில்) கேள்விகள் கேட்டார்கள். <br /><br />மென்பொருள் வடிவமைப்பு ஆலோசகர் என்பதிலிருந்து, தமிழ் இலக்கியத்திற்கு எப்படி வந்தார் என்பது அவர் விவரித்தது சுவையாக இருந்தது. பார்க்கப் பார்க்க, 'இவர் அசாத்திய சுறுசுறுப்பு மனிதர்' என்பது மீண்டும் மீண்டும் உறுதியாயிற்று. சுவாரசியமான நாற்பது நிமிடங்கள்.</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5647678.post-1113631997519188392005-04-16T11:37:00.000+05:302005-04-16T11:43:17.523+05:30<font size=4><u>ருத்ர பூமி</u></font><br /><br /><br /><font size=2>அது ஒரு போர்க்களம். குவிந்து கிடக்கும் போர்க்கருவிகளும், உக்கிரமான சண்டையின் மிச்சங்களும் பரவியிருந்தன; எங்கும் புகை-ஒரு வித தீய்ந்த நாற்றம். கலப்படமாகக் கூச்சல்கள். அங்குமிங்கும் ஒரு வித கையாலாகாத்தனத்துடன் போருக்குத் தப்பியவர்களைக் காப்பாற்றும் சில உத்தம உயிர்கள். இனிமேலும் இப்படியொரு கொடுமையை எப்போதும், எங்கும் நடக்கவிடக்கூடாது என்று ஆயிரமாவது முறையாக நினைக்கும் தலைவர்கள். 'இதிலிருந்து எப்போது மீளப்போகிறோம்?' என்று கவலையிலாழும் இன்னபிற ஜீவன்கள்... <br /><br />...அப்பா சமைத்து முடித்தபின் உருவெடுக்கும் நிலவரம். <br /><br />என் தந்தையாரின் சமையல் செஷன்களின்போது, அருகிலிருந்து பார்த்து [உதவி], நான் அறிந்துகொண்ட அரிய பெரிய தகவல்கள்...<br /><br /><strong>1.</strong> இருப்பதிலேயே மிகக் கடினமான, சாமானியத்தில் செய்துமுடிக்க முடியாத, சமையல் புத்தகத்தில் பக்கம் பக்கமாக நீளும் உணவு வகைகளையே தேர்ந்தெடுப்பார். ["<em>அதான் குழம்பு ரசமெல்லாம் தெனமும் செய்யறமில்ல</em>?" - அசைக்க முடியாத லாஜிக்.]. <br /><br /><strong>2.</strong> மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் வழி வந்த லட்சியவாதி. 'சமையல் என்னும் இமயத்தை ஒரே நாளில் வென்று விடலாம்' என்று தீர்மானமாக நம்பும் அசாத்திய தீரமும் வீரமும் படைத்தவர். <br /><br /><strong>3.</strong> சமையலறையில் பயன்படும் பாத்திரங்கள் அத்தனையையும் கடை பரத்திவிட வேண்டும் என்பது 'அப்பா சமையல் செஷன்'களின் எழுதப்படா விதி. அரியது, பெரியது, சிறியது என்று மேடை கொள்ளாமல், கல்யாண சீர் வரிசை ரேஞ்சுக்குப் பாத்திரங்கள் நிரம்பி வழியும் [அப்போதுதான் உள்ளேயே நுழைய முடியாமல் கூஜாக்களின் மீதும், அடுக்குகளின் மீதும் தடுக்கி விழலாம்.]<br /><br /><strong>4.</strong> தோராயமாக 10.4569123 விநாடிகளுக்கு ஒரு முறை எங்களிடம் "<em>இப்ப புளியைக் கரைக்கணுமா, கடுகு தாளிக்கணுமா</em>?" என்று கேள்வி எழுப்பப்படும். அதனால் வேறு காரியங்களில் ஈடுபடாமல், சமையலறைக்கு வெளியே, பத்தடி தூரத்தில் 'உதவிக்கு' அமர்ந்திருப்பது நலம். <br /><br /><strong>5.</strong> சமையலறைக்குள்ளேயே 'உதவி' செய்வது ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. [அப்போது சமையல் 'ஆபரேஷ'னில் நாமும் கலந்துகொண்டதாக அர்த்தம் வந்துவிடும்.] <br /><br /><strong>6.</strong> இதற்காகத் தொலைவில் [அதாவது ஹால், அவரவர் அறை] சென்றுவிடக்கூடாது. "<em>நான் இங்கே கிடந்து அல்லாடறேன்; உங்களுக்கெல்லாம் டீவி கேக்குதோ</em>?" என்பன போன்ற கூச்சல்கள் செவிப்பறையைக் கிழிக்கும். [காதில் பஞ்சு வைத்துக்கொள்வது unacceptable.] <br /><br /><strong>7.</strong> அவ்வப்போது எழும் காரசாரமான அதட்டல்கள் ["<em>கிச்சனை இப்படியா வெச்சுக்கிறது? எது எங்க இருக்குன்னு ஒண்ணுமே புரியலை</em>..."]<br /><br /><strong>8.</strong> கொஞ்ச நேரத்தில் பட்டாசு வெடிக்கும் சப்தம், மற்றும் சுவரெங்கும் எண்ணேய் தீற்றல்கள் ["<em>சீடை செய்யிறது ரொம்ப ஈஸி இல்லை</em>?"], மேடை முழுவதும் குழப்படியான வழவழப்பு ["<em>நல்லெண்ணெய் கொட்டிப்போச்சு...</em>"], ஒரு வித இனம் காண முடியாத அபூர்வ வாடை ["<em>அதான் என்னன்னு எனக்கும் தெரியலை</em>..."] <br /><br /><strong>9.</strong> "<em>வாசனை வருதா</em>?" என்று சில நிமிடங்களுக்கொரு முறை [மிக ஆவலாகக்] கேள்வி எழுப்பப்படும். இதற்குக் பட்டுக்கொள்ளா¡மல், ஒரு மையப் புன்னகை புரிந்துவிட்டு, "<em>ரொம்ப நல்லா இருக்கு</em>," "<em>அட, நல்லாயிருக்கே</em>..." என்னும் பதில்களைத் தரவேண்டும். [ஒரேயடியாக "<em>அற்புதம், சூப்பர்,</em>" என்று உளறிக்கொட்டாமல் இருப்பது பிற்காலத்தில் நன்மை பயக்கும். "<em>என்ன வாசனை</em>?" "<em>என்னவோ தீயுது</em>," போன்ற பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.]<br /><br /><strong>10.</strong> 'சமையல்' முடிந்த பிறகு [இதற்கு குறைந்தது மூன்று மணி நெரமாவது ஆக வேண்டும்; சமையலறையிலிருந்து வெற்றிப்பெருமிததுடம் அப்பா புறப்படுவார்] - எல்லாவற்றையும் தகுந்த பாத்திரங்களில் மாற்றி, டேபிளில் அடுக்க வேண்டும் [நாங்கள் யாரும் டேபிளில் சாப்பிடுவதில்லை].பிறகு எல்லோரும் அணிவகுத்து நின்று, சமையலை ருசி பார்க்க வேண்டும். ["<em>நான் அப்புறம் சாப்பிடறேன்</em>..."]<br /><br /><strong>11.</strong> சமைத்த எல்லாவற்றையும் [அவை நம்மளவு பெரிய அடுக்குகளில் இருந்தாலும்] பத்தாவது நிமிடம் காலியாக்க வேண்டும். <br /><br /><strong>12.</strong> "<em>நீயே தெனமும் சமைக்கலாம்,</em>" என்று பாராட்டுப் பத்திரம் அவசியம் கொடுக்க வேண்டும். <br /><br /><strong>13.</strong> இப்பாராட்டுப் பத்திரத்தை நிஜமாக்காமல் இருக்க பெருமுயற்சி எடுக்க வேண்டும். ["<em>அன்னிக்கு சாப்டதே இனிக்கும் நாக்குல நிக்குது</em>..."]<br /><br /><strong>14.</strong> அதையும் மீறி உள்ளே நுழைந்தால், எமெர்ஜென்சி உத்திகள் கடைபிடிக்க தயாராக இருக்க வேண்டும். <br /><br /><strong>15.</strong> இவையெல்லாவற்றையும் மீறி, அத்தனை போர்க்கால நடவடிக்கையையும் தாண்டி, (அம்மா சமையல் போல் இல்லாவிட்டாலும்) எனக்குப் பிடித்த உணவுகளாகவே சமைக்கும் அப்பாவின் சமையலில் ஒரு வித ருசி இருக்கத்தான் செய்கிறது என்பதை மனம் உணர, அதை நினைத்து அதிசயப்பட வேண்டும்.<br /><br />Yup. இன்று அப்பா சமையல்.</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-5647678.post-1113551720688275702005-04-15T13:18:00.000+05:302005-04-15T13:26:44.646+05:30<font size=4><u>...!</u></font><br /><br /><font size=2>இன்று ஒரு <a href="http://www.kausal.com/leonardo/">மகா-மெகா-திறமைசாலியின்</a> பிறந்தநாள். இவரின் சாதனைகளுக்கு அளவே இல்லை. சகலகலா வல்லவர். <br /><br />எல்லோரின் வாழ்த்துகளும் இவருக்கு உரித்தாகுக.</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-5647678.post-1113212348852467782005-04-11T11:15:00.000+05:302005-04-11T15:09:38.146+05:30<font size=4><u>கிழக்கும் மேற்கும்...</font></u><br /><br /><br /><font size=2><p align=center>"<em>பணமும் வசதியும் படைத்த, திருமணமாகாத வாலிபன் ஒருவன் முதலில் தேடுவது - மணம் செய்துகொள்ள ஒரு அழகான பெண். இது உலகம் முழுதும் அறிந்த, ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை." <br />- <strong>Jane Austen</strong></em>.</p><br /><br />பல நாட்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்து, நேற்று முன் தினம் <a href="http://www.themoviebox.net/movies/2004/0-9ABC/Bride-and-Prejudice/main.html">'Bride and Prejudice</a>' திரைப்படத்தை வெற்றிகரமாகக் கண்டுவிட்டேன்[ஒரு படம் வெளி வந்து மாசக்கணக்கான பிறகுதான் எனக்குப் பார்க்கக்கிடைக்க வேண்டும் என்பது என் விசித்திர ராசி.] <br /><br />B&Pஐ நான் பார்க்க நினைத்ததற்குப் பல காரணங்கள். ஒன்று, அது எனக்கு மிக மிகப் பிடித்த நாவலான, ஜேன் ஆஸ்டென் என்னும் அற்புத எழுத்தாளரின் 'Pride and Prejudice' ஐ மூலக் கதையாகக் கொண்டது. P&P நாவலை நான் எத்தனை முறை படித்துப் போட்டிருக்கிறேன் என்று கணக்கில்லை - ஏறக்குறைய 'பொ.செ' வைப்போல், எடுத்துப் படிக்க ஆரம்பித்தால், முழுதும் முடிக்கும் வரையில் கீழே வைக்கமுடியாத அற்புதப் படைப்பு அது. ஆஸ்டெனின் நடை அப்படிப்பட்டது; அவர் கையாண்டிருக்கும் கதாபாத்திரங்கள் கச்சிதமானவை. 'P&P'யின் கதைக்களம் இங்கிலாந்து - என்றாலும், கதையில் வரும் எல்லோரும் நாம் தினசரி வாழ்க்கையில் பார்ப்பவர்கள் - பெண்களின் திருமணத்தையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு, வருவோர் போவோரிடமெல்லாம் அதைப் பற்றியே பேசும் (ரசனையோ, திறமையோ அற்ற) தாய், வாழ்க்கையின் அபத்தங்களைப் (தன் மனைவியின் நடவடிக்கை உட்பட) பார்த்து ரசிக்கும் (என்றாலும் அது விஷயமாக ஒன்றும் செய்ய முடியாத, சற்றே கையாலாகாத்தனத்துடன்)வாழும் தந்தை, ஐந்து பெண்கள். முதலிரண்டு பெண்களான ஜேனும் எலிசபெத்தும் (jane and Elizabeth) புத்தியும் அழகும் சம அளவில் கலந்த, நாகரீகமும் பண்பும் தெரிந்த மங்கையர்; மூன்றாவது தங்கை மேரி (தன் கலைத்திறமை மீது அதீத நம்பிக்கை கொண்ட,) அரைகுறை புத்தகப் புழு; கடைசி இரு தங்கைளும் உருப்படியாக சிந்திக்கத் தெரியாத, அடுத்தவர்கள் மீது மரியாதையற்ற, அதிக உலக அனுபவமில்லாத இரு சிறுமிகள். ஐவரில் இரண்டாவது மகளான எலிசபெத் பென்னெட் தான் நம் கதாநாயகி. இந்தக் கதை முழுவதுமே ஏறக்குறைய அவளது பார்வையில்தான் நகர்கிறது. <br /><br />சிற்றோடை போல் அதிக சலசலப்பின்றி செல்லும் அவர்களது வாழ்வில் திடீரென இரு பணக்கார இளைஞர்கள் வந்து சேருகிறார்கள் - அவர்களின் வருகையால் பென்னெட் குடும்பத்தில் ஏற்படும் சலனங்களும் எலிசபெத், மற்றும் அவளது சகோதரி ஜேனின் மன நிலையும்தான் கதையின் கரு.<br /><br />ஜேன் ஆஸ்டென் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் - அவர் தன் கதாபாத்திரங்களின் மன உணர்ச்சிகளைக் கையாளும் விதம். 'அவள் சோகத்தில் மூழ்கினாள்; அவன் மனமுடைந்து போனான்' என்பது போன்ற cliche வாக்கியங்களை ஆஸ்டெனின் எழுத்தில் காணமுடியாது - அவரது நாயகர்களும் நாயகிகளும் முப்பரிமாண உருவம் கொண்டவர்கள். படிக்க ஆரம்பித்தவுடன் காகிதத்திலிருந்து எழுந்து உயிர் பெற்று நம் கண் முன் நடமாட ஆரம்பிப்பார்கள். அவர் எழுதிய காலகட்டத்தையும், அப்பொழுது பெண் கல்வி எவ்வளவு தூரத்தில் இருந்ததென்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஆஸ்டெனின் எழுத்து புரட்சிகரமானது என்றுதான் சொல்ல வேண்டும். அவரது காலகட்டத்தில் எழுதிய எழுத்தாளர்கள் ஒன்று, பெண்களுக்கு புத்தி சொல்லும் புத்தகங்களாக எழுதிக் குவித்தார்கள் ('Fordyce's Sermons ஒரு நல்ல உதாரணம். 'புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே' ரேஞ்சுக்கு அறிவுரைகளாக இருக்கும் :-). இன்றைய 'How to...' புத்தகங்கள் போல என்று வைத்துக்கொள்ளுங்கள். ) அடக்க ஒடுக்கமான பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பெண்கள் இந்த மாதிரிப் புத்தகங்களைப் படித்துப் அறிவை(?) வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது அன்றைய இங்கிலாந்தின் மேல்மட்டக் குடும்பங்களின் எழுதப்படாத விதி. படிப்பதாக இருந்தால் இந்த மாதிரிதான் படிக்க வேண்டும். நூலகங்களில் புழங்கும் 'நாவல்'கள் படிப்பதற்கு உகந்தவை இல்லை (அன்றைய புத்தகங்களின் அதிகம் காணக்கிடைக்கும் வசனம்: "சேச்சே, நான் நாவலெல்லாம் படிக்கிறதில்லை..."). தரமான புத்தகம் என்றாலும், அளவுக்கு மீறிப் படித்துத் தொலைத்துவிடக்கூடாது - அப்புறம் மாப்பிள்ளை பிடிப்பது கடினம். [அவர்கள் காலத்தில் அதிகம் படித்து, சுயமாக சிந்திக்கவும் தெரிந்த அபூர்வப் பெண்களுக்குப் பெயரே உண்டு - இவர்களை 'blue stockings' என்று அழைப்பார்கள். இந்த blue stockings பெண்களைக் கண்டால் எல்லோரும் பல காத தூரம் ஓட்டமெடுப்பது வழக்கம் (இப்போது என்ன மாறிப்போய்விட்டது என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது...). சுயமாக யோசிக்கும் பெண் குடும்பத்திற்கு அடங்க மாட்டாள் என்ற நினைப்புதான் காரணம். (எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை?)] <br /><br />நம் எலிசபெத் ஏறக்குறைய இந்த சிக்கலில் மாட்டுகிறாள் (புத்தகம் படிக்கும், சுயமாக யோசிக்கும், அடுத்தவர்களின் அரட்டல் உருட்டல்களாலும் - குறிப்பாக பணம் படுத்தும் பாட்டினாலும் - அதிகம் பாதிக்கப்படாத புத்திசாலி. அவள் தப்பிக்கும் இடம் ஒன்று உண்டு - அழகு. குற்றங்குறையில்லாத முக வசீகரம். எலிசபெத் குரூபியாக இருந்திருந்தால் 'P&P' எப்படி மாறிப்போயிருக்குமோ? [தெரிந்தேதான் ஆஸ்டென் புத்திசாலித்தனமாகக் கதாநாயகியை ஓரளவு அழகாகப் படைத்துவிட்டார் போலும். அறிவாளி.]. <br /><br />புத்திசாலியாக, சுயசிந்தனை உள்ள பெண்ணாக இருந்தும் (!), எலிசபெத் எப்படி தனக்குரியவனை அடைகிறாள் என்பதுதான் கதை. 'B&P' வெளியானவுடன், குரிந்தர் சாதா இதை எப்படி இந்தியத்தனமாக மாற்றியிருப்பார் என்று பார்க்கவும் ஆவலாக இருந்தது (அப்படி ஒன்றும் கடினம் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்திற்கும் நம் வாழ்க்கை முறையும் பல விஷயங்களில் ஒத்துப்போகின்றன. )<br /><br /><strong>1.</strong> முதலில் கதாபாத்திரங்களும், அவர்களுடைய பெயர்களும். பென்னெட் குடும்பம் 'பக்ஷி' குடும்பம் ஆகிறது. இங்கிலாண்ட் அம்ரித்ஸராக மாறுகிறது. ஜேன் ஜெயாவாகவும், எலிசபெத் லலிதாவாகவும், Mr. Collins கோலி-ஸாப் ஆகவும் பெயர் மாறுகின்றனர். நல்ல வேளையாக, இயக்குனர் மூலக் கதையின் கதபாத்திரங்கள் எல்லாவற்றிற்கும் பொருத்தமான இந்தியச் சூழல் கொடுத்துவிட்டார். திருமதி பக்ஷி சமயம் கிடைக்கும் போதெல்லாம் திருமணம் பற்றிப் பேசுகிறார்; அழுகிறார்;, பலர் கூடியிருக்கும்போது உரத்த குரலில் அபத்தமான விஷயங்களைப் பற்றிப்பேசுகிறார். கோலி-ஸாப் அமெரிக்கப் பைத்தியம் பிடித்து, இந்தியா சம்பந்தமான எல்லாம் பிதற்றல் என்று கொக்கரிக்கிறார். <br /><br /><strong>2.</strong> ஐஸ். இந்தப் படத்தின் முழுமுதல் attraction ஐஸ்தான் என்று ஆரம்பத்திலேயே முடிவெடுத்திருப்பார்கள் போலும். அந்தக் காரணத்தினாலேயே 'சப்'பென்றிருக்கிறது. ஐஸ் பேரழகி - யார் இல்லையென்றார்கள்? அங்குதான் பிரச்சனையே. எலிசபெத் பென்னெட் அழகான பெண். என்றாலும், அவள் அழகினால் முதலில் கவரப்படும் கதாநாயகன், இறுதியில் அவளது நல்ல குணத்திற்காகவும், அறிவுகூர்மையையும் அவளைத் திருமணம் செய்துகொள்கிறான் என்பதுதான் கதையின் ஆதாரக் கரு. அங்கேயே கோட்டை கைநழுவிப்போய்விட்டது. ஐரோப்பிய நவ நாகரீக மாடலைக் கொண்டு வந்து அம்ரிதஸரில் இறக்கிவிட்டால் எப்படி? ஐஸ்ஸின் அழகு கண்ணைக் கவர்ந்தாலும், 'இவள் நியூ யார்க், மிலன், பாரீஸ்' இன்னபிற நகரங்களில் இருக்கவேண்டியவள்,' என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. அம்ரித்ஸரில் வளரும் சற்றே அழகான, புத்திகூர்மையுள்ள இந்தியப் பெண் என்ற உணர்வு ஏற்படவில்லை. லலிதா பக்ஷி கண்ணுக்குத் தெரியவில்லை; ஐஸ்வர்யா ராயின் நிழல் அவள் மீது விழுந்துவிடுகிறது. <br /><br />சில வருடங்களுக்கு முன்னால், BBC யின் தயாரிப்பில், 'P&P' ஐ எடுத்தார்கள் - அதில் எலிசபெத் பென்னெட்டின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஜென்னி·பர் எல், பிரமாதப்படுத்தியிருந்தார். வார்த்தை வார்த்தையாக scriptஐ ரசித்து, உணர்ந்து நடித்திருந்தார் என்பது அவரது ஒவ்வொரு அசைவிலும் தெரியும். கதைப்படி எலிசபெத்துக்கேயுரிய நகைச்சுவையுணர்வும், தன்னைச் சுற்றி நடக்கும் அபத்தங்களில் அவருக்கிருக்கும் ரசனையும் அவரது கண்களிலேயே வெளிப்பட்டுவிடும். ஜேன் ஆஸ்டென் இப்பொழுது இருந்திருந்தால், தான் எழுதிய எலிசபெத் இவர்தான் என்று சான்றிதழ் வழங்கியிருப்பார். ஐஸ் இந்த நாசூக்கைப் படத்தில் கொண்டு வரவில்லை. ஆத்திரமாக நிறைய வசனங்கள் பேசுகிறார்; அவ்வப்போது பரிதாபப் பார்வை பார்க்கிறார். மாற்றி மாற்றி காதல் வயப்படுகிறார் (எலிசபெத் கதையின் கடைசிக் கட்டம் வரையில் காதலில் விழுவதேயில்லை.). ப்ச். Disappointing.<br /><br /><strong>3.</strong> நம் ஊர் மசாலாவை நன்றாகவே கலந்திருக்கிறார்கள் :-). மூலக்கதையில் ஏகப்பட்ட நடனங்கள் உண்டு - சொல்லப்போனால், கதையின் முக்கியக் கட்டங்கள் பல நடனங்களின் போதுதான் நடக்கின்றன. Chada ஏன் அம்ரித்ஸரைத் தேர்ந்தெடுத்தார் என்பது நன்கு புரிகிறது - அவர்களும் மூச்சுக்கு முன்னூறு முறை ஆடுகிறார்கள் :-) <br /><br />பிரச்சனை பாடல்காட்சிகளில்தான். மகா நீஈஈஈஈஈ...ளமான பாடல்கள். கதையின் போக்கில் 'டம்'மென்று அரிசிமூட்டையைப்போல் உட்கார்ந்துவிடுகின்றன. மொத்தமாகத் தூக்கியிருக்கலாம் - அப்படிச் செய்திருந்தால், இந்தியத்தனம் இருந்திருக்காது. :-)<br /><br /><strong>4.</strong> ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தைச் சுற்றியே கதை நகரும்போது, சமயத்தில் அந்த முக்கியக் கதாபாத்திரம் கைவிட்டுவிடும்; அனால் side-characters பின்னியெடுத்திருப்பார்கள். கோலி-ஸாப் இந்த வகை. எலிசபெத்தைத் திருமணம் செய்து கொள்ல விரும்பும், ஏதோ-ஒரு-உறவுக் கதாபாத்திரம். அலட்டலும் அடக்கமும், ஒருவித அறிவிலித்தனமும் கலந்தடிக்கப்பட்டிருக்கும் அற்புதமான ஒரு கதாபாத்திரம். தன்னைப் பற்றி மிக உயர்வாகவும், மற்றவர்களை மட்டமாகவும் நினைக்கும் - அதே சமயம், இதற்கு நேர்மாறாகப் பேசும் கதாபாத்திரம். எழுத்தாளராக ஜேன் ஆஸ்டெனின் திறனை வெளிப்படுத்த இந்த ஒரு பாத்திரப்படைப்பே போதும். அவர் எலிசபெத்தை திருமணம் செய்துகொள்ள அடுக்கும் 'காரணங்கள்'...[படிக்க <a href="http://www.pemberley.com/janeinfo/ppv1n19.html">இங்கே</a> செல்லவும்).:-)))))<br /><br />இதே போலத்தான் பல்ராஜின் (ஜேனின் காதலன்) சகோதரியாக வரும் கேரன் (இந்திரா வர்மா). ஒரே பார்வையில் ஆயிரம் வசனம் பேசுகிறார். கடைந்தெடுத்த திமிர் என்றால் இவரைச் சொல்லலாம். கலக்கியிருக்கிறார். <br /><br /><strong>5</strong>. இறுதியில் எலிசபெத்தின் கரம் பற்றப்போகும் மெக-பணக்காரராக வில்லியம் டார்சி - பொருத்தமான தேர்வு. முதலில் ஏளனம், பிறகு குழப்பம், கடைசியில் காதல் என்று நன்றாகச் செய்திருக்கிறார். கடைசிக்காட்சியில் அவரை அம்ரிதஸரில் டிரம்ஸ் வாசிக்கவிட்டு ஐஸ¤டன் ஒன்று சேர்த்திருக்கிறார்கள். பாவம், அவருக்கு இது பொறுந்தவில்லை போலும்; முகம் காட்டிக்கொடுத்துவிடுகிறது.:-). <br /><br /><strong>6</strong>. ஒரிஜினல் 'P&P'யின் மிகப் பெரிய பலம் - பென்னெட் குடும்ப சித்தரிப்புதான். அன்றைய இங்கிலாந்தின் சமூக அடுக்கில் அவர்கள் நடுவில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பெண்களுக்குப் படிப்பென்பது பெயரளவில்தான் - பணமும் அதிகம் இல்லை. திருமணம் ஒன்றுதான் அவர்களை விடுவிக்கும் ஒரே சாதனம். இப்படியொரு சூழலில், எலிழபெத்தின் குணத்தால் கவரப்பட்டு, அந்த நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவன் (முதலில் நிலவும் சண்டை சச்சரவுகளும், இருவர் பார்வையிலும் உள்ள அபிப்ராய பேதங்களும் அகன்ற பிறகு) அவளைக் கரம்பிடிக்கிறான். 'P&P' யின் இமாலய வெற்றிக்குக் கதையின் இந்த முடிவு ஒரு பெரிய காரணம். 'B&P' யிலும் இதே முடிவுதான் - ஆனால், அதே சந்தோஷம் இல்லை. இறுதில் லலிதாவும் டார்ஸியும் இணையும்போது, 'சரி, கல்யாணம் ஆயாச்சு,' என்ற மெத்தனம் வந்து சேர்கிறது. மூலக்கதையில், எத்தனை ஆயிரம் முறை படித்தாலும், கடைசியில் எலிசபெத்தின் கதி என்ன என்ற வேகம் வந்து பற்றிக்கொள்ளும்; 'இப்படித்தான் கதை முடியும்,' என்று தெரிந்தாலும்,பரபரப்பில் கொஞ்சமும் குறை இருக்காது - BBCயின் படைப்பிலும் அப்படியே. இதில்...ம்ஹ¤ம். <br /><br />'Bride & Prejudice' - ஒரு பெரிய மசாலாத் திருமணம் :-)</font>Pavithra Srinivasanhttp://www.blogger.com/profile/13941762090080803817noreply@blogger.com11