Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, June 26, 2004

எல்லோரும் இந்நாட்டுக் (கவி)மன்னர்!

வலைப்பூக்கள் அவ்வளவாகப் பூக்காத காலம் அது. இணைய இதழ்களில் அவ்வளவு பரிச்சயம் இல்லை. இணையம் என்னும் மாய உலகமே அப்போதுதான் புரிபடத் தொடங்கியிருந்தது. எழுதும் வாய்ப்பு தரும் இணையப் பக்கங்களாக தேடியபோது அகப்பட்டதுதான்...இது.

'பருத்தி புடவையாகக் காய்த்தது' என்று நினைத்து, உள்ளே நுழைந்து பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். கவிதைகளாகக் கொட்டிக்கிடந்தன. [அவற்றில் பலவற்றுக்கு எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. "...Why is it when I look at you, you look with unknowing eyes
Day dreaming circles of uncertainty (JUJU MOMA, JUJU MOMA, JU-JU MOMA)..." இப்படிச் செல்லும் ஒரு கவிதை ஆயிரம் டாலர் பரிசு வென்றதாம். 'என்றாவது ஒரு நாள் புரியும்' என்ற தன்னம்பிக்கையுடன் நகர்ந்துவிட்டேன்.]. எல்லா கவிதையும் இப்படி இருக்க வாய்ப்ப்பில்லை என்று ஒரு சின்ன நப்பாசையும் இருந்தது. ஒரு கவிதை எழுதிப் போடலாம் என்று என் பங்குக்கு ஒன்று அனுப்பி வைத்தேன்.

வாரக்கணக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்து, 'இனி பதில் வரப்போவதில்லை,' என்று நம்பிக்கையைக் கைவிட்ட பிறகு, திடீரென்று ஒரு நாள், இன்ப அதிர்ச்சி ஒரு நீள, வெள்ளை உரையில் வந்து சேர்ந்தது. [அந்தக் 'கவ'ரின் நேர்த்தியே யாரையும் கவர்ந்துவிடும்.].இரண்டு மாதம் கழித்துச் சாவகாசமாக வந்த கடிதத்தில், நான் எழுதிய கவிதையைப் பாராட்டி, 'நாந்தான் அடுத்த Shakespeare' ரேஞ்சுக்குக் வரை முறையில்லாமல் புகழ்ந்து தள்ளியிருந்தார்கள். [அந்த சில நிமிடங்கள் தான், சொர்க்கம்.]. இரண்டு மூன்று நாட்கள் கடிதத்தை கைப்பைக்குள் வைத்துக்கொண்டே எல்லா இடத்துக்கும் சென்றேன். அது கிழிந்து நார் நாராகப் போகும் அபாயம் வந்த பிறகு, பிரியா விடை கொடுத்து பீரோவில் பூட்டி வைத்தேன். [ஆ. எத்தனை 'ப' !]

அப்போதே சந்தேகம் சிறிய துகளாக மனதிற்குள் மாட்டிக்கொண்டிருந்திருக்க வேண்டும். அதைக் கண்டுகொள்ளும் உத்தேசம் எனக்கில்லை. அப்போது பார்த்து, 'நலம்விரும்பி' நண்பர் ஒருவர், 'ரொம்ப சந்தோஷப்பட்டுவிடாதே,' என்று ஒரு பெரிய கடிதம் அனுப்பி வைத்தார். [இந்த சமயத்தில் கடிதம் எழுதுவதற்காகவே ஒரு நண்பரோ, நண்பியோ அகப்படுவார்கள். 'எல்லாம் உன் நல்லதுக்குதான்' என்று சர்க்கரையாகப் பேசுவார்கள்.]. எனக்கும் சந்தேகம் வலுத்தது [விசித்து விசித்து அழும் பழங்காலக் கதாநாயகி: "...வாழ்க்கை என்பது ஒரு கண்ணாடிப் பாத்திரம்/ மண் பாத்திரம்/ஏதோவொரு பாத்திரம்/புடவை/தகர டப்பா மாதிரி. ஒரு முறை விரிசல்/கிழிசல்/கீறல் விழுந்துவிட்டால். ஒன்றும் செய்ய முடியாது..."].

இப்படி ஒரு சந்தேகம் விழுந்த பிறகு வேலை ஓடுமா? என் கவிதைக் கனவுகள் என்னாவது? கூகிளில் ஒளிந்து ஒளிந்து தேடிய போது, தகவல்கள் வந்து குவிந்தன.

இன்னும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. அப்போது பிறந்ததுதான் இந்தக் கவிதை.

Dark Smell

Bethany, if you are there, I agree,
The lark of the birds scream,
Night sky, virgin lands, dream,
Dumb you, me, all the smell world.
We, and us, them and you,
range all over, cops in the land,
dull sufferings, do you?
I do. All the days.
What to say, will you?
Scream, and fall into the cream of puddings,
Likewise, they are, unknowing,
what they do unto me.
Till death do they reform,
Country, crown and king,
Do they, do they?
No, no, they don't.



இந்த அற்புதப் படைப்புக்கு சரியான பொழிப்புரை தருபவர்களுக்கு ஒரு ஜிமெயில் இன்வைட் இலவசம். ['முடியாது' என்று வீறாப்பாய் சென்றுவிட்டால், ஹாட்மெயில் யாஹ¤ ரீடி·ப், இத்யாதியுடன் திருப்தியடையாமல் ஜிமெயிலுக்காகக் காத்திருந்து துன்வுறுவீராக.].

இந்தக் கவிதையைத்தான் அந்தத் தளத்திற்கு அனுப்பினேன். பதில் என்னவாக இருந்ததென்று நினைக்கிறீர்கள்?


|

0 Comments:

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home